<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658</id><updated>2012-02-16T00:49:51.179-08:00</updated><title type='text'>தமிழினி</title><subtitle type='html'>தமிழ் மொழி இனம் இதழியல் மனிதஉரிமைகள்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>133</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-5691508064072178822</id><published>2012-02-08T07:01:00.000-08:00</published><updated>2012-02-08T07:04:13.446-08:00</updated><title type='text'>புதுவை இரத்தின துரை -வே.பாலகுமாரன் இன்னும் மறையவில்லை</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-nbw7AJxvrLM/TzKO34dS3II/AAAAAAAAAbc/NNE0jSXB5dc/s1600/ba_son-300x230.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 230px;" src="http://2.bp.blogspot.com/-nbw7AJxvrLM/TzKO34dS3II/AAAAAAAAAbc/NNE0jSXB5dc/s400/ba_son-300x230.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5706780768531045506" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;h1&gt;புதுவை இரத்தின துரை -வே.பாலகுமாரன்&lt;br /&gt;&lt;/h1&gt;&lt;h1&gt;இன்னும் மறையவில்லை&lt;/h1&gt;  &lt;div class="post-date-single"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;    &lt;p&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-2quVk1Od2eY/TzGP6BLFrpI/AAAAAAAAAX8/x6VEtgpEsNE/s1600/2f39880a8e37087ef5ffff1130820082.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5706500429765258898" style="float: left; margin: 0 10px 10px 0; cursor: hand; width: 400px; height: 264px;" src="http://1.bp.blogspot.com/-2quVk1Od2eY/TzGP6BLFrpI/AAAAAAAAAX8/x6VEtgpEsNE/s400/2f39880a8e37087ef5ffff1130820082.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களான வே.பாலகுமாரன் மற்றும் யோ.யோகி  ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து  வைக்கப்பட்டுள்ளதாக ‘சிறிலங்கா கார்டியன்‘ தகவல் வெளியிட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;இவர்கள் இருவரும் போர்முனையில் கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா  அமைச்சர் டியு.குணசேகர முன்னர் தகவல் வெளியிட்டிருந்த நிலையில்,  நம்பத்தகுந்த – சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இவர்கள்  தடுப்பில் இருப்பதாக கூறியுள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;தெற்கிலுள்ள இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில்- இறுக்கமான இராணுவப்  பாதுகாப்பின் கீழ்- விடுதலைப் புலிகளின் ஏனைய மூத்த தலைவர்களுடன் இவர்கள்  இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பாலகுமாரன், யோகி, லோறன்ஸ் திலகர்,  பாப்பா, புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட சுமார் 50 விடுதலைப் புலிகள்  உடற்சோதனைகளின் பின்னர் பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதைக் கண்டதாக  நேரில் கண்டவர்கள் சாட்சியம் அளித்திருந்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;இவர்களின் நிலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் எந்தத் தகவலையும் வழங்க மறுத்து வருகிறது.&lt;/p&gt; &lt;p&gt;இந்தநிலையிலேயே பாலகுமாரன், யோகி ஆகியோர் போர் முனையில் கொல்லப்பட்டு  விட்டதாக சிறிலங்கா அமைச்சர் டியு.குணசேகர ஒரு ஆண்டுக்கு முன்னர்  கூறியிருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;எனினும் பாலகுமாரன், யோகி ஆகியோர் கடுமையான செயல்முறைகளின் மூலம்  விசாரிக்கப்பட்ட பின்னர் நன்றாக கவனிக்கப்படுவதாக சிறிலங்கா இராணுவ  வட்டாரங்கள் கூறியுள்ளன.&lt;/p&gt; &lt;p&gt;எனினும் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனரா என்பது பற்றியோ, அவர்கள்  எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றியோ தகவல் வெளியிட அந்த  வட்டாரங்கள் மறுத்துள்ளன.&lt;/p&gt; &lt;p&gt;பாலகுமாரன் பற்றி `டெக்கன் குரோனிக்கல்` செய்தியாளர், சிறிலங்கா  பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக  பதிலளிக்காமல் தவிர்த்திருந்த நிலையில் தான் `சிறிலங்கா` கார்டியன் இந்தத்  தகவலை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;கவிஞர் புதுவை இரத்தினதுரை மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய  நிலையிலும், லோறன்ஸ் திலகர் மனக்குழப்பத்தினால் தொடர் சிகிச்சை பெறவேண்டிய  நிலையிலும் இருப்பதாகவும் `சிறிலங்கா கார்டியன்` தகவல் வெளியிட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;நன்றி-&lt;/p&gt; &lt;p&gt;தாய்தமிழ் இணையம்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4722080712196357658-5691508064072178822?l=thamizhini76.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/5691508064072178822/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4722080712196357658&amp;postID=5691508064072178822' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/5691508064072178822'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/5691508064072178822'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/2012/02/blog-post_08.html' title='புதுவை இரத்தின துரை -வே.பாலகுமாரன் இன்னும் மறையவில்லை'/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-nbw7AJxvrLM/TzKO34dS3II/AAAAAAAAAbc/NNE0jSXB5dc/s72-c/ba_son-300x230.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-2531176482029877250</id><published>2012-02-02T23:15:00.000-08:00</published><updated>2012-02-02T23:19:19.261-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-HesBnS37YsI/TyuKU6Bp7RI/AAAAAAAAAbQ/02kejhXw6_I/s1600/koodankulam_2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 273px;" src="http://2.bp.blogspot.com/-HesBnS37YsI/TyuKU6Bp7RI/AAAAAAAAAbQ/02kejhXw6_I/s400/koodankulam_2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5704805444773080338" border="0"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-g8ruyyXuMP0/TyuKOMN9tNI/AAAAAAAAAbE/r_ZdFu5RKSM/s1600/koodankulam_1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 273px;" src="http://3.bp.blogspot.com/-g8ruyyXuMP0/TyuKOMN9tNI/AAAAAAAAAbE/r_ZdFu5RKSM/s400/koodankulam_1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5704805329397462226" border="0"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="513"&gt;&lt;tbody&gt; &lt;tr&gt; &lt;td class="style52" align="left" valign="top"&gt;&lt;p class="style150" align="left"&gt;&lt;strong&gt;&lt;font class="style1 sectiontableheader style47 style153"&gt;சு.ப. உதயகுமார் அவர்களின்  நேர்காணல்&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;font class="style159"&gt; &lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குமுதம்  தீராநதி ஜனவரி மாத இதழில் வெளிவந்த சு.ப. உதயகுமார் அவர்களின்  நேர்காணல்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" width="513"&gt; &lt;tbody&gt; &lt;tr&gt; &lt;td bgcolor="#fce3cf"&gt;&lt;strong&gt;சந்திப்பு: லட்சுமி மணிவண்ணன்,  கிருஷ்ணகோபால்.&lt;/strong&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p class="style166"&gt;அணு சக்தியும் அணு ஆயுதங்களும் வேறு வேறு அல்ல&lt;/p&gt; &lt;p class="style166"&gt;இளமைப் பருவமே போராட்டக் களத்தில்தான் அமைந்தது.&lt;/p&gt; &lt;p&gt;1988 லிருந்து துவங்கப்பட்ட கூடங்குளம் இரட்டை அணுவுலைகளுக்கெதிரான போராட்டம்  பெரிய மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. அணுசக்தித் துறையின் போராட்டத்துக்கு  எதிரான பிரச்சாரங்கள், மக்களை சாதி ரீதியில் பிரித்து போராட்டத்தை வலுவிழக்கச்  செய்யும் அரசாங்க உத்திகள் இவற்றையெல்லாம் தாண்டி மக்கள் இப்போராட்டத்தை தீவிரப்  படுத்தியுள்ளனர். அணுக்கொள்கையில் அரசாங்கத்தின் பிடிவாதமும், இந்திய பிரதமர் ரஷ்யா  சென்று அணு வுலைகள் தொடர்பாக செய்த அறிவிப்பும் மேலும் இப்போராட்டத்தை  வலுப்படுத்தியிருக்கிறது. இந்திய அளவில் பெரிய மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ள  இப்போராட்டத்தை ஒருங்கிணைந்து வருபவர் சுப. உதயகுமார். தொடர்ந்து அணுசக்தியும், அணு  ஆயுதங்களுக்கும் எதிராக குரல் கொடுத்துவரும் சுப. உதயகுமார் காந்திய வழியில் போராடி  வருபவர். காந்தியத்தின்பால் நம்பிக்கை கொண்டவர். நாகர்கோவிலுள்ள இசங்கன்விளை  என்னும் ஊரைச் சார்ந்த உதயகுமாரை குமுதம் தீராநதீ நேர்காணலுக்காக, 02.12.2011 அன்று  இடிந்தகரையில் சந்தித்துப் பதிவு செய்த உரையாடல் இது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;font class="style167"&gt;தீராநதி: உங்களுடைய இளம்பிராயம் பற்றிச்  சொல்லுங்கள்?&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உதயகுமார்:&lt;/strong&gt; நான் பிறந்தது  நாகர்கோவில்ல கோட்டார் பகுதியில் உளள இசங்கன்விளையில். அப்பா திகவிலும் பின்  தி.மு.க. விலும் தீவிரமாக தீவிரமாக இருந்தவர். அப்பாவின் பெயர் பராமார்த்த லிங்கம்.  அப்பா எங்க ஊர் காங்கிரஸ் கோட்டையாக இருந்தது. காங்கிரஸ் கோட்டையில் அப்பா  பெரியாரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் பேசக்கூடியவர். பொதுக்கூட்டங்கள்  நடத்துவாங்க. பெரும்பாலான கூட்டங்கள் அப்போது வன்முறையில்தான் முடியும். அப்பாவை  அடிக்க வருவாங்க. அப்போ நானும் தங்கச்சிகளும் கூட நின்று பாதுகாப்போம். அப்படி  இளமைப் பருவமே போராட்டக் களத்தில்தான் அமைந்தது.&lt;/p&gt; &lt;p&gt;அம்மா கல்லுப்பட்டியில் காந்திய ஆஸ்ரமத்தில் படிச்சாங்க. அவங்களுக்குச் சொந்த  ஊர் நாகர்கோவில், ராமன்புதூர் காந்தியத்தில் ஆழமான பிடிப்பு அம்மாவுக்கு உண்டு.  எஸ்பொன்மணி அம்மாவின் பெயர். அம்மா ஒரு காமராஜர் பக்தை. காங்கிரஸீக்குத்தான்  ஓட்டுப்போடுவாங்க ஆதரிப்பாங்க நேர் எதிர்நிலையில் அப்பா திராவிட சிந்தனை கொண்டவர்.  ஆனால் வீட்டுக்குள்ள எல்லாம் ஐனநாயக முறைப்படித்தான் நடக்கும். அப்பா யாருக்கும்  ஓட்டுப்போடச் சொல்ல மாட்டாங்க. அம்மாவும் சொல்ல மாட்டாங்க. வீட்டுக்கு முன்பு பெயிர  காமராஜர் படம் இருக்கும். அப்பா பெரியார், அண்ணா படங்களை வீட்டில் வைத்திருப்பாங்க.  எனினும் ஒரு ஐனநாயகச் சூழலில் தான் நாங்க எல்லோரும் வளர்ந்தோம். அம்மா, அப்பா  இரண்டுபேரும் பொது வாழ்க்கையில் ரொம்ப ஆர்வமாக இருந்தாங்க. அம்மா சமூக நலத்துறையில்  பணிபுரிந்ததால் இந்தக் கணக்கு வழக்கு எழுதுவதற்காக பால்வாடி மற்ற பிற  இடங்களிலிருந்து கிறிஸ்துவப் பெண்கள் வீட்டுக்கு வருவார்கள். வீட்டில் அவர்கள்  பிரார்த்தனை செய்வாங்க. என்னையும் செய்யச் சொல்வாங்க அதன் மூலமாக சிறு வயதிலிருந்தே  கிறிஸ்துவ மதத்தின் மீது மரியாதை இருந்தது. ஆனால் நடைமுறையில் பழக்கவழக்கத்தில்  நாங்கள் இந்துவாக இருந்தோம். சுடலை மாடசாமி கோயிலிருந்து இசக்கியம்மன் கோயில் வரை  ஒரு கோயிலையும் அம்மா விடமாட்டாங்க. எங்கள் வீட்டுக்கு அருகிலேயே சுடலைமாடன் கோயில,  முத்தாராம்மன் கோயில் எல்லாம் உண்டு. கொடைவிழாக்களுக்கு அந்தக் கோயில்களுக்கு  வரிகொடுத்து வந்தோம். அப்பா தி.கங்கறதுனால அவருக்கு இவற்றில் பிடிப்பில்லை.  இவற்றிலிருந்து அவர் விலகியிருந்தார். ஆனாலும் அம்மாவோடும் எங்களோடும் அவர் கூட  வருவார். அப்பா விபூதி, சந்தனம் எதுவும் பூசமாட்டாங்க. பூஜையில்  பங்கெடுக்கமாட்டாங்க. &lt;/p&gt; &lt;table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="200"&gt; &lt;tbody&gt; &lt;tr&gt; &lt;td align="left" valign="top"&gt;&lt;img src="http://www.blogger.com/images/koodankulam_1.jpg" height="327" width="479"&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt; &lt;p&gt;&lt;font class="style167"&gt;தீராநதி: முறைசார்ந்த கல்வி, முறைசாராத கல்வி பற்றிக்  கூறுங்கள்?&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உதயகுமார்:&lt;/strong&gt; எதிரும் புதிருமாக  இருந்தாலும் சேர்ந்து வாழணுங்கற நிலைப்பாடும் எங்களுக்கு காந்தியத்தின் மீதான  நம்பிக்கையும் எல்லாமே அம்மாவிடமிருந்து வந்ததுதான். துவக்க கல்விக்குப்பின்  நாகர்கோவில் டி.விடி. மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். தமிழ் மீடியம் படிச்சாலும்  எனக்கு ஆங்கிலத்தில் ஈடுபாடு உண்டு. சுவாமிதாஸ்னு ஆங்கில ஆசிரியர் இருந்தார்.  அவரிடம் ஆங்கில டியூஷன் போவேன். கல்லூரிப் படிப்பு பயோனியர் குமாரசுவாமி கல்லூரி  பொறியியல் படிக்க வேண்டுமென அப்பா ரொம்ப விரும்பினாங்க. எனக்கு கடுகளவும் அதில்  விருப்பமில்லை. எபனேசர் பால்ராஜ்ன்னு ஒரு பேராசிரியர் இருந்தார். குமாரசுவாமி  கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியர். அவங்க இன்ஜினீயரிங் உனக்கு ஒத்து வராதுன்னு  சொன்னாங்க. அது சரிதான். அவர்தான் எனக்கு குறிக்கோள் ஊட்டினார். நீ சமூக அறிவியல்  படின்னு சொல்வாங்க. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர  முயற்சி செய்யும் போது டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் எத்தியோப்பியால பள்ளி ஆசிரியர்  வேலைக்கு விளம்பரம் வந்தது. வேலைக்குப் போனேன். அப்போ கம்யூனிஸ சித்தாந்தத்தில  ஈடுபாடு இருந்தது. வீட்டுல அப்பா நிறைய புத்தகங்கள் வச்சிருப்பார். லெனிபைப் பற்றி,  மார்க்ஸ் பற்றி, மூலதனம் பற்றி அப்பாகிட்ட அது தொடர்பா கேள்விகள் கேட்டிருக்கிறேன்.  அப்பாவும் தி.க. பெரியாரிய, கம்யூனிஸ சிந்தனை உள்ளவங்கங்கறதுனால நிறைய  விவாதித்திருக்கிறோம்.&lt;/p&gt; &lt;p&gt;எத்தியோப்பியாவுக்குப் போன பின்னர் தான் கம்யூனிஸ்ட் அரசாங்கம் எப்படி  அமல்படுத்தப்படுகிறது என்பதைப் படித்தேன், பார்த்தேன். மெங்கிஸ்ட் ஹெலமெரியம்  என்கிற ஒருத்தர்தான் எத்தியோப்பியால ஆட்சியாளரா இருந்தார். ராணுவ ஆட்சியாளர்  படுபயங்கரமான இரும்புக்கரத்தோட அந்த நாட்டை ஆட்சி செய்தார். தனி மனித சுதந்திரம்  அங்கு சுத்தமாகக் கிடையாது. ரொம்ப இறுக்கமாக ஒருங்கிணைந்து மக்கள் மூச்சுவிடமுடியாத  அளவுக்கு நெருக்கி வச்சிருந்தாங்க. அப்ப சோவியத் யூனியனின் நெருங்கிய நாடாக  எத்தியோப்பியா இருந்தது. கம்யூனிஸம் அமல் ஆனா இப்படித்தான் இருக்கும் என்பதை  அங்குதான் பார்த்தேன். அப்ப சோவியத்தில் பிரஷ்நேவ் ஆட்சியாளர். இது எண்பத்தொன்று  எண்பத்தேழுகளிலிருந்த நிலை. ஹெலமெரியம் எல்லா சோசலிஸ்ட் நாடுகளுக்கும் போவாரு. அந்த  நாட்டுத் தலைவர்கள் இங்க வருவாங்க. அந்த நாடுகளிலிருந்து நிறைய உதவிகள்  கொடுப்பாங்க. இவையெல்லாம் எனக்கு கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள் பற்றிய கல்வியாக  இருந்தது. கம்யூனிஸ அரசாங்கம் என்பது நாம் நினைக்கிற மாதிரி சுதந்திரமான அதிகார  மையமாக இருக்காது. ஒரு குழு பிறரை ஒடுக்கக்கூடிய மற்றொரு அதியார  மையமாகத்தானிருக்கும் அப்படின்னு தெரிந்தது. 81, 87 வரையில் அங்கிருந்தேன். அங்க  ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் இருந்தபோது யுனெஸ்கோ கிளப் என்ற ஒன்றை  ஆரம்பித்தேன். அகில உலக புரிதலைக் கொண்டு செல்வதற்காக அதுவொரு உலகளாவிய இயக்கம்.  அரசாங்கத்துக்கு இந்த இயக்கம் தர்ம சங்கடமாக இருந்தது. நடத்தாதன்னு சொல்ல முடியல.  யுனெஸ்கோ கூரியர் இந்த இயக்கம் நடத்திய இதழ்தான். உலகம் முழுவதும் சமாதானம்  சுற்றுப்புறச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகளை அது உலகம்  முழுக்கக் கொண்டு சென்றது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;font class="style167"&gt;தீராநதி: இளமையிலேயே எப்படி இயக்கத்திற்கான தூண்டுதல்  ஏற்பட்டது?&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உதயகுமார்: &lt;/strong&gt;கல்லூரி வாழ்க்கையின்போது  மாணவர் அமைப்பை வைத்திருந்தோம். சுந்தர ராமசாமி நடத்திய காகங்கள் கூட்டங்களுக்குச்  சென்று வந்தோம். ஆனால் அவங்க பேசியது எதையுமே எங்களுக்குப் புரிஞ்சுக்க முடியல.  அவங்க அவ்வளவு உயர் தமிழிலி பேசினாங்க நாங்க எறும்புகள்னு ஒரு அமைப்பை  ஆரம்பித்தோம். நானும் அகம்மது ஹமீர் ஒரு இஸ்லாமிய நண்பர், இளங்கடை ஜெயக்குமார்  ஆகியோர் இணைந்து வாரந்தோறும் கூட்டம் போடுவோம். இலக்கியக் கூட்டங்கள்தான். அப்போது  எங்க பேரைக் கூட எறும்புகள்னுதான் போடுவோம். எறும்புகள் உதயகுமார், எறும்புகள்  ஜெயக்குமார் இப்படி காகங்களில் எங்களைச் சேர்க்க முடியல. எங்களால சேர்ந்துக்க  முடியல என்பது உண்மை.&lt;/p&gt; &lt;p&gt;பிறகு இயக்கம் ஒன்றை நாங்க ஆரம்பித்தோம். அப்ப இந்துமகா சமுத்திரத்தில்  அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் கப்பற்படைகள் எல்லாம் நிலைகொண்டிருந்தன. இப்படியிருந்தா  நம்முடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்னு அந்நியப் படைகள் வேளியேற  வேண்டுமென்று குரல் கொடுத்தோம். அப்பகுதியில் இவங்களுக்குள்ள ஒரு அணு ஆயுத யுத்தம்  வந்தால் நாமெல்லாம் அழிந்து போவோம். இந்து மகா சமுத்திரத்தில் அந்நிய கப்பற்படைகள்  நிற்கக்கூhது அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று இவ்வமைப்பில் தீர்மானம்  போட்டோம். வித்தியசமான ஒரு குழு எங்கள் குழு உலகளாவிய விஷயங்களில் ஆர்வம்  காட்டினோம். அது முக்கியமான காலகட்டமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில்தான்  முதன்முதலாக நாங்கள் அணுசக்தி பற்றிப் பேச ஆரம்பித்தோம். அணுசக்தியும் அணு  ஆயுதங்களும் ஒன்றோடொன்று உறவு கொண்டவை என்பதை இணைத்துப் பேசினோம்.&lt;/p&gt; &lt;p class="style167"&gt;தீராநதி: உங்களுடைய அரசியல் சார்பு நிலை கட்சிகள் சார்ந்து  இருந்ததா?&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;உதயகுமார்:&lt;/strong&gt; எதுவும் கிடையாது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  நடத்தும் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். உறுப்பினரெல்லாம் இல்லை. ஈடுபாடு  இருந்தது. யுனெஸ்கோ அமைப்பை எத்தியோப்பியாவில் ஆரம்பித்ததை அந்த அரசாங்கம்  விரும்பவில்லை. அரசியல் கல்வியை அங்க பாடத்திட்டத்திலேயே சொல்லிக் கொடுப்பாங்க.  அவற்றில் மேற்கத்திய நாடுகளில் எதுவும் கிடையாதுங்கிற மாதிரி பாடங்கள் இருக்கும்.  அரசியல் கல்வியை நானும் அந்த மாணவர்களுக்குப் பாடம் நடத்தியிருக்கிறேன்.&lt;/p&gt; &lt;p&gt;அங்கே என்னுடைய சம்பளத்தையே யுனெஸ்கோ தான் கொடுத்தது. யுனெஸ்கோ கிளப்பில்  மாணவர்களைத்தான் தலைவராய் நியமிப்போம். செயலாளர், பொருளாளர் எல்லாம் மாணவர்கள்தான்.  ஒவ்வொரு வாரமும் கூட்டங்கள் நடத்துவோம். பிற தூதரகங்களுக்குக் கடிதம் எழுதி  தகவல்கள் வாங்கி அதனை வெளியிடுவோம். தொடர்ந்து மாணவர் இதழ் ஒன்றை கையெழுத்துப்  பிரதியாகக் கொண்டு வந்தோம்.&lt;/p&gt; &lt;p&gt;இந்த நடவடிக்கைகள் எத்தியோப்பிய அரசுக்கு நெருடலை ஏற்படுத்தியது. அரசாங்கம்  எங்களைக் கண்காணிக்க மாணவ ஒற்றர்களை நியமித்திருந்தது. அவர்கள் மூலமாக  அரசாங்கத்திற்கு எதிரா பேசுறோம் என்கிற செய்தி பரவி, அரசாங்கம் சந்தேகப்பட்டது.  மீண்டும் அடுத்த ஒப்பந்தத்தில் மீண்டும் எத்தியோப்பியாவில் ஆசிரியர்  வேலையிலிருந்தால் ஜெயிலுக்குப் போக வேண்டிரவம் என்கிற நிலைமை. அதனால் ஒப்பந்தத்தைப்  புதுப்பிக்காமல் திரும்பி வந்துவிட்டேன்.&lt;/p&gt; &lt;p&gt;தொடர்ந்து யுனிவர்சிட்டி ஆஃப் நோட்டர் டேம்ல சமாதானத்திற்கான ஆய்வு பற்றிப்  படிப்பதற்கு உதவித் தொகை கிடைத்தது. என்னைப் பரிந்துரை செய்தது.  ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு பெண்மணி. அவர்களை 1986-ல் இங்கிலாந்தில் ஒரு  கருத்தரங்கில் கட்டுரை படிக்கும் போது சந்தித்தேன். உன்னைப் பரிந்துரை  செய்திருக்கிறேன். அட்மிஷன் கிடைத்து உனக்கு விருப்பமும் இருந்தால் போ என  எழுதியிருந்தார்கள். நானும் அந்தக் காலகட்டத்தில் குழப்பத்திலிருந்தேன். தங்கை  ஒருவரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. பெரிய தங்கைக்குத் திருமணத்தில் சில  பிரச்னைகள் இருந்தன. அப்போ எனக்கு ஊரில் இவற்றைத் தீர்க்க வேண்டிய சூழ்நிலை. 89ன்  பிற்பகுதியில் பிரச்சினைகள் ஓரளவு சரியான பின் ஆஸ்திரேலிய அழைப்பை ஏற்று அங்க போயி  எம்ஏ பண்ணினேன். பயணச் செலவு, படிப்புச் செலவு உணவுச் செலவு, தங்கும் செலவு எல்லாம்  அவங்க கொடுத்தாங்க. அதோடு கைச் செலவுக்கு 100 டாலர் கொடுத்தாங்க. பதினைந்து  நாடுகளிலுள்ள பதிமூன்று ஆண்களும் பெண்களும் ஒரே கட்டடத்தில் தனித்தனியறையில்  தங்கியிருந்து படித்தோம். அந்த இடத்தின் பெயரே பீஸ் அவுஸ். அப்போ என்னுடைய  பேராசிரியர் ஒருவர் யுனிவர்சிட்டி அவாய்ல வேலை பெற்றுத் தந்தார். ஒரு  பேராசிரியருக்கு ஆய்வு உதவியாளராக வேலை செய்தேன். பின்னர், அங்கு தான் பிரசின்டிங்  த பாஸ்ட் என்கிற என்னுடைய பி.எச்.டி ஆய்வுப் படிப்பையும் முடித்தேன்.&lt;/p&gt; &lt;p&gt;நம்முடைய சரித்திரத்தை ஆர்எஸ்எஸ், பிஜேபி. விஎச்பி எப்படி அரசியல்  அதிகாரத்திற்காக மீள்உருவாக்கம் செய்றாங்க என்பது தான் எனது பிஎச்டி ஆய்வு. எம்.ஏ  ஆய்வு இலங்கை பிரச்னை பற்றியது. அதை புத்தகமாகவும் அமெரிக்காவுல  வெளியிட்டிருக்காங்க. பிச்டி ஆய்வுல என்ன பண்ணினேன்னா ராமாயணம், மகாபாரதம்.  ராம்ஜென்ம பூமி, ராம் ரக்ஷா, காந்தியின் ராம் ராஜ்யம் இவற்றையெல்லாம் இணைத்து  வல்லரசாகனும் அணு ஆயுதம் தயாரிக்கணும் என்கிற கருத்து இந்திய அரசுக்கு எப்படி  ஏற்பட்டது என்பதை வெளிப்படுத்தி எழுதியிருந்தேன். பிஜேபி அரசு வரும்போது நானும்  இந்து பத்திரிக்கை ஆசிரியர் என் ராமும் சேர்ந்து பிஜேபி அரசு கண்காணிப்பகம்  ஆரம்பிச்சோம். அப்ப இந்தியாவில் பத்துப் பதினைந்து அறிவு ஜீவிகளுக்கு பிஜேபி ஆட்சி  வந்தபின் நிலைமை என்னவாக மாறும் என்பதைப் பற்றி எழுதினேன். ராம் உடனடியாகத் தொடர்பு  கொண்டு நீ சொல்வது உண்மை என்றால் அறிஞர்கள் பங்கெடுக்கிற மாதிரி ஒரு விவாத மேடை  அமைப்போம் என்றார். உடனே ஒரு இணையதளத்தை அதற்காக ஆரம்பிச்சோம். அமெரிக்காவுல  இருந்தபடியே பண்றதுக்காக ஆறு வருடம் விஎச்பி ஆர்எஸ்எஸ். பிஜேபி பற்றி நிறைய  படித்தேன். உளவியல். சமூகவியல் அரசியல் எல்லாம் படிச்சதால அது நம்பிக்கையாகவும்  உதவியாகவும் அமைந்தது. கேஎன் பணிக்கர், ரொமிலா தாப்பர், ஏஜி நுரானி, ஆஸ்கர் அலி  இன்ஜினியர் அப்படி இதில் நிறையப் பேர் இணைந்தார்கள். நிறைய விவாதங்கள் நடந்தன.  பத்திரிகையில் இதுபற்றி செய்தி வந்தது. ராமுக்கும் எனக்கும் கொலைமிரட்டல் வந்தது.  இவையெல்லாம் பிஜேபி அரசு கீழே விழும் வரையில் நடந்தது. அந்த அரசு விழுந்தவுடனே  அதையே கம்யூனிசம் வாச், கவர்ன்மெண்ட் மானிட்டர் என மாத்தினோம். இதெல்லாம் என்னுடைய  அரசியல் பின்னணி.&lt;/p&gt; &lt;table align="center" border="0" cellpadding="0" cellspacing="0" width="200"&gt; &lt;tbody&gt; &lt;tr&gt; &lt;td align="left" valign="top"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt; &lt;p&gt;நோம் சாம்ஸ்கியை நேரில் பார்த்ததில்லை. அவரது நூல்கள் வாசித்திருக்கிறேன்.  யொகான் கால்டும் சாம்ஸ்கியை போன்றே அமெரிக்காவை விமர்சனம் செய்கிற அறிஞர் ஆவார்.  அவர்தான் என்னுடைய பேராசிரியர். அவர் ஒரு குழு ஆரம்பித்தார். அதில  தொடக்கத்திலிருந்து பவுண்டிங் உறுப்பினரா யிருக்கிறேன். அதற்காக இணையத்தில் எல்லா  வருடமும் இரண்டு வகுப்புகள் பாடம் நடத்துறேன்.&lt;br /&gt;காந்தியத்தோடு இருந்த ஈடுபாடு  அம்மாவிடமிருந்து வந்தது. பின்னால காந்தியம் பற்றி நிறைய படிக்க ஆரம்பிச்சிட்டேன்.  உலக சமாதானம், அமைதி போன்றவற்றில் ஈடுபாடு ஏற்பட்டது. அமெரிக்கா போன பிறகு ஆசிரியர்  தொழிலும் இதுவாகவே அமைந்தது. அகிம்சை பற்றி நிறைய வகுப்புகள் எடுத்தேன். ஜான்  வயோடர்ன்னு ஒரு பேராசிரியர் இருந்தார். அவர் ஒரு வகுப்பு நடத்தினார். அந்தப்  பாடத்தை நான் எடுத்தேன். அவாயில இவரைப்போன்றே மைக்கல் ட்ரு கிலன் பேஷ் இரண்டு  பேருமே அகிம்சை வழியில் முன்னோடியாய் இருந்தார்கள். இந்தியாவில் இருக்கும்போதும்  நிறைய காந்திய ஆசிரமங்களுக்குப் போயிருக்கிறேன்.&lt;/p&gt; &lt;p&gt;வீட்டுல சின்ன வயசுல ஒரு விளக்கின் முன்பாக காந்தி ஆசிரமப் பாடல்களைத்தான்  பாடுவோம். பஜனைப் பாடல்களை அம்மா பாட வைப்பாங்க. அம்மா கிராம சேவிகா  வேலையிலிருந்தாங்க. ஓய்வு பெறும்போதும் மாவட்ட அதிகாரியாக ஓய்வு பெற்றாங்க.&lt;/p&gt; &lt;p&gt;இந்திய மார்க்சிஸ்ட் குழுக்கள் சின்ன வயதுல ரொம்ப கவர்ச்சியாக இருந்தது.  எண்பத்தேழுகளில் நார்வேயில் படிக்கப் போயிருந்தேன். முடிச்சிட்டு வரும்போது சோவியத்  வழியாக வரும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் மார்க்சிய அரசு பற்றிய எனது கற்பனையை  உடைத்தது. நம்ம நாட்டில் உள்ள வளம்கூட அங்கு இல்லை. செழிப்பில் அது அதிருப்தியைத்  தந்தது. மக்களை இறுக்கமாக ஒருங்கிணைத்து வச்சிருந்தாங்க. மாஸ்கோ நகரத்தில்  அனுமதித்த வழியாகத்தான் போக முடியும். இறுக்கமான கண்காணிப்பு வேறு எவரும்  போகமுடியாது. இதையெல்லாம் பார்த்திட்டு அந்த சிந்தாந்தமே சரியில்லன்னு ஆகிப்போச்சு  எனக்கு. அதனால் மார்க்சியத்தைக் குறை சொல்லல. எப்படி காந்தியத்தை நேரு இந்தியாவில்  அழகாக கொலை செய்தாரோ அதுபோல கம்யூனிசத்தை ஸ்டாலின் வகையறாக்களும்  கொன்னுட்டாங்க.&lt;/p&gt; &lt;p&gt;அப்பா தி.க. திமுகன்னு இருந்ததால இவ்வியங்கங்களும் ஆதிக்கமற்ற சமுதாயம். ஏழையின்  சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றெல்லாம் சொல்வாங்கல்ல? கம்யூனிச வாடையோடு  சமத்துவம் அது இதும்பாங்கல்! அதனால அவங்க பேர்லயும் ஒரு கற்பனை இருந்தது.  பின்னாடிதான் அவங்களுக்கும் இதுக்கும்மெல்லாம் ஒரு சம்பந்தமும் கிடையாதுன்னு  தெரியவந்தது. 2001ல திரும்பி வந்த பிறகு அரசியல் பக்கமே திரும்பல. அப்பா அரசியல்ல  ஈடுபடச் சொன்னாங்க. எனக்கு இந்த அசிங்கமான ஆட்களோட நடக்கவே கேவலமா இருந்தது. அவங்க  பேசுற மொழி, கலாச்சாரம் எதுவும் எனக்கு ஒத்துக்கல.&lt;/p&gt; &lt;p class="style167"&gt;தீராநதி: தனிப்பட்ட வாழ்க்கையில் மனைவி, குழந்தைகள் என்ன  செய்கிறார்கள்?&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;உதயக்குமார்:&lt;/strong&gt; 1992ல் எனக்கும் மீராவுக்கும் திருமணம் நடந்தது.  சென்னையில திருவேணி அகாதமி என்கிற நர்சரி ஸ்கூல்ல மனைவி வேலை  பார்த்திட்டிருந்தாங்க. சென்னையில அவங்க அம்மாவும் எங்க அம்மாவும் நண்பர்கள்.  எத்தியோப்பியாவில் திருநெல்வேலியில் சேர்ந்தவர் என்னோட வேலை பார்த்தாரு. அவருடைய  மகளும் எனது மனைவியும் நண்பர்கள். அந்தப் பொண்ணு என்கிட்ட சொல்வா. இந்த மாதிரி  வெளிநாட்டுக்குப் போகணும்னு விருப்பமிருக்கு. இந்தியாவுல எதையாவது செய்யணும்னு  விருப்பமிருக்குன்னு சொல்வாங்க. சந்திச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு  பண்ணினோம். பிறகு அவாய்க்குக் கூட்டிட்டுப் போனேன். அங்க எம்எஸ்டபுள்யூ பண்ணினாங்க  அவங்க எம்ஏ ஆங்கில இலக்கியம் தான். அங்கேயே சமூக சேவகியா வேலை பார்த்தாங்க கொஞ்ச  நாளு. நான் யுனிவர்சிட்டி வேலை பார்க்கும்போது அவங்க சோஷியல் ஒர்க்கர் ஆக வேலை  பார்த்தாங்க. இரண்டு பையன்கள் எங்களுக்கு சூர்யா, சத்யா. பெரியவன் எட்டாவது வகுப்பு  படிக்கிறான். சின்னவர் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். காந்தியின் சத்தியாகிரகம்  பாதிப்பில் சின்னவனுக்கு சத்யா என பெயரிட்டோம்.&lt;/p&gt; &lt;p&gt;குழந்தைங்க பிறந்த பிறகு எங்கள் இருவருக்குமே குழந்தைகளை அமெரிக்காவுல  வளர்க்கக்கூடாது என்கிறதுல ரொம்ப தீவிரமாயிருந்தோம். ஊருக்கு வந்து ஏதாவது பண்ணணும்  என்கிற எண்ணமும் இருவருக்கும் இருந்தது. சொந்த நாட்டிலிருந்து நிறைய  பெற்றிருக்கிறோம். திருப்பிக் கொடுக்க வேண்டும். இருவருக்குமே பள்ளிக்கூடம்  நடத்தணும்னு ஆர்வமிருந்தது. அங்க இருக்கும்போதே எங்களுடைய சேமிப்பில் நாகர்கோவில்ல  காமராஜ் பாலிடெக்னிக் பக்கத்தில் பழவிளையில் நிலம் வாங்கிப் போட்டோம். அது முழுக்க  எங்களுடைய உழைப்பு. நாங்க மிக எளிமையாக வாழப் பழகிக் கொண்டோம். ஓட்டல்ல போய்  எல்லாம் சாப்பிடறதில்ல. 2001ல் பழவிளையில் எங்கள் இடத்தில் பள்ளிக்கூடம் கட்டினோம்.  நிறையப்பேர் சொன்னாங்க டவுனுக்குள்ள நிறைய கூட்டம் வரும் அப்படீன்னு நாங்க  அமெரிக்காவ இங்க கொண்டு வர விரும்பவில்லை. ஏற்கனவே காலனியாதிக்கத்தின் கீழ்  கஷ்டப்படுகிற ஒரு நாட்டுல திரும்பவும் மேலைநாட்டு மோகத்தை உருவாக்க விரும்பல.  இன்னொன்று கிராமப் புறத்தில் உள்ள மக்களுக்குத்தான் எங்களுடைய கல்விமுறை அவசியம்  என்ற நினைத்தோம். எங்களுடைய மாணவர்கள் எல்லாமே மீனவக் குடும்பத்திலிருந்தும் சாதாரண  இந்து நாடார் குடும்பத்திலிருந்தும் வர்ற பிள்ளைங்க. எல்லாமே முதல் தலைமுறைக்  குழந்தைகள். இவங்க பெற்றோர்கள் எல்லாமே முறை சார்ந்த கல்வி கற்றதில்லை.  பெரும்பாலானவங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.&lt;/p&gt; &lt;p&gt;பொதுவாக. எல்லாரும் கிராமத்திலிருந்து டவுனுக்குத்தான் வரவிரும்புறாங்க. யாரும்  டவுன்ல இருந்து கிராமத்துக்கு வர விரும்பவில்லை. எட்டாம் வகுப்பு வரைக்கும் இப்ப  இருக்கு. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வகுப்பாக அதிகரிச்சிட்டு வாரோம். அரசு  பாடத்திட்டத்தைத்தான் உபயோகப்படுத்துறோம். ஆனால் துணைப்பாடமாக சமாதானக் கல்வி,  விவசாயம் பற்றி சொல்லிக் கொடுக்கிறோம். குழந்தைகளைக் கொண்டே காய்கறிகள் வளர  வைக்கிறோம். செயற்கை உரங்கள் போடாம பூச்சி மருந்து போடாம விவசாயம் உணவு பற்றிய  விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்துறது முக்கியமான பணி. ஹிரோஷிமா தினம். காந்தி  ஜெயந்தி எல்லாம் பெரிசா கொண்டாடுவோம். அப்ப உலக சமாதானம் பற்றிய விஷயங்களைச்  சொல்லித் தருவோம். பிள்ளைகளுக்குள்ளே பிரச்னை ஏற்பட்டால் பெரிய குழந்தைகளை வைத்து  விவாதித்து அவங்களை வைத்தே தீர்த்துக்கச் சொல்றது. ஆசிரியர்கள் தலையிடறதில்ல. அந்த  மாதிரி சுற்றுச்சூழல் விஷயங்கள் பற்றி குழந்தைகளிடம் அதிகம் பேசுகிறோம்.  வகுப்பறைக்குள்ளேயே ரூமுக்குள்ள குழந்தைகளை அடைச்சுப் போடறதில்லை. பிள்ளைகள வெளிய  கூட்டிட்டுப் போய் ஆசிரியர்களை பாடம் நடத்தச் சொல்றோம்.&lt;/p&gt; &lt;p&gt;ஆங்கிலப் பள்ளிதான். ஆனாலும் தமிழுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.  ஆங்கிலத்தில்தான் பேசணும்னு கட்டாயப் படுத்துறதில்லை. பெற்றோர் அப்படி  விரும்புறாங்க குழந்தைகள் விஷயத்துல பெற்றோர்கள்தான் பிரச்சினையாக  இருக்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;விலையுயர்ந்த ஆங்கிலப் பள்ளிகளிலிருந்து குழந்தைகளை எங்களிடம் ஆற்றுப்படுத்துதல்  மற்றும் ஆலோசனைகளுக்காக கூட்டிட்டு வர்றாங்க. குழந்தைகளைப் பற்றி நிறைய புகார்களோடு  அவர்கள் வருவாங்க வீட்டில் பெற்றோர்களிடம் கோபப்படுகிறார்கள். ஆசிரியர்கள்  சொல்லுறதைக் கேட்கிறதில்லை இப்படி பொதுவாக குழந்தைகளின் இயல்பை ஒடுக்குவதைத்தான்  கல்வின்னு நம்புற மனோபாவம் இருக்கு. ஆசிரியர்கள் படிபடின்னு கஷ்டப்படுத்துறதுக்கு  பிள்ளைங்களால ஈடுகொடுக்க முடியல. படைப்பாற்றல் உள்ள தலைமைப் பண்பு கொண்ட குழந்தைகள்  ஒடுக்கப்படுகிறார்கள். நிறைய புத்திசாலித்தனமான குழந்தைகங்களாக இருக்கும். ஆனா  பள்ளிக்கூடம் அதுங்களுக்கு ஒத்துக்கல.&lt;/p&gt; &lt;p&gt;பிற பள்ளிகளுக்கு நானும் என் மனைவியும் சென்று குழந்தைகளுக்கு ஆலோசனை தருகிறோம்.  குழந்தைகளுக்கு ஆசிரியர்களோடு மட்டுமல்ல. பெற்றோர்களோடும் கம்யூனிகேஷன் இல்லை.  மாறும் பருவப் பிரச்சினைகள் பத்தி குழந்தைகளுக்கு கற்றுத்தருகிறோம். குழந்தைகளோடு  பேசுவதற்கு இன்று ஆட்கள் இல்லை. பருவப் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை, பெற்றோர்கள்  ஆசிரியர்களோடு சண்டை போடுறது. இப்படியெல்லாம் வருது. குழந்தைகளின் உணர்வு  மாற்றங்களுக்கான வெளிப்பாடு இல்ல. இன்புட் நிறைய வருது. ஆனால் அவுட்புட் இல்ல.  தொலைக்காட்சிகளில் அரைகுறையான பாலியல் செய்திகள் தொடர்ச்சியாக வந்துகிட்டேயிருக்கு.  பல்வேறு முரண்படானா பாலியல் குறியீடுகள் குழந்தைகளுக்குப் போய்க்கிட்டே இருக்கு.  நிறைய பள்ளிகளிலிருந்து இதற்காக கூப்பிடறாங்க. எங்கள் பள்ளியில் பாலியல் கல்வி  பற்றிச் சொல்லித் தருகிறோம். கொஞ்சம் முற்போக்கான பள்ளிக்கூடங்களிலிருந்து  இதற்காகவும் கூப்பிடுகிறார்கள். நாம செக்ஸ் பற்றி குழந்தைகளிடம் பேசமாட்டோம். ஆனால்  குழந்தைகளுக்கு இன்புட் வந்துகிட்டிருக்கு. ஆம் பேசவும் முடியாது. ஆனா.  கிடைச்சிட்டேயிருக்கு அப்ப நிறைய பிரச்னைகள் வருது.&lt;/p&gt; &lt;p&gt;சாக்கர் எங்களுடைய பள்ளிக்கூடம் சவுத் ஆசியன் கம்யூனிட்டி சென்டர் ஃபார்  இடிகேசன் ரிசர்ச் என்பது சாக்கரை குறிப்பிடுவது. இதை உள்ளூர்ல உள்ள இந்து  அமைப்புகள் எல்லாம் என்ன நினைச்சிட்டாங்கன்னா இதுவொரு கிறிஸ்டியன் பெயர். இவங்க  இரண்டு பேரும் மதம் மாறிட்டாக். அமெரிக்க இவங்கள வச்சி இப்ப இங்க உள்ள ஆட்கள மதம்  மாத்துறாங்க அப்படிங்கறமாதிரி பிரச்சாரம் பண்ணிவிட்டாங்க.&lt;/p&gt; &lt;p&gt;வழக்கமான பள்ளிக்கூடத்தில் எங்கள் இருவருக்கும் விருப்பம் இல்லை. அதனால தான்  கம்யூனிட்டி சென்டர்ன்னு வைத்தோம். கலைஞர்கள். ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் கதை  சொல்வதற்காக எங்க அப்பா. அம்மா வருவாங்க. நிபுணர்களைக் கூட்டிட்டு வந்து பிள்ளைகளோட  உரையாடச் செய்வோம். கல்லூரிகளில் செமினார் இநத மாதிரி தான் கல்வி முறை எங்களிடம்  பிள்ளைகளைக் கேள்வி கேட்க வைப்பது மணி அடித்து வகுப்பு நடத்தும் கல்விமுறை  முட்டாள்களை உருவாக்கக் கூடியதாகும். எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளின்  பெற்றோர்களிடம் இதுவரையில் நன்கொடையாக பத்து ரூபாய் கூட வாங்கியது கிடையாது.  கட்டடத்துக்குத் தாங்க அதுக்குத் தாங்கன்னு வாங்கிதில்லை. கட்டடம் நிலம் எல்லாம்  நானும் எனது மனைவியும் உழைத்து சம்பாதித்தவை.&lt;/p&gt; &lt;p&gt;வருடந்தோறும் யூரோப்புக்கு ரெண்டு மூணு தடவையாவது போயிருவேன். வகுப்புகள்  நடத்துவதற்குப் போற இடங்கள்ல நல்ல காசு கொடுப்பாங்க. என்னுடைய ஒரு மணி நேர  வகுப்புக்கு 125 யூரோஸ் கொடுப்பாங்க. அந்த அளவுக்கு சம்பாதிக்கிறேன். பணம் வருது.  யாரிடமும் எதுவும் சுயமரியாதையை விட்டுக் கேட்பதில்லை. அது அப்பாவிடமிருந்தே வந்து  தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்ட பழக்கம். சிலர் சொல்வாங்க. அமெரிக்காவுல உங்களுக்குத்  தொடர்பிருக்கு. நீங்க நினைச்சா நிறைய பணம் சம்பாதிக்கலாம். அப்படீன்னு. இந்தியா ஒரு  ஏழைநாடு. இங்க வாழ்றவங்க பிச்சைக்காரங்கன்னு ஒரு இமேஜ் வெளிநாடுகள்ல இருக்கு  அதனாலேயே எவர் கிட்டயும் உதவின்னு கேட்கறதில்ல. எங்களுடைய விழிப்புணர்ச்சியில்  தெளிவாய் இருக்கிறோம். அமெரிக்கா போனதாலதான் சம்பாதிச்சு இந்தப் பள்ளிக்கூடத்தை  உருவாக்க முடிந்தது. ஆனா எக்காரணம் கொண்டும் அமெரிக்கக் கருத்தியலையோ அமெரிக்கத்  தன்மையையோ ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல. தொடர்ந்து எதிர்த்துக்  கொண்டேயிருப்பேன்.&lt;/p&gt; &lt;p class="style167"&gt;தீராநதி: உங்களுக்கு அமெரிக்காவோடும் அமெரிக்க அரசாங்கத்தோடும  உள்ள உறவு எத்தகையது?&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;உதயகுமார்:&lt;/strong&gt; அமெரிக்காவோடு நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறோம்.  நிறைய நண்பர்கள் அங்கு இருக்கிறார்கள் அங்கு படிக்கும்போதும் வேலை பார்க்கும்  சமயங்களிலும் அமெரிக்க அரசாங்கத்தை எதிர்த்து நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.  நான் இடதுசாரி சித்தாந்தம் உள்ளவன் என்பதால் அமெரிக்கவுக்கு எதிராக நிறைய  எழுதியிருக்கிறேன். அமெரிக்க நியூஸ் பேப்பர்களிலும் எழுதியிருக்கிறேன். நிறைய  பேசியிருக்கிறேன். அந்த சமூகத்தோடு நிறைய நெருங்கிய தொடர்பிருக்கு. நெருங்கிய  நண்பர்கள் இருக்கிறாங்க. ஆனால் அமெரிக்க அரசாங்கத்தோடு நிறைய உராய்வுகள் வருது.  என்னைப் பற்றி அமெரிக்க அரசாங்கம் தனி கோப்பு வைத்திருக்குது. ஒவ்வொரு தடவை அந்த  நாட்டுக்குள்ள நுழையும்போதும் பெரிய விசாரணை நடத்தித்தான் உள்ள விடுவாங்க.  அமெரிக்காவோட எனக்குள்ள தொடர்பு இதுதான். எனக்கு மற்றபடி அமெரிக்க அரசு  நிறுவனங்களோடடோ அமெரிக்காவிலுள்ள தனிப்பட்ட ஃபவுண்டேஷனோடோ அல்லது அமெரிக்க அரசியல்  குழுக்களோடவோ எந்தவிதத் தொடர்பு கிடையாது. அதில் ரொம்பத் தெளிவாயிருக்கிறேன். ஏன்ன  நாம ஈடுபட்டிருக்கக்கூடிய விஷயம் அணுசக்தி. அ ணு உலைகள் பற்றியது. அமெரிக்காவில்  இருக்கும்போதே இப்பணியை ஆரம்பிச்சிடேன். இதுபற்றிய செய்திகளை, தகவல்களை  என்னிடமிருந்த ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களுக்கு அனுப்பி விடுவேன். கூடங்குளம் அணு  உலைகள் வேண்டாம் என்பதை 1998ல இருந்தே சொல்லிட்டிருக்கேன். அங்கேயிருந்து ஜனவரி1  2001ல ஊருக்கு வந்தவுடன் லு டேவிட் இதையே இங்க செய்திட்டிருந்தார்.&lt;/p&gt; &lt;p class="style167"&gt;தீராநதி: அணுசக்தி, அணு உலை பிரச்சினைகள் தொடர்பான தீவிர ஈடுபாடு  எப்படி ஏற்பட்டது. &lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;உதயகுமார்: &lt;/strong&gt;அணுஉலை விஷயம் எனக்கு ரொம்ப முக்கியமாகப்  பேசப்பட்டது. இது மக்களுக்கு எவ்வளவு பெரிய அழிவைத்தரும் என்பதை படிப்பின்  வழியாகவும் அனுபவத்தின் வழியாகவும் உணர்ந்திருந்தேன்.&lt;/p&gt; &lt;p&gt;எனது தாத்தா பாட்டிகள்ல நாலு பேரு புற்றுநோயால் இறந்தவர்கள் என்னைய அதிகம்  பாதித்தது அப்பம்மையின் மரணம். அவங்க பக்கத்துலதான் சிறிய வயதில் தூங்குவேன்.  வெத்தல போடுவாங்க. பாட்டி மண்டைக்காட்டுல பொறந்தாங்க. தாத்தாவுக்குத்தான்  இசங்கன்விளை. எங்க ஊர்ல அவங்கள மண்டக்காட்டான்னு தான் சொல்வாங்க. பாட்டிக்கு  புற்றுநோய் வந்தது. அப்பா அம்மாவுக்கு அதனை ஆரம்பத்தில் கண்டுபிடிக்கத் தெரியல.  கொஞ்சம் முதிர்ச்சி அடைந்திருந்த நிலையில்தான் கண்டுபிடித்தோம். ஆரம்ப நிலையெனில்  ஏதாவது செய்திருக்கலாம். நெய்யூர் மருத்துவமனையில் வைத்தியம் பார்த்தோம்.  பலனளிக்கவில்லை. இப்போ ஆரம்ப நிலையெனில் ஒன்றுமே இல்லை. மருத்துவத்துறை  மாறியிருக்கு. ஆரம்ப நிலையில் வைத்தியம் பார்த்துவிட்டால் பத்துப் பதினைந்து  வருடங்கள் சந்தோஷமாயிருக்கலாம். அப்போது ஆரம்ப நிலைக்கே சரியான மருத்துவம்  இருக்கவில்லை.&lt;/p&gt; &lt;p&gt;பாட்டியிடம் வெற்றிலை மணக்கும். பாட்டியோடு படுத்திருக்கும்போது பேன்  குத்திக்கொண்டே ராமாயணம். மகாபாரதம், காசி. துரோப்பா. செம்புலிங்கம் கதைகள் எல்லாம்  சொல்வாங்க. அவங்க ஒரு அழகான கதை சொல்லி கதைக்குள்ளே கிளைக்கதை. அதுக்குள்ள  கிளைக்கதை என்று சென்று மீண்டும் மூலைக்கதைக்குள் வாறத என்று கதை சொல்வதற்கு  விசேஷமான ஒருமுறை அவர்களிடம் தன்னிச்சையாக இருந்தது. என்னுடைய மேடைப்பேச்சு  வெளிப்பாட்டுக்கு அவங்களுடைய இந்தக் கதை சொல்லல் முறை முக்கியமான காரணம். அம்மா,  அப்பா இருவரும் வேலை நெருக்கடிகளில் இருந்ததால் அவங்களால குழந்தைகளுக்குச் செய்ய  இயலாதவற்றை பாட்டி மூலம் அடைந்தோம். பாட்டி தான் தமிழ் உணர்வைத் தந்தது.  பேச்சுத்திறனைத் தந்தது. உரையாடல் திறனை மேம்படுத்தியதும் பாட்டி தான். பேன்  குத்திக்கேட்டே கதை சொல்வாங்க. தூங்கிப் போயிருவேன். பாட்டியோட மிக  நெருக்கமாயிருந்தேன்.&lt;/p&gt; &lt;p&gt;புற்றுநோயால பாட்டி கன்னத்தில் ஓட்டை விழுந்து புழு ஏறி வீடெல்லாம் நாற்றம்.  அதன் பிறகு குழந்தைகளை பாட்டி பக்கத்துல விடமாட்டாங்க. எந்த வாய் எங்களுக்குத் கதை  சொல்லி ஆளாக்கியதோ அந்த வாய்க்குப் பக்கத்தில் சென்று முத்தம் கூட தரமுடியவில்லை.  இது சிறு வயதில் மிகவும் பாதித்தது. துடிதுடித்து இறந்தாங்க. கூடங்குளம் விஷயத்தில்  நான் ஈடுபட்டதற்குக் காரணம் இதுதான். இதுவொரு சுயநலம்தான். இந்த வேதனையும்  துன்பமும் அணுவுலைகளால பிறருக்கு ஏற்படக்கூடாது என்கிற வைராக்கியம். புற்றுநோய்  உள்ளவங்களப் பார்த்தாலே என்னால் தாங்க முடியாது. நேற்று இரவு மணப்பாடுன்னு ஒரு  ஊருக்குப் போயிருந்தோம். ஊர்த்தலைவர் மனைவிக்குப் புற்றுநோய். திருவனந்தபுரம்  போயிருந்தோம். சோதனை செய்து பார்த்திட்டு திருப்பி அனுப்பிட்டாங்க என்று சொன்னார்.  புற்றுநோய்ன்னாலே எனக்கு பயம். பாட்டி மட்டுமல்ல. என் பிள்ளைங்க இந்த நோயால  எதிர்காலத்தில் பாதிக்கப்படக்கூடாது. எனது மனதுக்கு இதமானவர்கள் அவஸ்தைப்பட்டு  புற்றுநோயால இறந்ததை நெருங்கியிருந்து பார்த்தவன் நான் எனது சொந்த ஊரான  இசங்கன்விளையில் தீவிரமா புற்றுநோய் பாதிப்புக்குள்ளான நோயாளிகள் இருபத்தைந்துக்கு  அதிகமிருக்காங்க. எங்கள் வீட்டுக்கு நேர்எதிர் வீட்டில் கர்ப்பப்பை புற்றுநோயால  அவதிப்படும் நோயாளியிருக்கிறாங்க.&lt;/p&gt; &lt;p&gt;மணவாளக்குறிச்சி மணல் ஆலைக்கு இந்தப்பக்கம் உள்ளது சின்னவிளை. அந்தப்பக்கம்  பெரியவிளை, மண்டைக்காடுபுதூர், கொட்டில்பாடு என்று கடற்கரை கிராமங்கள் நாடார்  கிராமங்கள், மண்டைக்காடு, பருத்திவிளை என்று அனைத்து ஊர்களிலும் புற்றுநோய் அதிகம்.  அந்தப் பகுதிகள்ல நாங்க ஆய்வு பண்ணியிருக்கிறோம். டாக்டர் லால்மோகனும்  வந்திருக்காரு. கூட்டம் நடத்தியிருக்கிறோம். இந்த ஊர்களுக்கெல்லாம் குறைந்தபட்சம்  பத்துத் தடவையாவது போயிருப்பேன். நான் ஒவ்வொரு ஊர்கள்ல உள்ள பெண்கள் குழுக்களுடனும்  பேசியிருக்கிறேன். தொற்றுநோய் மாதிரி இப்பகுதிகளில் புற்றுநோய் பரவியிருக்கு.&lt;/p&gt; &lt;p&gt;என்னன்னா இப்பகுதி கடற்கரை மண்லதோரிடம் கிடைக்குது. மோனோசைட்டின் ஒரு கூட்டுதான்  தோரியம். இது அதிகமான கதிரியக்கத்தன்மை கொண்டது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில்  அதிகமிருக்கு. மழைபெய்யும்போது ஆறுகள் மூலமாக அடித்து வரப்பட்டு கடற்கரைகள் நோக்கி  கொண்டுவரப்படுது இது. வள்ளியாறு தாமிரபரணியாறு மூலம் எல்லா இடமும் விரியுது. இதனை  இந்த மணவாளக்குறிச்சி மணல் ஆலை தோண்டியெடுக்கும்போது மேலும் இயற்கை கதிரியக்கம்  அதிகமாகுது. அதனை இயற்கையாகவே அப்படியே விட்டோம்னா ஒண்ணுமில்லை. அப்படியே படிஞ்சி  படிஞ்சி இருக்கும். அப்பகுதி கடற்கரை மக்களுக்கு புற்றுநோய்க்குக் காரணம் இதுதான்.  அப்படியே மணல் மேல இருக்கிறாங்க. டாக்டர் லால்மோகன் இங்க செய்த ஆய்வில் ஆண்களுக்கு  விரைகளில் புற்றுநோய் அதிகமிருக்கு மணல்கள்ல இருந்துதான் வலை பின்னுறதில் இருந்து  சீட்டாடுவது வரையில் பழக்கமாயிருக்கு. ஏற்கனவே இப்பகுதிகள்ல நாற்பது சதவிகிதம்  இயற்கையாகவே கதிரியக்கம் இருக்கு. அந்த கம்பெனி ஆலை மணல் பிராசசிங் பின்னர்  அதிகமாகுது. தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி திருவனந்தபுரம் கொல்லம்  ஆலப்புழை இப்படி ஆறு கடலோர மாவட்டங்களில் இயற்கையான கதிரியக்கமே நாற்பது சதம்  அதிகம். வி.டி. பத்மநாபன், டாக்டர் லால்மோகன் போன்றோரின் ஆய்வுகள்ல. இது  தெளிவாயிருக்கு. அரசு மணல் ஆலைகளும் தனியார் மணல் ஆலைகளும் இந்த தோரியத்தைக்  கிளறிவிடும்போது மேலும் கதிரியக்கம் அதிகமாகுது.&lt;/p&gt; &lt;p&gt;தோரியம் கலந்த மணல் உலகத்திலேயே மூன்று நாடுகளில்தான் அதிகமிருக்கு. நார்வே.  துருக்கி, இந்தியா. நம்ம நாடு தோரியம் உள்பொருள் அதிகம் உள்ள மணல் நாடு. இந்த மணல்  ஜெர்மனுக்கும் ஜப்பானுக்கும் போகுது.&lt;/p&gt; &lt;p class="style167"&gt;தீராநதி: கூடங்குளம் அணுவுலைகள் எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக  நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னென்ன?&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;உதயகுமார்:&lt;/strong&gt; என் மீது மட்டும் அரசாங்கம் தேசத் துரோக வழக்கு.  அது இதுன்னு எண்பத்தைந்து வழக்குகளுக்கு மேல் பதிவு செய்திருக்காங்க. என்னைக் கைது  செய்தாலும் கூட போராட்டம் தடைபடாத அளவுக்கு அடுத்தகட்ட தலைவர்களை  நியமித்திருக்கிறோம். எனக்கு விலைபேசி நீங்க குடும்பத்தோடு அமெரிக்காவுல  செட்டிலாகிடுங்கன்னு சொன்னாங்க. விபச்சாரம் செய்வதற்காக நான் இந்தியாவிற்குத்  திரும்பி வரவில்லை என்று பதில் கூறினேன். என்னையும் என் குடும்பத்தினரையும் கடத்தி  வச்சிட்டு உதயகுமார் பணம் வாங்கிட்டு தலைமறைவாகி விட்டார் என்று பிரச்சாரம் செய்து  போராட்டக்குழுவுக்குள் பிளவை ஏற்படுத்தும் எண்ணம் இருந்தது பலிக்கவில்லை. இப்ப  அமெரிக்காவுல இருந்து எங்களுக்குப் பணம் வருதுன்னு கிளப்பி விடுறாங்க. அரசாங்கம்  இந்த மக்கள் போராட்டத்திற்கு எதிராக கூடுமானவரையில் எதையெல்லாம் செய்யமுடியுமோ,  எல்லாவற்றையும் செய்யுது. அணுசக்தித் துறை அணு உலை ஆதரவு பிரச்சாரத்திற்காக மட்டும்  உளவுத்துறை மூலமாக ஐம்பது லட்ச ரூபாய் செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாங்கள்  மக்களின் கடன் தொழிலிலிருந்தும் பீடி சுத்தும் தொழிலிலிருந்தும் கிடைக்கிற பணத்தில்  இப்போராட்டத்தை நடத்துகிறோம் என்பதே உண்மை.&lt;/p&gt; &lt;p&gt;பால பிரஜாபதி அடிகளாரை ஓய்டேவிட்டும் நானும் முன்னோடியே போய்ப்  பார்த்திருக்கிறோம். 2001 காலகட்டத்திலேயே கூட்டங்கள் நடக்கும்போது வருவாரு. நல்லா  பேசுவாரு. அருமையான சொற்பொழிவாளர். கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான போராட்டம்  ஆரம்பிச்சதும் போய் பார்த்தோம். பார்த்துப் பேசி இடிந்தகரைக்கு வந்தாரு  கூடங்குளத்துக்கு வந்தாரு இடிந்தகரைக்கு நான்குமுறை வந்திருக்காரு.&lt;/p&gt; &lt;p&gt;தொடர்ச்சியாக சென்னைக்கு எல்லோரும் போயிருந்தோம். இவரும் வந்திருக்காரு. தமிழக  முதல்வர் சந்திப்பில் இவரும் இருந்தாரு. ஜெயலலிதாவிடம் பேசும்போது கூடங்குளம்  அணுவுலைகள்ல தீவிரவாதத் தாக்குதல் ஏற்பட வாய்ப்பிருக்குன்னாரு. அவங்க இத்தகைய  பேச்சை விரும்பவில்லை. ஏன் என்ன நடக்கும் நாங்களும் கடலோரத்துக்குப் பக்கத்தில தானே  இருக்கோம். அப்படின்னாங்க. இவர் பேசியது பிடிக்கல. பின்பு விடைபெற்றுத்  திரும்பும்போது எனது கையை பிடித்து முத்தம் கொடுத்தார். நம்ம சமுதாயத்தில்  இப்படியொரு திறமையான ஆள் இருந்தது எனக்கு தெரியாமப் போச்சே. அப்படீன்னாரு. நான்  உண்மையாக இப்ப ஒரு திருத்தலத்திலிருந்து சொல்றேன். இவர் முத்தம் தந்தவுடன் எனக்கு  ஐயய்யோன்னு தோணிச்சி. எனக்கு ரொம்பவும் புகழ்றவங்க. கால்ல விழறவங்களைக் கண்டா பயம்  வரும். பயந்தது அப்படியே நடந்தது.&lt;/p&gt; &lt;p&gt;இடிந்தகரை மக்களும் அவரை ரொம்ப அன்பாக பார்த்தாங்க. எல்லாமே நல்லா இருந்தது. ஒரு  கூட்டம் முடிந்ததும் சொன்னாரு. அணுவுலைக்கு எதிரான அடுத்த கூட்டத்தை  சுவாமித்தோப்பில் நடத்துவோம்ன்னு. எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்  போராட்டம் கடலோரம் கடலோரம்னு நடந்திட்டிருக்கு. அதற்கு வெளியில் நடப்பது  போராட்டத்துக்கு மற்றொரு பரிமாணத்தையும் தரு. இது எல்லா மக்களுக்கும் உரிய  பிரச்னைதானே என்று நினைத்தோம். நாடார் ஊர்ல முன்னணித் தலைவர் ஒருவர்  நடத்துறேன்றான்னு மகிழ்ச்சியடைந்தோம்.&lt;/p&gt; &lt;p&gt;அன்று சாயுங்காலம் என்னைக் கூப்பிட்டுச் சொன்னாரு. அனுமதி கிடைக்காது  போலிருக்குன்னு. ஐயா அதப்பத்திக் கவலைப்படாதீங்க நாங்க அனுமதி வாங்கியிருக்கிறோம்.  நாங்கள் வாங்கி தருகிறோம் என்று சொன்னேன். நாங்கள் அனுமதி பெற்ற பின் அவரைத்  தொடர்பு கொண்டவுடன் அதுல சிக்கல் இருக்கு பார்த்துக்கிடுங்க அப்படின்னாரு நாங்க  என்ன நினைச்சோம் பந்தல் எல்லாம் போட வேண்டி வரும். செலவு ஆகும். அதுக்கு என்ன  பண்றதுன்னு யோசிக்கிறாரு போல இருக்குன்னுட்டு அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி கொண்டாடி  போராட்டத்தை இடிந்தகரையிலேயே வச்சிருவோம்னு சொன்னேன். மென்முறை பற்றி ஒரு  கருத்தரங்கம் நடத்துவோம். அகிம்சைங்கற வார்த்தை வேண்டாம். அதற்குப் பதிலான  மென்முறைங்கற தமிழ்வார்த்தையே பயன்படுத்துவோம். இதுல ஐயா வழியில் மென்முறை அப்படி  பேசுங்கன்னோம். வந்திருந்தாரு. அன்னைக்கும் அருமையான ஒரு பேச்சு. அற்புதமாகப்  பேசினார். ஐயா வழியில் உள்ள மென்முறை பற்றி படிக்கணும். எழுதணும்ங்கறது என்னுடைய  நெடுநாளைய ஆசை. அருமையாகப் பேசினாரு. மக்களுக்கும் நல்ல திருப்தியாக இருந்தது.&lt;/p&gt; &lt;p&gt;அப்புறம் ரெண்டு மூன்று நாட்கள் கழித்து இரவு 9 மணியிருக்கும் தொலைபேசியில்  அழைத்தார். முதல் கட்ட உண்ணாவிரதத்தை முடிச்சிட்டு இரண்டாங்கட்ட போராட்டத்தைத்  தொடங்குகறதுக்கு முன்னாடி வீட்டிலிருந்தேன். பிரதமர பார்க்கப் போற காலகட்டம். உங்கள  வந்து பார்க்கணும்னாரு வாங்கன்னேன். வந்தாரு. நீங்கள் தொண்டு நிறுவனங்கள்  அறக்கட்டளை ஏதும் வச்சிருக்கீங்களான்னு கேட்டாரு. ஆமா வச்சிருக்கேன். எங்கள்  பள்ளிக்கூடத்தை நடத்துறதுக்கு ஒரு அறக்கட்டளைதான் வேணும்னுட்டாங்க அதில நானும் எனது  மனைவியும் தான் உறுப்பினர். வேறெதும் கிடையாது அப்படீன்னு சொன்னேன்.&lt;/p&gt; &lt;p&gt;சுனாமி வேலை ஏதும் செய்தீங்களான்னு கேட்டாரு. இல்ல தொண்டு நிறுவனங்கள் மூலம்  பணம் வாங்கி செய்யலான்னாங்க. ஐயா என்ன விடுங்க. தொண்டு நிறுவனங்கள் அரசியல் கட்சிகள  விட கேவலப்பட்டுக் கெடக்கு நான் வரலன்னு விட்டுட்டேன் என்று சொன்னேன். கூடங்குளம்  அணுவுலைகளுக்கு எதிரான போராட்டக் குழுவை உறுதிப்படுத்த வேண்டாமான்னு கேட்டாரு. யார்  யாரெல்லாம் அதில இருக்காங்கன்னு கேட்டாரு அதிலிருக்கும் பத்துப் பேரோட பெயர்  சொன்னேன். கூடங்குளத்திலிருந்து இரண்ட பேர் நான் உட்பட இந்து நாடார்களே நான்கு பேர்  வந்திருக்கிறோம். கத்தோலிக்க ஃபாதர்கள் சிலபேர் இருக்காங்க. அப்படீன்னேன். ஆலோசனைக்  குழுவுல ஐயா நீங்க, தூத்துக்குடி பிஷப், பாளையங்கோட்டை பிஷப் டேவிட்,  மதுரையிலிருந்து குருசாமி வழக்கறிஞர் இவ்வளவு பேரும் இருக்கிறோம்ன்னேன். போயிட்டு  வாரன்யா எல்லா நல்லபடியா நடக்கட்டுன்னு சொல்லிட்டுப் போனாரு.&lt;/p&gt; &lt;p&gt;இரண்டு நாள் கழிச்சி போராட்டத்துக்கு எதிரா அவருடைய சன் டிவி பேட்டி வந்தவுடன்  நான் அழைத்தேன். போன் எடுக்கல. டாக்டர் லால்மோகனை கூப்பிட்டுக் கேட்டேன். அவரும்  சொன்னாரு. நானும் பேட்டி பார்த்தேன். அதிர்ச்சியா இருந்தது. கேட்டதுக்கு நான்  சொல்லாத டிவியில போட்டுட்டாங்கன்னு சொன்னாரு என்றார்.&lt;/p&gt; &lt;p&gt;இந்த சந்தர்ப்பத்தில் பிஷப் கூப்பிட்டுச் சொன்னாரு உதயகுமார் கவனமாயிரு நம்முடைய  போராட்டத்தை சாதி ரீதியாக பிரிப்பதற்கான வேலைகள் நடக்குது. ஐம்பது லட்ச ரூபாய்  இதற்குக் கைமாறியுள்ளதா எனக்குத் தகவல் வருது. உளவுத்துறையில் இருந்து  கவனமாயிருக்கச் சொன்னாரு. இதை யார் செய்வாங்கற்கது குழப்பமாக இருந்தது. &lt;/p&gt; &lt;p&gt;இப்ப கடைசியா நான் அணுவுலைக்குள்ள போய்ப் பார்த்தேன். ரொம்ப பாதுகாப்பா  இருக்குன்னு வந்து அறிக்கை விடுகிறார். இதுபோலத்தான் சரத்குமாரும் டெல்லியில் என்னை  பெருமிதப்படுத்தினார். இப்ப தலைகீழாயிட்டார்.&lt;/p&gt; &lt;p class="style167"&gt;தீராநதி : கூடங்குளம் போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்தியதில்  உங்கள் பங்கென்ன?&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;உதயகுமார் : &lt;/strong&gt;2001ல இருந்து இதுவரைக்கும் அணுசக்தி பற்றி  தொடர்ச்சியாக எழுதுவது பேசுவது என்று செயல்படுகிறேன். அணு இயற்பியல், பொருளாதாரம்  அணு அரசாங்கம், அணு வியாபாரம் அரசியல் உலகளாவிய அணுசக்தி ஒப்பந்தங்கள் என்று  பார்த்துப் போகும்போது இது எவ்வளவு சிக்கலான குழப்பம் நிறைந்த பொருள். இது  மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல் படித்த மக்களுக்கே புரியாத ஒரு விஷயத்தை  தனிப்பட்ட நலனுக்காக உபயோகிக்கிறாங்க. உருவாக்குறாங்கன்னு தெரிஞ்ச பிறகு எனக்கு  உந்துதல் வந்து இதுபற்றிப் பேசுகிறேன். 2001 லிருந்து தொடர்ச்சியாக இதற்காக  செயல்பட்டது தவிர எங்களுக்கு லாபமும் கிடையாது. பின்னணியும் கிடையாது. உண்மையாகவே  சொல்லப்போனால் இதையொரு போராட்டமாக மாத்தணும்னு திட்டமும் கிடையாது.&lt;/p&gt; &lt;p&gt;2007ல் மாற்றம் வந்தது. அதுவரைக்கும் கூடங்குளம் பகுதி மக்களை இந்தத் திட்டத்தை  ஏற்றுக்கொள்ளும்படி செய்து வைத்திருந்தார்கள். பத்தாயிரம் பேருக்கு வேலை  கிடைக்கும். பேச்சிப்பாறை தண்ணி வரும் உங்க ஊரு செழிப்பாகும். வெளியூர்ல இருந்து  ஆட்கள் வருவாங்க. லாட்ஜ் கட்டி வாடகைக்கு விடலம். இப்படி இந்த ஊரு பெரிய  வளர்ச்சியடைந்த ஊராகும். பணம் சம்பாதிச்சிரலாம் என்கிற நம்பிக்கையை மக்கள்கிட்ட  ஏற்படத்தியிருந்தாங்க.&lt;/p&gt; &lt;p&gt;கூடங்குளம் ஊருக்குள்ள நாங்கள் பேசப்போனா அடிக்க வருவாங்க. பெரிய  கூட்டங்கூடிரும். பயந்து ஓடியிருக்கோம். அந்த ஊருக்குள்ளேயே போக முடியல. எல்லாம்  கடலோர ஊர்கள்ல மட்டும்தான் அப்ப வேலை செய்ய முடிந்தது. ஏற்கனவே கடலோரத்தில் வாழ்ந்த  மக்கள் விழிப்புணர்வோட இருந்தாங்க. அணுக்கதிர்வீச்சுன்னா என்ன. கசிவுன்னா என்ன.  விபத்துன்னா என்ன என்பது பற்றியெல்லாம் நாங்களும் அவர்களிடம் பேசியிருக்கிறோம்.&lt;/p&gt; &lt;p&gt;2007 வரையில் ஒரு மாற்றமும் நடக்கல. கூடங்குளத்தில ஒரு வளர்ச்சியும் நடக்கல  பத்தாயிரம் பேருக்கு வேலையும் கிடைக்கல. இச்சந்தர்ப்பத்தில அணுசக்தித் துறை  விளம்பரத்தில் ஒரு வார்த்தை போட்டியிருந்தான். அதுதான் இவனுக்கு ஓஹோ தலையில கைய  வைக்கிறான். ஊரவிட்டுப் போச்சொல்றேன். போட்டுட்டுப் போகவேண்டி வரும் போலருக்கேன்னு  தோணிச்சு ஊர்ல மணியெல்லாம் அடிச்சி ஊரைக் கூட்டி மக்கள் இதுபற்றிப் பேசினாங்க. அப்ப  நான் கென்யா நைரோபியில் ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தேன். போயிட்டு வந்தவுடன்  சுப்பிரமணியன்னு ஒருவர் கூடங்குளம் ஊரைச் சேர்ந்தவர். எங்க ஊருக்குள்ள மாற்றம்  உருவாயிற்று நீங்க வாங்கன்னு கூப்பிட்டார். அதன் பிறகு தான் கூடங்குளம் ஊருக்குள்ள  வந்தோம். அதுவரைக்கும் ஊருக்குள்ள வரமாட்டோம்.&lt;/p&gt; &lt;p&gt;நீங்க சொன்னதையெல்லாம் அப்ப கேட்கல இப்ப புரியதுன்னாங்க. அது வரையில்  இப்பிரச்சினை நாடார். பரவர் பிரச்சினையாக இருந்தது. நாடார்கள் எல்லாம் அதுவரைக்கும்  எப்படி பாத்தாங்கன்னா இது அவனுக்கு பிரச்சினை நம்மள ஒண்ணும் செய்யாது இப்படி.  இப்பதான் முதல்முறையா தெரியுது. இது அவனுக்கு பிரச்சினை நம்மள ஒண்ணும் செய்யாது  இப்படி இப்பதான் முதல் முறையா தெரியுது. இது அவனுக்கு மட்டுமில்ல நமக்கும்  பிரச்சினை அணுக்கசிவுக் கதிர்வீச்சு ஏற்பட்டா என்னாகும்? மீன் உணவு என்னாகும்?  சாப்பாட்டுக்கு பிரச்சினை. அதன் பிறகு ஊர்களுக்குள்ளேயும் போய் பேச ஆரம்பித்தோம்.  கூடங்குளம் செட்டிகுளம் மற்றுமுள்ள நாடார் ஊர்களுக்குள்ளேயும் போவோம். துண்டு  பிரசுரங்கள் கொடுப்போம்.&lt;/p&gt; &lt;p&gt;எங்களுக்கு எந்தவித நிதியுதவியும் கிடையாது. எந்த அறக்கட்டளைகளிடமிருந்தும்  தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் காசு வாங்கல. சில தனிப்பட்ட நபர்கள்  உதவியிருக்காங்க. நாங்கள் எங்கள் சொந்தப் பணத்தில் தான் வருவோம்.&lt;/p&gt; &lt;p&gt;2011ல ஜப்பான்ல ஃபுகுஷிமா நடந்தது நல்ல திருப்புமுனை. அதன் பிறகு மக்களுக்கு.  இவனுக சும்மா சொல்லல. இவனுக சொன்னதெல்லாம் நடக்குதுன்னு எண்ணம் உறுதிப்பட்டது.  அணுவுலை வெடிக்கும். வெடிச்சா சுற்றுவட்டார 30 கிலோமீட்டருக்கு இடத்திலிருந்து  அப்புறப்படுத்துவாங்க ஊரைவிட்டுப் போகணும் அகதியா வாழணும். இந்தப் பயலுக  சொன்னதெல்லாம் நடக்குது என்று வந்தது. அது எங்களுடைய மதிப்பை படுபயங்கரமாக  மக்களிடம் அதிகப்படுத்தியது.&lt;/p&gt; &lt;p&gt;1988ல ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்ட வர்றதாயிருந்தது. இன்று 2011 கிட்டத்தட்ட 23  வருடமாச்சி. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகள் ஆகுது. இவ்வளவு நாளில்லாமல் அணுசக்தித்  துறை சொல்றான் கூடங்குளம் இயங்கப்போகுதுன்னு. அட அறிவு கெட்டவனுங்களா கொஞ்சமாவது  புத்தி இருந்தா ஃபுகுஷிமா? ஃபுகுஷிமா விபத்தை நீங்க கொடுத்த டிவி வழியாகவே  ஒவ்வொருவரும் பார்த்துவிட்டு சமயம் நானாக இருந்திருந்தால் சும்மா இருங்கடே பிறகு  பாத்துக்கிடலான்னு சொல்லியிருப்பேன். 23 வருஷமா கிடந்தது. சவம் இன்னும் ஒரு வருஷம்  கிடக்கட்டும் என்றிருப்பேன். ஆனால் இவன் இந்த சந்தர்ப்பத்தில் ஆரம்பிக்கிறேன்  என்றான்.&lt;/p&gt; &lt;p&gt;இரண்டாவது ஜூன்ல 1ம் தேதி பரிச்சாத்த ஓட்டம் ஃபுகுஷிமா நடந்து  மூணுமாசத்துக்குள்ள இவனுகளுக்கு அறிவைப் பாருங்க. இவனுங்கெல்லாம் விஞ்ஞானி ஜூலை  ஒண்ணாந் தேதி மாதா கோவில் முன்னால உண்ணாவிரதம் வச்சோம். எங்களுக்கு இந்த தேதின்னு  தெரியாது. எங்களுக்கு இவங்க எந்தவித அறிவிப்பும் கொடுக்கல. தற்செயலான உண்ணாவிரதம்  அது.&lt;/p&gt; &lt;p&gt;அடுத்த நாளையில இருந்து கடபுட கடபுடன்னு அணு உலையில் இருந்து பலத்த சத்தம் புகை  போக்கியில இருந்து கட்டுக்கடங்காத ஆவி இதையெல்லாம் கடலோர மக்கள் எல்லோரும்  பாத்தாங்க. அப்பதான் இத இப்படியே விட்டா சரிப்படாதுன்னு மக்களுக்கு எண்ணம்  உறுதிப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் கூடங்குளத்தில் திரண்டாங்க.  அணுவுலையிலிருந்து எழும் சத்தம் எப்படியிருக்கும்னா குட்டுவத்தில் தண்ணிய சுழல  விட்டு வர்ற சத்தத்த பத்தாயிரம் மடங்கு பெருக்குனீங்கன்னா வர்ற சத்தத்தை ஒத்தது அது  உலகம் இடிஞ்சி தலையில விழுற மாதிரி சத்தம் கடுமையான சத்தம்.&lt;/p&gt; &lt;p&gt;கூடங்குளத்தில் இருந்து கூப்பிட்டாங்க. அப்பதான் ஃபுகுஷிமாவுக்கு நான் 15  நாட்கள் போயிட்டு வந்திருந்தேன். போயிட்டு வந்த அடுத்த நாளு ஆகஸ்ட் 11 என்ன  நடக்குதுன்னு பார்த்திட்டு வருவோம்னு வந்தா. ஆயிரக்கணக்கில் மக்கள்  திரண்டிருக்காங்க. இந்த அணுவுலைகள் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். அதற்குரிய  ஏற்பாட்டைச் செய்யுங்கள்னு மக்கள் சொல்றாங்க. அங்க நாங்க மக்களோட  பேசிட்டிருக்கும்போதே செய்தி வருது. இடிந்த கரையில் கோயில் மணியடிச்சி  ஊரக்கூட்டுறாங்க. உடனடியாக வாங்கன்னு. உடனே இடிந்தகரைக்கு வந்தோம். ஃபாதர் பங்களா  முன்னாடி ஏகப்பட்ட கூட்டம் இடிந்தகரையில் கிட்டத்தட்ட பாதி ஊர் நிக்குது.&lt;/p&gt; &lt;p&gt;அப்பத்தான் உடனடியாக ஆகஸ்ட் 18ம் தேதி உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்வோம்னு  தீர்மானித்தோம். வேறு எந்தவிதமாகவும் மக்களைத் திரட்டவில்லை. ஆகஸ்ட் 16ந் தேதி  இருபதினாயிரம் மக்கள் கடலோரப் பகுதி மக்கள் அருகில் உள்ள நாடார் கிராமங்கள்ல  இருந்து என்று மக்கள் வந்து திரண்டாங்க. அந்த சூழ்நிலையிலும்  செட்டிக்குளத்துக்காரன் வரல. அந்த ஊர் தலைமையில் இருந்தவர்கள் அணுவுலை ஆதரவுக்  கொள்கை சார்ந்தவர்கள். இப்படி முதல்நிலை உண்ணாவிரதப் போராட்டம் மிகப்பெரிய  வெற்றியாக அமைந்தது.&lt;/p&gt; &lt;p class="style169"&gt;&lt;strong&gt;நேர்காணல் சந்திப்பு: லட்சுமி மணிவண்ணன்,  கிருஷ்ணகோபால்.&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p class="style169"&gt;&lt;strong&gt;தொகுப்பு: ரோகிணி&lt;br /&gt;படங்கள்:  விஸ்வகர்மன்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;font class="style168"&gt;நன்றி: தீராநதி &lt;/font&gt;&lt;/td&gt;&lt;/tr&gt; &lt;tr&gt; &lt;td class="style149" align="left" valign="top"&gt; &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4722080712196357658-2531176482029877250?l=thamizhini76.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/2531176482029877250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4722080712196357658&amp;postID=2531176482029877250' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/2531176482029877250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/2531176482029877250'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/2012/02/blog-post.html' title=''/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-HesBnS37YsI/TyuKU6Bp7RI/AAAAAAAAAbQ/02kejhXw6_I/s72-c/koodankulam_2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-2374390840552435664</id><published>2012-01-31T22:18:00.000-08:00</published><updated>2012-01-31T22:20:07.406-08:00</updated><title type='text'>ராஜிவ் கொலை</title><content type='html'>&lt;div dir="ltr"&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 102, 102);"&gt;ராஜிவ் கொலை&lt;/span&gt; வழக்கில்  குற்றம்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடியவர் பெரியார் திராவிடர் கழகத்தின்  மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி. அவர் இப்போது ராஜிவ் கொலை வழக்கில் முறையாக  விசாரணை நடத்தப் பெறாமல், பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டதை, வெளியே  கொண்டுவரும் நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். விரைவில் அந்த நூல்  வெளிவரவிருக்கிறது. இது தொடர்பாக ‘டெகல்கா’ வார ஏடு, வழக்கறிஞர்  துரைசாமியின் பேட்டியை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பேட்டியின் தமிழ்  வடிவம் இது.&lt;span id="more-1604"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;கேள்வி : சிவராசன் போபால் நகரத்துக்குப்  போனார் என்றும், ‘TAG’க்கு ரூ.1.71 கோடி தந்ததாகவும் உங்கள் நூலில்  குறிப்பிட்டுள்ளீர்கள். அது என்ன ‘ TAG ’?&lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://www.periyarthalam.com/wp-content/uploads/2012/02/sivarasan-e1328069633176.jpg"&gt;&lt;img class="alignright size-full wp-image-1606" title="sivarasan" src="http://www.periyarthalam.com/wp-content/uploads/2012/02/sivarasan-e1328069633176.jpg" alt="" height="244" width="116" /&gt;&lt;/a&gt;பதில்:  எனக்கும் தெரியாது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார்  வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட சிவராசன் நாட்குறிப்பில், 1991 ஆம் ஆண்டு  மார்ச் 13 ஆம் தேதியிட்ட நாளில் இவ்வாறு சிவராசனால் எழுதப்பட்டிருக்கிறது.  இன்னும் தரவேண்டியது ரூ.45,000 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்த  நாட்குறிப்பு, அரசு தரப்பு சாட்சி ஆவணம் எண்.எம்.ஓ.180) இது தொடர்பாக  சிறப்பு புலனாய்வுக் குழு எந்த விசாரணையும் நடத்தவில்லை. அப்படி  நடத்தியிருப்பார்களேயானால், ராஜீவ் கொலைச் சதியில் மறைந்திருக்கும் பல  சதிகாரர்களை கண்டறிந்திருக்க முடியும். அப்படி எந்த விசாரணையும்  நடக்காமல்போனது வேதனைக்குரியது. இதனால் அப்பாவிகள்  தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். அந்தப் பணம் காசோலையாக தரப்படவில்லை. ரொக்கமாக  வழங்கப்பட்டிருக்கிறது. 1991 மார்ச் 8 ஆம் தேதி சிவராசன் ம.பி.  மாநிலத்தில் இருந்ததாக தனது நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார்.&lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;“மத்திய பிரதேச மாநிலம்&lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;குணா மாவட்டம்&lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;சந்தேரி ஹில்ஸ்&lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;மாளிகை உரிமையாளர்குவாலியர் ராணி&lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;பீகாருக்கு மாற்றப்பட்டுள்ளது”&lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;- என்ற குறிப்புகள் சிவராசன் நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.&lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;மற்றொரு செய்தியையும்  குறிப்பிடவேண்டும். 1992 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி ஆதிரை என்ற பெண்  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். ஆதிரையும் இந்த  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர். சிவராசன் பற்றி தனக்குத் தெரிந்த பல  தகவல்களை தெரிவிக்க விரும்புவதாக, மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆதிரை  தாக்கல் செய்த மனுவில்:&lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;“நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது  சிவராசன் என்பவரை சந்தித்தேன். அவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து,  பிறகு அதிலிருந்து வெளியேறி, அடிக்கடி இந்தியா போய்வந்துகொண்டிருப்பவர்.  எனவே, இந்தியாவிலிருந்து நான் ஜெர்மனிக்குப் போவதற்கு அவரது உதவியைக்  கேட்டேன். நான் இந்தியா வந்து, சிவராசனுடன் தொடர்பு கொண்டேன். அப்போது  சிவராசன் என்னிடம், ‘ஒரு குறிப்பிட்ட பணியை காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம்  ஒப்படைத்துள்ளனர். அதற்காக பெருமளவு பணம் தருவதாகவும், வெளிநாடு ஒன்றில்  வேலை வாங்கித் தருவதாகவும் உறுதி கூறியிருக்கிறார்கள்’ என்று என்னிடம்  கூறினார். இந்த வேலையை செய்து முடிப்பதற்கு, தன்னோடு இணைந்து கொள்ளுமாறும்,  என்னை கேட்டுக் கொண்டார். நான் மறுத்துவிட்டேன். அதற்குப் பிறகு, அவர்  ரகசியங்களை உடைத்து என்னிடம் பேசினார். ‘அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின்  தலைமையகத்தில் நிர்வாகியாக உள்ள கல்யாணசுந்தரம், என்னிடம், இந்த வேலையை  செய்துமுடிக்குமாறு ஒப்படைத்துள்ளார்’ என்று கூறியதோடு, (ராஜிவ் காந்தி மே  21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் வர இருப்பதாகவும், ஸ்ரீபெரும்புதூரிலேயே அவர்  தங்கப் போவதாகவும் தெரிவித்தார். மே 22 ஆம் தேதி (ராஜிவ் கொலை நடந்த  அடுத்த நாள்) சிவராசன் என்னிடம் தொடர்பு கொண்டு தாணுவின் உதவியோடு வேலையை  செய்து முடித்துவிட்டதாக தெரிவித்தார். என்னிடம் டெல்லியில் கல்யாணராமனை  சந்திக்கச் சொன்னார். அவர், எனக்கு ஜெர்மன் போவதற்கான கடவுட் சீட்டு,  விசாவை பெற்றுத் தருவார் என்றார்” – ஆதிரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்  செய்த இந்த மனுவை, எவரும் கவனத்தில் கொள்ளவில்லை. ஆதிரை கூறியது உண்மைதானா  என்பதைக் கண்டறியும் முயற்சிகளிலும் சி.பி.அய். இறங்கவில்லை. ராஜிவ்  சுற்றுப்பயணத் திட்டம் வகுத்தத்திலிருந்து கொலை செய்யப்படும் வரை சதித்  திட்டத்தின் பின்னணியாக வெளியே தெரியாத மர்ம நபர்கள் இருந்துள்ளனர்.&lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;கேள்வி: பெங்களூரில் நடந்த கைது நாடகங்களை உங்கள் நூலில் விவரித்துள்ளீர்கள். அவற்றை எல்லாம் ஏன் மக்களிடம் கொண்டு சொல்லவில்லை?&lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;பதில் : நான் இப்போது, அது பற்றி  விரிவாகக் கூறுகிறேன். 1991 ஜூலை 29 ஆம் நாள் சிறப்புப் புலனாய்வுக்  குழுவின் தலைவருக்கு, பெங்களூர் காவல்துறை ஒரு தகவலைத் தெரிவித்தது.  சிவராசனும் அவரது அணியினர் சுபா உட்பட 7 பேர் பெங்களூர் இந்திரா நகரிலுள்ள  வீட்டில பதுங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் தமிழக  காவல்துறைக்கு ஏற்கனவே தெரியும். கோவையில் சாலை விதிகளை மீறியதற்காக விக்கி  என்பவரை கைது செய்து விசாரித்தபோது அவரே, பெங்களூரில் சிவராசனும், அவரது  தோழர்களும் பதுங்கி இருப் பதைக் கூறிவிட்டார். ஆனால், சிறப்புப்  புலனாய்வுக் குழு நடவடிக்கைகளை மேற்கொள்ள நான்கு நாட்கள் தாமதப்படுத்தியது.  ஜூலை 29 ஆம் தேதியே நடவடிக்கையில் இறங்கியிருப்பார்களேயானால் அதிரடிப்படை  உதவியுடன் சிவராசனை உயிருடன் பிடித்திருக்க முடியும்.&lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;மற்றொரு முக்கிய கேள்வி – சிவராசனுக்கு  பெங்களூரில் பாதுகாப்பான வீட்டை பெற்றுத் தருவதற்கு முன்வந்தது யார்  என்பதாகும். சிவராசன், விடுதலைப்புலிகளிடம் அந்த அமைப்பில் இருந்த  காலத்தில் பயிற்சிப் பெற்றவர் என்பதால், வேதாரண்யம் போய், அங்கிருந்து  கடல்வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்லும் வழிமுறைகள் நன்றாகவே  தெரிந்திருக்கும். வழக்கத்துக்கு மாறாக அவர், பெங்களூர் சென்றது ஏன்? யாரோ,  சிலர், பெங்களூர் பாதுகாப்பாக இருக்கும் என்று சிவராசனுக்கு உறுதி  தந்திருக்கிறார்கள். அந்த வீட்டில், சிவராசன் பிணமாகக் கிடந்த இடத்தின்  அருகே 9 எம்.எம். கைத் துப்பாக்கி மற்றும் ஏ.கே. 47 துப்பாக்கி கிடந்தது.  அந்த ஆயுதங்களை சிவராசனுக்கு வழங்கியது யார்? இது பற்றி சிறப்புப்  புலனாய்வுக் குழு எந்த விசாரணையும் நடத்தவில்லை. இறந்து போனவர்  நீதிமன்றத்தில் வந்து பேச முடியாது அல்லவா?&lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;கேள்வி : அப்படியானால், சிறப்புப் புலனாய்வுக் குழுவும், காங்கிரசும், கொலைக்குப் பின்னால் நடந்த சதியை மறைப்பதாகக் கூறுகிறீர்களா?&lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;பதில்: ஆம், அப்படித்தான் நான்  நம்புகிறேன். ராஜிவ் குண்டுவெடிப்பில் இறந்ததிலிருந்தே சாட்சிகளை  முடக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன. இது ஏதோ  தற்செயலாக நடந்தவை அல்ல; திட்டமிட்டே நடந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில்  காவல்துறை அரிபாபுவின் கேமிராவைக் கைப்பற்றியது. உடனே கேமிராவின்  புகைப்படச் சுருளைக் கழுவிப் பார்த்தால், 5 மணி நேரத்துக்குள்ளேயே  கொலையாளிகளைக் கண்டறிந்திருக்கமுடியும். அப்படி எதுவும் செய்யவில்லை.  ஆனால், நான்கு நாட்கள் கழித்து இந்த புகைப்படம், மே 25 ஆம் தேதி ‘இந்து’  நாளேட்டில் வெளிவருகிறது. எப்படி கிடைத்தது என்பது மர்மம். அதிலும் அந்தப்  புகைப்படத்தில் சிவராசன் உருவம் மறைக்கப்பட்டது. மே 29 வரை சிவராசன் படத்தை  ‘இந்து’ வெளியிடவில்லை. இந்த வழக்கில் மிகவும் முதன்மையான சாட்சி, ஆவணம்,  இந்தப் புகைப்படம்தான். இந்தப் படம், ‘இந்து’ ஏட்டுக்கு எப்படி கிடைத்தது  என்பதை, எவருமே ஆராயவில்லை. அதற்குப் பிறகு என்ன நடந்தது? ஸ்ரீபெரும்புதூர்  நிகழ்ச்சியை மூன்றுபேர் தனித்தனியாக வீடியோவில் பதிவு செய்தார்கள். அந்த  மூன்று வீடியோ பதிவுகளும் சிதைக்கப்பட்டு, காட்சிகள் நீக்கப்பட்டன. இதற்கு  சிறப்புப் புலனாய்வுக்குழு தந்த விளக்கம் என்னவென்றால், எதோ தவறுதலாக  காட்சிகள் அழிந்துவிட்டன என்பதாகும். புலனாய்வுக் குழுவின் வலிமையே இல்லாத,  இந்த விளக்கத்தை என்னால் ஏற்கவியலாது.&lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;கேள்வி : சரி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது ஏன், இதை நூலாக எழுத முன் வந்துள்ளீர்கள்?&lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;பதில்: எனக்கு இப்போது வயது 69. நான்  1970 ஆம் ஆண்டிலிருந்து வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறேன். ராஜிவ்  வழக்கை முன்வைத்து ஒரு நூலை எழுத வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. இந்த  வழக்கில் பல தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக சிறையில்  அடைக்கப்பட்டபோது, அவர்களுக்காக நான் வாதாட முன்வந்தேன். சென்னை  உயர்நீதிமன்றத்தில் சட்டவிரோத காவலில் இருப்பவர்களுக்காக ‘ஆட்கொணரும்’  (ஹேபியஸ் கார்பஸ்) மனுக்களை தாக்கல்செய்தேன். அந்த கட்டத்தில்தான், இந்த  வழக்கில் என்னை இணைத்துக்கொள்ளும் சூழ்நிலை உருவானது. நான் தாக்கல் செய்த  மனுவின் காரணமாக சட்டவிரோத காவலில் இருந்த தி.மு.க.வினர் விடுதலை  செய்யப்பட்டனர். பின்னர், நளினி தனக்காக வாதாடுமாறு கேட்டுக்கொண்டார். நான்  வழக்கை எடுத்துக் கெண்டபோதே இது வெற்றிப்பெறமுடியாத வழக்கு என்று எனக்குத்  தெரியும். காரணம், நீதிமன்றமே குற்றம்சாட்டப்பட்டவர்களை தண்டிக்கவேண்டும்  என்ற மனநிலையில் இருந்தது. சட்டங்களுக்கு எல்லாம் மேலான சர்வ அதிகாரம்  கொண்ட அமைப்பாகக் கருதியே புலனாய்வுத்துறையும் செயல்பட்டது. ஊடகங்களும்  மக்கள் மனநிலையும்கூட உண்மைகளை பார்க்காமல், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு  எதிராகவே இருந்தது. நளினி வழக்கில், நான் நேர்நின்றபோது, நாளொன்றுக் ரூ.50  மட்டுமே எனக்கு தருவதற்கு அரசு முன் வந்தது. நான் வழங்கும் சட்ட உதவிக்கு  ஓரளவு நேர்மையான ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில்  முறையீடுசெய்தேன். 8 ஆண்டுகாலம் இந்த வழக்கிற்காக நான் போராடினேன். அனைத்து  ஆவணங்களையும், சாட்சியங்களையும் முழுமையாகப் படித்தேன். 266 அரசு தரப்பு  சாட்சியங்களையும் படித்தேன். இவை எளிமையான வேலைகள் அல்ல. இந்த காலத்தில்  வேறு வழக்குகளில் நான் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு பிரபல வழக்கறிஞராக  இருந்த நான், பெரும் தொகையை ஈட்டிருக்கமுடியும். அதைப் பற்றி எல்லாம்  கவலைப்படாது, எதிர்நீச்சல் போடவே முடிவுசெய்தேன். இந்த வழக்கிற்காக எனது  நேரத்தையும், உழைப்பையும் கடமையாக அர்ப்பணித்த நான், இந்த வழக்கு  விசாரணையில் நடந்த முறைகேடுகளை உலகத்தின் பார்வைக்கு கொண்டு வரவேண்டும்  என்று விரும்பியே இந்த நூலை எழுத முன் வந்தேன். 19 அப்பாவிகள் 8 ஆண்டுகாலம்  பரோல் கூட மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தால்  விடுதலை செய்யப்பட்டார்கள். அதே நேரத்தில், ராஜிவ் கொல்லப்பட்டதில் எனக்கு  இன்றளவும் உடன்பாடில்லை. அதை நான் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.&lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;(‘தெகல்கா’ 21.1.2012)&lt;/div&gt; &lt;/div&gt;  &lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://www.periyarthalam.com/wp-content/uploads/2012/02/02022012.pdf"&gt;பெரியார் முழக்கம் மின்னிதழ் 02 பெப்ரவரி 2012&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4722080712196357658-2374390840552435664?l=thamizhini76.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/2374390840552435664/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4722080712196357658&amp;postID=2374390840552435664' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/2374390840552435664'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/2374390840552435664'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/2012/01/blog-post_31.html' title='ராஜிவ் கொலை'/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-2426472276358678893</id><published>2012-01-22T22:03:00.000-08:00</published><updated>2012-01-22T22:09:38.649-08:00</updated><title type='text'>தேசியத்தலைவர் உயிரோடுதான் உள்ளார்</title><content type='html'>ஈழத்தின் இன்றைய நிலைமை என்ன? அங்கே இருந்து தமிழகத்தில் தன்னுடைய சொந்தங்களைப் பார்க்க வந்த தமிழ்க் கவி என்ற பெண்ணைச் சந்தித்தோம்.&lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; மீண்டும் அவர் ஈழத்தின் வன்னிப் பகுதிக்குச் செல்ல வேண்டிய வாழ்க்கை  நெருக்கடி இருந்தாலும், அதிக உணர்வுடன் பேசியது ஆச்சர்யம் கொடுத்தது!  கவிஞர், எழுத்தாளர், தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித்  தயாரிப்பாளர்.&lt;/p&gt;&lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px" align="center"&gt; &lt;img alt="" border="0" /&gt;&lt;/p&gt;&lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt;பெண்ணியவாதி  என்ற பல்வேறு முகங்களைக்கொண்ட தமிழ்க் கவி, போருக்குப் பின்னர் வதை  முகாமில் அடைக்கப்பட்டு, இப்போது வன்னி நகரில் ராணுவக் கட்டுப்பாட்டுப்  பகுதியில் வசித்துவருகிறார்.&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt;அவருடன் உரையாடியதில் இருந்து.&lt;/p&gt;&lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; நீங்கள் சந்தித்த ஈழத்துக் கொடுமைகள் என்னென்ன?'&lt;/p&gt;&lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt;பதுங்கு  குழியே படுக்கும் பாய் ஆகவும் செத்துவிழும் பாடையாகவும் மாறிப்போனது  எங்களது வாழ்க்கை. ஆளுக்கு ஒரு மாற்றுத் துணி, குழந்தைகளுக்குக் கொஞ்சம்  பால், குடிக்கச் சிறிதளவு தண்ணீர், கொஞ்சம் பருப்பு என இதை மட்டுமே  தூக்கிக்கொண்டு... ஷெல் அடிக்கும் திசைக்கு எதிராக...　காற்று அடிக்கும்  திசையை நோக்கிச் சென்றுகொண்டே இருப்போம்.&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt;ஓர்  இடத்தைத் தேர்ந்து எடுத்து அங்கு பதுங்கு குழி தோண்டுவோம். குழந்தைகளை  அதில் படுக்கவைத்துவிட்டு, நாங்கள் களைப்பு தீருவதற்காகக் குழியின் மேல்  அமர்ந்து இருப்போம்.&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; திடீரென  ஷெல் தாக்குதல் ஏற்பட்டால், குழிக்குள் குதித்து விடுவோம். சில இடங்களில்  மேற்கூரை அமைத்து, அதன் மேல், மணல் மூட்டைகளைவைத்து பாதுகாப்பாகச் சில  நாட்கள் வசித்தும் இருக்கிறோம்.&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt;அந்த  நேரங்களில், உணவுக்காக நாங்கள் பட்டபாடு எதிரிக்குக்கூட நேரக் கூடாது.  ஆங்காங்கு இருந்த கிணறுகள் எங்கள் தாகத்தையும் பல நேரங்களில் பசியையும்  தணித்தன.&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; பெரியவர்கள்  நாங்கள் பல நாட்கள் பட்டினி கிடந்தாலும், பாலுக்கு அழும் குழந்தையை என்ன  செய்வது? ரூ. 245 மதிப்புள்ள பால் மாவுப் பைகள் ரூ.2,000 வரை விற்கப்பட்டன.&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; கடைசியாக,  அது ரூ. 3,000-க்குப் போய்விட்டது. சாயத் தண்ணீர் குடித்துதான் எங்கள்  பிள்ளைகள் பிழைத்தன. எங்கள் குடும்பம் ஓர் இடத்தில் வசித்தபோது, என் மகன்  இறந்துவிட்டதாகத் தகவல் சொன்னார்கள்.&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt;அந்த  நேரத்தில் நான் என் பேரப் பிள்ளைகளுக்கு பால் மாவு வாங்குவதற்காக  அலைந்துகொண்டு இருந்தேன். என் கவனம் முழுவதும் கதறிக்கொண்டு இருந்த  குழந்தைகள் மீதே இருந்ததால், அவர்கள் கூறிய தகவலைக் கேட்டும், 'இங்கு எங்கே  பால் கிடைக்கிறது?&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; என்றுதான் விசாரித்துக்கொண்டு இருந்தேன். ரொம்ப நேரம் அலைந்து கொஞ்சம் பால் மாவு வாங்கி வந்து குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டேன்.&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt;அன்று  இரவுதான், திடீரெனத் தோன்றியது. மகன் இறந்துவிட்டதாகச் சொன்னார்களே  என்று!சற்றுத் தொலைவில் என் மகள் ஒரு பதுங்கு குழியில் இருந்தாள்.&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; உடனே,  சென்று அவளுக்குத் தகவல் சொன்னேன். அப்போதுகூட எங்களுக்கு அழுகை வரவில்லை.  இதுதான் அனைத்து மக்களின் மனநிலை. இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்குக்  கண்ணீர் என்பதே கிடையாது. அது எந்தக் காலத்திலோ வற்றிவிட்டது.''&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt;நீங்கள் பிரபாகரனைச் சந்தித்து இருக்கிறீர் களா?'&lt;/p&gt;&lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தேன்.  அங்கு, கிராமியக் கலை நிகழ்ச்சிகள், தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை  விளக்கும் நிகழ்ச்சிகளைத் தயாரித்தேன். பல நாடகங்களில் நடித்தும்  இருக்கிறேன்.&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; அந்த  நிகழ்ச்சிகளைப் பார்த்த தலைவர், என்னைப் பல முறை அழைத்துப் பேசிப்  பாராட்டி இருக்கிறார். நான்கு முறை அவரிடம் விருது வாங்கி இருக்கிறேன்.  மூன்று முறை அவருடன் சேர்ந்து உணவருந்தி இருக்கிறேன்.&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; என்  நிகழ்ச்சிகள் குறித்த அவரது கருத்தை, பிறர் மூலமும் சொல்லி அனுப்பி  என்னைப் பரவசப்படுத்தி இருக்கிறார். தமிழ்ப் பண்பாடு குறித்து நிறையப்  பேசுவார். அவர் என்னுடைய விசிறி என்று சொல்லியதாகச் சொல்வார் கள்.&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; ஒரு  முறை மேடை நாடகம் ஒன்று நடத்தினேன். அதற்கு வந்திருந்தவர், நிகழ்ச்சி  முடிந்தவுடன் என்னை அழைத்துப் பாராட்டினார். அப்போது, நீண்ட நேரம்  பேசிக்கொண்டு இருந்தார்.&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt;அவருடன்  வந்திருந்த மெய்க்காப்பாளர்கள், 'அவர் அப்படித்தான் பேசிக்கொண்டே  இருப்பார். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக நாங்கள் இதற்கு மேல்  அனுமதிக்க முடியாது’ என்று கூறினர். தலைவரும் சிரித்துக்கொண்டே  விடைபெற்றுச் சென்றார். தலைவரைப் பற்றிய நினைவுகள், அவருடைய கருத்துக்கள்  என்னுள் இன்னும் ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கின்றன... இருக்கும்.'' &lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt;பிரபாக இறந்துவிட்டதாகச் சொல்வது உண்மையா?''&lt;/p&gt;&lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; ''2009 மே 19-ம் தேதி அவர் இறந்துவிட்டதாக ராணுவம் அறிவித்தது. அதற்கு  நான்கு நாட்களுக்கு முன்பு 14-05-2009-ம் தேதி, தனது நண்பர்களுடனும்  வளர்ப்பு நாய்களுடனும் கடற்கரையில் தலைவர் பிரபாகரன் நடந்து செல்வதை நான்  பார்த்தேன்.&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; அப்போது,  அவர் சிவிலியன் உடையில்தான் இருந்தார். (அதாவது புலி களின் சீருடையில்  இல்லை!) ஆனால், 19-ம் தேதி பிரபாகரனைச் சுட்டுக் கொன்றுவிட்டதாக ராணுவம்  அறிவித்தது. அது, போர் முனையில் இருக்கும் புலிகளை நிலைகுலையவைக்க ராணுவம்  செய்த சதி என்றுதான் நம்பினோம்.&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; அதற்கு  முன்பே போர்க்களத்தில் இருந்து அவரை வெளி யேற்றத் தளபதிகள் எவ்வளவோ  முயற்சி எடுத்தனர். ஆனால், தலைவர் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. 'கடைசி வரை  தமிழர்களுக்காகப் போராடுவேன்’ என்று கூறிவிட்டார்.&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; குண்டடிபட்டு  இறந்தது பிரபாகரன்தானா என்று இலங்கை ராணுவத்துக்கு மட்டும் அல்ல... அவர்  உடலை அடையாளம் காட்டியவர்களுக்கும் சந்தேகம் இருக்கிறது. அதனால்தான்,  இன்னமும் மரணச் சான்றிதழ் தரவில்லை.&lt;/p&gt; &lt;p style="padding: 0px; margin-bottom: 10px; font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;''இறுதிக்கட்டப் போர் நடந்த நேரத்தில் பிரபாகரனுடைய திட்டம் என்னவாக இருந்தது என அறிவீர்களா?''&lt;/p&gt;&lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;போர் உக்கிரம் அடைந்திருந்த நேரத் திலும் நம்பிக்கையை இழக்காமல் மன  உறுதியோடுதான் இருந்தார். 2008-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி இயக்கத்தின்  அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய தலைவர் பிரபாகரன், 'இப்போது  நம்மிடம் தேவையான அளவுக்கு ஆட்கள் இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="padding: 0px; margin-bottom: 10px; font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt;ஆனால்,  ஆயுதங்கள் இல்லை. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் உதவியுடன் இலங்கை  ராணுவம், நவீன ஆயுதங்களால் நம்மைத் தாக்குகிறது. இருந்தாலும், நாம் கடைசி  வரை போராடுவோம். நான் வீர மரணம் அடைந்தால், இந்த உரிமைப் போரைத் தமிழர்கள்  நிறுத்திவிடக் கூடாது.&lt;/p&gt; &lt;p style="padding: 0px; margin-bottom: 10px; font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt; எனக்கு  அடுத்து யார் இருக்கிறார்களோ... அவர்கள் ஒற்றுமையுடன் இந்தப் போரைத்  தொடர்ந்து நடத்த வேண்டும். இதுதான் நமது லட்சியம்’ என்று முழங்கினார். 10  நிமிடங்கள்தான் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது நானும் இருந்தேன்.  தலைவர் உடனே கிளம்பிச்சென்றுவிட்டார்.&lt;/p&gt; &lt;p style="padding: 0px; margin-bottom: 10px; font-weight: bold; color: rgb(51, 51, 255);"&gt; அடுத்த  சில நிமிடங்களில் அந்த இடத்தில் கூரை பிரிக்கப்பட்டு, அங்கு கூட்டம்  நடந்ததற்கான அடையாளமே இல்லாத அளவுக்குத் தடயங்கள் அழிக்கப்பட்டன.',&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt;இன்றைய  நிலைமைகளைச் சொல்லுங்கள். மீள்குடியேற்றம் என்பது சரியாகத்தான் நடக்கிறதா?  ராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டு இருந்த தமிழர்கள் தங்களுடைய சொந்த  இடத்துக்கு முழுமையாகத் திரும்பிவிட்டார்களா?''&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt;50  சதவிகிதத் தமிழர்கள்தான் இது வரை விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர்.  அவர்களுக்கும் வீடுகள் இன்னும் கட்டித் தரப்படவில்லை. நாலு தகர ஷீட்,  நான்கு கொம்புகள், நாலு மூட்டை சிமென்ட் இவைதான் கொடுக்கின்றனர்.&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; இதை  வைத்து நாமாக வீடுகளைக் கட்டிக்கொள்ள வேண்டும். இலங்கை ராணுவம் இதுவரை 50  வீடுகளைத்தான் தமிழர்களுக்குக் கட்டித் தந்துள்ளது. தமிழர்கள் வசித்த  பகுதிகளில், சிங்களர்களும் ராணுவத்தினரும் குடி அமர்த்தப்பட்டு உள்ளனர்.&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; ராணுவத்தினர்  பல்வேறு தொழில்களைத் தொடங்கிவிட்டனர். சலூன் கடைகூட ராணுவ வீரர்கள்தான்  நடத்துகின்றனர். போரில் ஏராளமான குண்டுகள் விழுந்ததால், பல இடங்களில்  விவசாயம் செய்யும் தன்மையை நிலம் இழந்துவிட்டது. தமிழர் கள் கூலி  வேலைக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. அவர்களின் அக வாழ்க்கை மட்டும்  அல்ல... புற வாழ்க்கை யும் இருட்டாகத்தான் இருக்கிறது.''&lt;/p&gt; &lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt;''இப்படிப்பட்ட நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறும் என்று நம்புகிறீர்களா?''&lt;/p&gt;&lt;p style="padding-top:0px;padding-right:0px;padding-bottom:0px;padding-left:0px;margin-bottom:10px"&gt; நிச்சயமாக! இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே  வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய  தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட  அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன்னும் வேகமாகப் போராடும்!''&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4722080712196357658-2426472276358678893?l=thamizhini76.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/2426472276358678893/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4722080712196357658&amp;postID=2426472276358678893' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/2426472276358678893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/2426472276358678893'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/2012/01/blog-post_22.html' title='தேசியத்தலைவர் உயிரோடுதான் உள்ளார்'/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-4325639613186803972</id><published>2012-01-10T18:26:00.000-08:00</published><updated>2012-01-10T18:37:40.308-08:00</updated><title type='text'>ராஜிவ் கொலை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-i6FSIdk3SFk/Twz0mf1NYNI/AAAAAAAAAag/uO83AOZCZMo/s1600/kittanna.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://1.bp.blogspot.com/-i6FSIdk3SFk/Twz0mf1NYNI/AAAAAAAAAag/uO83AOZCZMo/s400/kittanna.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696196570933715154" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-20B-PKBbVM8/Twz0dpJg3EI/AAAAAAAAAaU/tmJajiZYoro/s1600/rajiv02.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 191px; height: 205px;" src="http://1.bp.blogspot.com/-20B-PKBbVM8/Twz0dpJg3EI/AAAAAAAAAaU/tmJajiZYoro/s400/rajiv02.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696196418815974466" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-D6puppgPHzo/Twz0WhKjLrI/AAAAAAAAAaI/EKA__tfN3HA/s1600/ind1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 214px; height: 345px;" src="http://4.bp.blogspot.com/-D6puppgPHzo/Twz0WhKjLrI/AAAAAAAAAaI/EKA__tfN3HA/s400/ind1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696196296413753010" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p style="text-align: justify;"&gt;பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின்  தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்புக்கு அய்யா பழ.நெடுமாறன் தலைமையில் எடுத்த  முயற்சிக்கும், இந்த வரலாற்றுச் சாதனைக்கும் நம் வாழ்வு சார்பில் நன்றி  தெரிவிக்கப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி படுகொலையில் இன்னும் அவிழாத மர்ம  முடிச்சுகள் பற்றி அவர் வழங்கிய சிறப்பு பேட்டி.&lt;span id="more-1292"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின்  தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின்  தூக்குத் தண்டனை ரத்தாகுமா?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;a href="http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/10/nedumaran300.jpg"&gt;&lt;img class="alignright size-full wp-image-1293" title="nedumaran300" src="http://www.periyarthalam.com/wp-content/uploads/2011/10/nedumaran300.jpg" alt="" height="255" width="300" /&gt;&lt;/a&gt;சென்னை  உயர்நீதி மன்றத்தில் நாங்கள் வழக்குத் தொடர்ந்திருந்தோம். இந்த மூவரின்  தூக்குத் தண்டனையை உறுதி செய்து ஏறக்குறைய 11 ஆண்டு காலமாகிவிட்டது.  ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் சில தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன.  தீர்ப்புத் தண்டனை உறுதி செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு  காலதாமதமானால் அது நிறைவேற்றப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றமே  தீர்ப்பளித்திருக்கின்றது. இவர்கள் விசயத்தில் ஏறக்குறைய 11 ஆண்டுகள்  ஆகிவிட்டன. தூக்குத் தண்டனை என்பது சில நொடிப்பொழுதில் உயிர்  போய்விடும். ஆனால் 11 ஆண்டு காலம் இந்த மூவரும் தூக்கு மரத்தின் நிழலில்  ஒவ்வொரு நொடிப்பொழுதும் துடிதுடித்து வாழ்ந்திருக்கிறார்கள். இதுவே  இவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை. இதற்குமேல் ஒரு தண்டனை என்பது இயற்கை  நீதிக்கு எதிரானது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இரண்டாவது, அவர்கள் கைது செய்யப்பட்டு  இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயுள் தண்டனை என்றாலும் கூட அது பத்து  ஆண்டுகள்தான். இதற்கு மேலும் இன்னொரு தண்டனை என்பது ஒரே குற்றத்திற்கு  இரண்டு தண்டனை என்றாகிவிடும். ஆகவே இது கூடாது என்பதுதான் எங்கள் வாதம்.  தற்போது எட்டு வாரத்திற்கு இடைக்காலத் தடை கிடைத்துள்ளது. எட்டு வாரம்  கழித்து மீண்டும் விசாரணை நடக்கும்போது அவர்களின் தூக்குத் தண்டனை ரத்து  செய்யப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;கடந்த 11 ஆண்டுகளாக இவர்களின் கருணை  மனுவைக் கண்டு கொள்ளாத குடியரசுத் தலைவர் திடீரென்று தள்ளுபடி  செய்திருப்பதில் இலங்கையின் குறுக்கீடு எதுவும் இருப்பதாக நம்புகிறீர்களா?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இதில் இலங்கையின் குறுக்கீடு எதுவுமில்லை.  நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின்  மரண தண்டனையை ஏன் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டு பி.ஜே.பி.  கட்சியின் சார்பில் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது,  அதன் விளைவாக அதற்கு முன்னால் தூக்குத் தண்டனை பெற்ற அனைவரின் மனுக்களையும்  எடுத்து முடிவு செய்ய வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு வந்துவிட்டது. அதன்  விளைவாகத்தான் இந்த நிலை ஏற்பட்டது. ஆனால், அப்சல் குரு உட்பட அனைவரின்  தூக்குத் தண்டனையையும் நாங்கள் ரத்து செய்கிறோம் என்று குடியரசு  தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்திருக்க வேண்டும். இந்த அரசுக்கு  அந்தத் துணிவும் இல்லை. ஏனென்றால் மகாத்மா காந்தியை தேசத் தந்தையாகப் பெற்ற  நாடு இந்த நாடு. அவர் ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால் இந்தத் தூக்குத்  தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ராஜீவ் காந்தி படுகொலையில் உண்மைக் குற்றவாளிகள் உல்லாசமாக உலவுகிறார்கள் என்று கூறப்படுகின்றதே?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ராஜீவ் காந்தி படுகொலைக்கான விசாரணையைத்  தொடங்குவதற்கு முன்னரே “விடுதலைப் புலிகள்தான் இதைச் செய்தார்கள்’ என்று  அறிவித்துவிட்டுத்தான் புலன் விசாரணையைத் தொடங்கினார்கள். அதற்கு ஏற்றவாறு  அவர்கள் வழக்கை ஜோடித்தார்கள். இந்தக் கொலை நடந்த மூன்றாம் நாள்,  விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலகத்தின் எழுத்தாளராக இருந்த கிட்டு  இலண்டனிலிருந்து “இந்தக் கொலைக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும்  இல்லை’ என்றும், “உண்மையான கொலையாளிகள் பற்றி எங்களிடமும் சில தகவல்கள்  உள்ளன. இந்திய அரசு என்னை அணுகினால் அவற்றையெல்லாம் கொடுப்பதற்கு நான்  தயாராக இருக்கின்றேன்’ என்றும் பகிரங்கமாகவே அறிக்கை கொடுத்தார்.  பத்திரிகைகளில் எல்லாம் இது வந்திருக்கின்றது. ஆனாலும் இந்திய அரசு  சார்பில் அவரை அணுகவே இல்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இரண்டாவதாக, இந்தக் கொலை குறித்து  விசாரணை நடத்துவதற்கு ஓர் உயர் போலிஸ் அதிகாரி இலண்டனுக்குப் போனார்.  அங்கு சில ஆவணங்கள் அவருக்குக் கிடைத்தன. அவைகளும் பத்திரிக்கையில் வந்தன.  ஆனால், இலண்டன் விமான நிலையத்தில் அவர் வைத்திருந்த அந்த ஆவணங்கள் அடங்கிய  சூட்கேசை யாரோ திருடிக் கொண்டு போய்விட்டார்கள் என்று  அறிவித்துவிட்டார். இது பலமான சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த வழக்கில் 26  பேரில் ஒருவராகக் குற்றம் சாட்டப்பட்ட பெங்களூரைச் சார்ந்த ரெங்கநாத்  என்பவர் சிவராஜனுக்கு வாடகைக்கு வீடு பார்த்துக் கொடுத்தார் என்பதுதான்  அவர் மீதான முதல் குற்றச்சாட்டு, அவரை அழைத்துக்கொண்டு சிவராஜன்  டெல்லிக்குப் போயிருக்கிறார். இவரை வெளியே உட்கார வைத்துவிட்டு  சந்திராசாமியைப் பார்த்திருக்கிறார். ஒரு தடவை அல்ல. இரண்டு தடவை. உள்ளே  சந்திராசாமியுடன் என்ன பேசினார் என்பது எனக்குத் தெரியாது என்றும்  ரெங்கநாத் சொல்லியிருக்கிறார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஆனால், சந்திராசாமியைச் சந்தித்தது உண்மை  என்று ரெங்கநாத் சொன்னபோது புலன் விசாரணை அதிகாரிகள் அதனைப் பதிவு  செய்யாமல் அவரை சித்திரவதை செய்தார்கள். “இதை நீ வெளியே சொன்னால் உன்  உயிர் போய்விடும்’ என்று அவரை அடக்கிவிட்டார்கள். பின்னர் அதை அவர்  உச்சநீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலமாக தாக்கல் செய்தார். ஆனால் இன்று வரை  சந்திராசாமியை விசாரிக்கவே இல்லை. அவரைக் கைது செய்ய வேண்டும் என்று நான்  சொல்லவில்லை. ஆனால், அவர்மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டபோது  குறைந்தபட்சம் அவர் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். சந்திராசாமியும்,  சுப்ரமணியசாமியும் இதில் தொடர்புடையவர்கள் என ஒருவர் அல்ல, பல பேர்  குற்றம் சாற்றி விட்டார்கள். ஆனால் இதுவரை நடக்கவில்லை. சந்திராசாமியின்  சீடர்தான் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், ஆகையால் ராஜீவ் கொலையால் ஆதாயம்  அடையக்கூடியவர்கள் யாரோ, அவர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும்.  அப்படியானால் ஆதாயம் அடைந்தது யார்? இந்தக் கோணத்தில் புலன் விசாரணை  அதிகாரிகள் விசாரிக்கவே மறுத்துவிட்டார்கள். ராஜீவ் கொலை யால் உடனடியாக  ஆதாயம் அடைந்தவர் பி.வி. நரசிம்மராவ். இவர் பிரதமரான பிறகு சந்திராசாமி  சம்பந்தமான கோப்புகள் திடீரென்று மாயமாகிவிட்டன. அந்தக் கோப்புகள் எங்கே  போய்விட்டன என்று இதுவரைக்கும் விசாரிக்கவில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஜெயின் கமிஷன் அறிக்கை அமைக்கப்பட்டதன் நோக்கம்தான் என்ன?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ராஜீவ் கொலையில் சில மர்ம முடிச்சுகள்  உள்ளன. அதை அவிழ்ப்பதற்காகத்தான் ஜெயின் கமிசன் அமைக்கப்பட்டது. இந்தக்  கமிசன் தனது விசாரணையின் முடிவில், இன்னும் சில பேரை சி.பி.ஐ. விசாரிக்கத்  தவறிவிட்டது என்றும், எல்லோரையும் இதில் விசாரிக்க வேண்டும் என்றும்  கூறியது. ஜெயின் கமிசனின் ஆணைக்கிணங்க ஒரு சிறப்பு புலன் விசாரணைக்குழு  இந்திய அரசினால் அமைக்கப்பட்டது. அந்த விசாரணைக் குழு இந்தப் படுகொலை  நடந்து இத்தனை ஆண்டுகள் கழிந்தும் இன்னமும் விசாரணையை நடத்திக் கொண்டே  இருக்கிறது. இதையும் எங்கள் வாதத்தில் கேட்கிறோம். சிறப்புப் புலன்  விசாரணைக் குழுவில் வேறு யாரோ சிலர் குற்றவாளிகள் என்று  கண்டுபிடிக்கப்பட்டால், இந்த மூவரையும் தூக்கில் போட்டுவிட்ட நிலையில்  இவர்களின் உயிரைத் திருப்பித் தர முடியுமா? எனவே, அந்த விசாரணைக் குழு  முடிவு வெளிவரும்வரை இதனை நிறுத்தி வையுங்கள் என்று நாங்கள் வாதாடி  வருகிறோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ராஜீவ் காந்தியின் கொலையில் அந்நிய சக்திகளின் தலையீடு உள்ளது என்று நம்பலாமா?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நிச்சயமாக உள்ளது. பாலஸ்தீன விடுதலை  இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத் ராஜீவ் காந்திக்கு இறுதி அஞ்சலி  செலுத்துவதற்காக இந்தியாவிற்கு வந்தபோது டெல்லி பத்திரிகையாளர்களிடத்தில்  “சில அந்நிய சக்திகள் உங்களை ஒழித்துக்கட்ட திட்டமிட்டுள்ளதால் நீங்கள்  ஜாக்கிரதையாக இருங்கள் என்று நான் பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பே  ராஜீவ் காந்தியை எச்சரித்தேன். ஆனால், என்னுடைய எச்சரிக்கையை அவர்  கவனத்தில் எடுக்காமல் போனதால்தான் இந்தப் படுகொலை நிகழ்ந்துள்ளது’ என்ற  உண்மையைச் சொன்னார். இப்படிச் சொன்ன யாசர் அராபாத் பெரிய தலைவர்  மட்டுமன்றி ஒரு நாட்டின் அதிபர். சி.பி.ஐ. அவரைச் சந்தித்து அந்த அந்நிய  சக்திகள் யார் என்பதை விசாரித்திருக்க வேண்டுமா, வேண்டாமா? ஆனால் அதை செய்ய  தவறிவிட்டனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இன்னொன்று, பிரேமதாசா மேல் ஒரு  குற்றச்சாட்டை வைக்கிறேன். பிரேமதாசா குடியரசுத் தலைவராக வந்தபின் இந்திய  அமைதிப் படையைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை  விடுத்தார். ஆனால் ராஜீவ் காந்தி அதனை ஏற்கவில்லை. ஆகவே இந்த இரண்டு  பேருக்கும் ஓர் உரசல் இருந்தது. ஒருவேளை ராஜீவ் காந்தி இந்தத் தேர்தலில்  வெற்றி பெற்று பிரதமராகிவிட்டால் அவர் இந்திய அமைதிப் படையை ஒருபோதும்  திரும்பப் பெறமாட்டார். நமக்குத் தொந்தரவு கொடுப்பார் என்ற அச்சத்தின்  விளைவாக ராஜீவ் படுகொலை நிகழ்ந்திருக்குமோ என்ற சந்தேகமும் இந்தக்  கொலைக்குப் பின்னால் இருக்கிறது. ஆகவே, இதனை எல்லாம் தீர்க்கமாக விசாரிக்க  வேண்டியது புலன் விசாரணைக் குழுவின் கடமை. ஆனால் இதையெல்லாம் அவர்கள்  விசாரிக்கவே இல்லை. ராஜீவ் கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு  பிரேமதாசா படுகொலை செய்யப்பட்டார். அப்படியானால் பிரேமதாசாவின்  படுகொலையில் இந்திய உளவுத்துறையின் கை இருக்கிறது என்ற சந்தேகமும்  இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் விசாரிக்காமல் திரும்பத் திரும்ப விடுதலைப்  புலிகள் மேல்தான் பழி சுமத்தப்படுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்பு  ஏற்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது, “ஒரு பெரிய மரம்  வீழ்கின்றபோது அதைச் சுற்றியுள்ள நிலம் அதிர்வது இயற்கையே’ என்று ராஜீவ்  காந்தி கருத்து சொன்னார். இம்மாதிரியான மனநிலையில்தான் ஈழத் தமிழர்  படுகொலை விசயத்திலும் காங்கிரசார் நடந்து கொள்கிறார்களா?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;காங்கிரசாரைப் பொறுத்தமட்டில் உண்மையை  அறிந்து கொள்வதைவிட பக்தி விசுவாசத்தைக் காட்டுவதுதான் அவர்களுக்கு மிக  முக்கியம். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மீது தங்கள் விசுவாசத்தைக்  காட்டிக் கொள்வதற்காக அவர்கள் எதையாவது பேசுவார்கள். ராஜீவ் காந்தி கொலை  இருக்கட்டும். அது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டிய விசயம். ஆனால், இந்திய  அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி 7000 அப்பாவித் தமிழர்களைப் படுகொலை  செய்தது பற்றி இந்தக் காங்கிரஸ்காரர்கள் யாராவது கவலைப்படுகிறார்களா?  நிச்சயம் கவலைப்பட மாட்டார்கள். மேலும் இந்தப் படுகொலை விசயம்  இவர்களுக்குத் தெரிந்திருக்குமா என்பதும் சந்தேகமே! குதிரைக்குக் கடிவாளம்  போட்டது போன்று அவர்கள் இரு விழிகளையும் மூடிக்கொண்டு, உண்மையைப்  பார்க்கவோ அல்லது அது பற்றி தெரிந்து கொள்ளவோ மறுக்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;தீர்ப்பு நாளில் உயர் நீதிமன்ற வளாகமே  உணர்ச்சியால் நிறைந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. இந்த உயிர் காக்கும்  போராட்டத்தில் தமிழக மக்களின், தமிழக உணர்வாளர்களின் எழுச்சியைப் பற்றி  என்ன நினைக்கிறீர்கள்?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இருபது ஆண்டு காலமாக இந்த வழக்கைப் பற்றி  வெளியான பல தகவல்கள் தமிழக மக்களை உண்மையை தெரிந்து கொள்ள  வைத்திருக்கின்றன. நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய  மூவரையும் இவர்கள் அநியாயமாகத் தூக்கிலிட முயற்சிக்கிறார்கள் என்றுதான்  மக்கள் கருதுகிறார்கள். அதனால்தான் இப்படிப்பட்டதொரு எழுச்சி மக்கள்  மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கொலை வழக்கில் சென்னை தடா நீதிமன்றம்  26 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. உலகத்திலேயே ஒரு கொலைக்கு 26  பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்த சம்பவம் இது ஒன்றுதான். வேறு எந்த  வழக்கிலும் இது செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு நாங்கள் இந்த  வழக்கை எடுத்துச் சென்றதன் விளைவாக 19 பேர் நிரபராதிகள் என்று விடுதலை  செய்யப்பட்டார்கள். 3 பேருக்கு ஆயுள் தண்டனை. ஆக மொத்தம் 22 உயிர்களை  நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நாங்கள் இப்போது கேட்கிற கேள்வி,  சென்னையிலுள்ள தடா நீதிமன்றத்தில், 22 ஆண்டுகளாக என்னென்ன சாட்சியங்கள்,  வாதங்கள் வைக்கப்பட்டனவோ அதை வைத்துதான் 26 பேருக்கும் தூக்குத் தண்டனை  விதிக்கப்பட்டது. அதே வாதங்களையும், சாட்சியங்களையும், ஆவணங்களையும் உச்ச  நீதிமன்றம் ஏற்க மறுத்துத்தானே 19 பேரையும் விடுதலை செய்தது.  அப்படியென்றால் நீதியில் ஏதோ கோளாறு இருப்பதாகத்தானே இதற்கு அர்த்தம்?  அது எப்படி நடக்கிறது? அவர்களுக்காக நாங்கள் வழக்கு நடத்துவதற்கு நிதி  திரட்டி இந்த வழக்கை நடத்தியதால் 22 பேரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது.  வழக்கு நடத்த முடியாமல் போயிருந்தால் அநியாயமாக இந்த 22 உயிர்களும்  பறிக்கப்பட்டிருந்திருக்கும். ஆகவே, நீதி என்பது ஏழைகளுக்கு அல்ல, வசதி  படைத்தவர்களுக்கும், உயர் சாதிக்காரர்களுக்கும்தான் என்றாகிவிட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்த விசயத்தில் பல நாட்களாய் மெளனம்  சாதித்த நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பு குற்றவாளிகளுக்குத்தான்  சாதகமாய் அமையும் என்பதை யூகித்துதான் முதல்வர் கடைசி நிமிடத்தில் தமிழகச்  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார் என்றும் சொல்லப்படுகிறதே!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;என்ன காரணத்திற்காக  நிறைவேற்றப்பட்டிருந்தாலும் இது ஒரு நல்ல வரவேற்கத்தக்க, வரலாற்றுச்  சிறப்புமிக்கத் தீர்மானம். இதை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இவர்கள் மூவரின் உயிர் காக்கும்  விசயத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம்  சாட்டிக் கொள்கின்றனரே. இதில் யார் சொல்வது உண்மை?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்த விசயம் மட்டுமல்ல, எந்தவொரு விசயமாக  இருந்தாலும் இந்த அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எதிரும் புதிருமாக  நிலைப்பாடு எடுத்து மோதிக்கொள்வதையே அவர்கள் வழக்கமாகக்  கொண்டிருக்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;கருணாநிதி நினைத்திருந்தால் இவர்கள் மூவரின் உயிரையும் காப்பாற்ற முயற்சித்திருக்கலாம் என்று ஜெயலலிதா கூறுகிறாரே? அது உண்மையா?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;உண்மைதான். ஏனென்றால், அப்பொழுது தமிழக  ஆளுநராக இருந்த செல்வி பாத்திமா பீவீயிடம் நாங்கள் கருணை மனு கொடுத்தோம்.  அவர் அதை ரத்து செய்துவிட்டார். நான் உடனே வி.ஆர். கிருஷ்ண அய்யரைத்  தொடர்பு கொண்டு “இந்த மாதிரி ஆகிவிட்டதே! என்ன செய்யலாம்?’ என்று  கேட்டபோது, “உயர்நீதி மன்றத்தில் உடனே வழக்குப் போடுங்கள்’ என்று  சொன்னார். இன்று நீதியரசராக இருக்கக்கூடிய சந்துருதான் அன்று எங்கள்  வழக்கறிஞராக வாதாடினார். ஆளுநராக இருந்தாலும், குடியரசுத் தலைவராக  இருந்தாலும் மரண தண்டனையைப் பொறுத்தவரையிலே அல்லது எந்தத் தண்டனையாக  இருந்தாலும் மாற்றுதலுக்கான அதிகாரம் அவர்களுக்குக் கிடையாது.  சம்பந்தப்பட்ட அமைச்சரவை என்ன பரிந்துரை செய்கிறதோ அதை ஏற்றுச் செயல்பட  வேண்டியவர்கள்தாம் ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;எனவே, ஆளுநர் போட்ட உத்தரவு செல்லாது  என்பதுதான் எங்களுடைய வாதம். அதை உயர்நீதி மன்றம் ஏற்றுக்கொண்டு ஆளுநரின்  உத்தரவை செல்லாததாக்கிவிட்டது. ஆகவே, அந்த நான்கு பேரின் கருணை மனுவை  மீண்டும் முடிவு செய்கிற அதிகாரத்தை உயர் நீதிமன்றம் மூலம் அன்றைக்கு  முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்குப் பெற்றுக் கொடுத்தோம். இந்தியாவிலேயே  இது முதல் தீர்ப்பு. அது மட்டுமன்றி, இந்த நால்வருக்கும் இரக்கம்  காட்டுங்கள் என்று 25,00,000 பேரிடம் கையெழுத்துப் பெற்று 50,000 மக்களைத்  திரட்டி என் தலைமையில் ஊர்வலமாகச் சென்றுதான் இதனை கொடுத்தோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இதைச் செய்கிறேன் என்று சொன்ன கருணாநிதி  செய்யவில்லை. ஆனால், நளினிக்கு இரக்கம் காட்டும்படி சோனியா காந்தி கடிதம்  எழுதியதால் நளினிக்கு மட்டும் செய்தார். அன்றைக்கே இவர் அந்த நால்வருக்கும்  செய்திருந்தால் பிரச்சினையே கிடையாது. இந்தச் சிக்கலும் வந்திருக்காது.  ஆனால் கருணாநிதி அப்போது அதைச் செய்யவில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்த விசயத்தில் முதல்வரால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஜெயலலிதா தொடக்கத்தில் ஏன் கைவிரித்தார்?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அந்த அம்மையாருக்கு அதிகாரிகள் சரியாக  வழிகாட்டவில்லை. அரசியல் சட்டத்தின் 72வது பிரிவின்படி குடியரசுத்  தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. அதே அரசியல் சட்டத்தில் 9வது பிரிவில்  ஆளுநருக்கும் அதிகாரம் இருக்கிறது. ஆளுநருக்கு உள்ள அதிகாரம் என்பது  இறைமையுடைய அதிகாரம். அதில் யாரும் தலையிட முடியாது. மத்திய உள்துறை  செயலாளர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார். அதில் குடியரசுத் தலைவர்  ஒரு முடிவு செய்துவிட்டால் அதை மாற்றும் அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது  என்று வாதிடுகிறார்கள். ஆளுநருக்கு உள்ள அதிகாரம் என்பது நர்ஸ்ங்ழ்ங்ண்ஞ்ய்  டர்ஜ்ங்ழ். உள்துறை செயலாளருக்கு உள்ள அதிகாரம் என்பது ஊஷ்ங்cன்ற்ண்ஸ்ங்  டர்ஜ்ங்ழ். இந்த இரண்டில் எவராலும் மாற்றப்பட முடியாத நர்ஸ்ங்ழ்ங்ண்ஞ்ய்  டர்ஜ்ங்ழ், (இறைமையுடைய) அதிகாரம் தான் உயர்ந்தது. ஆளுநரே நினைத்தாலும்  இதனை மாற்ற முடியாது. காரணம் இது அரசியல் சட்டத்தின் மூலம்  வழங்கப்பட்டடிருக்கின்ற அதிகாரம். ஊஷ்ங்cன்ற்ண்ஸ்ங் டர்ஜ்ங்ழ்யைப்  பொறுத்தளவில் மாற்றப்படக் கூடியது. இன்னொரு உள்துறை செயலர் வந்தால் இதனை  மாற்றிக் கொள்ளலாம். ஆக, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இவர்கள் சரியான  தகவலைக் கொடுக்கவில்லை என்பதுதான் என் கருத்து.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட  வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. ஆனால் குற்றம்  செய்பவர்களுக்கு இது சாதகமாய் அமைந்துவிடும் என்ற எதிர்வாதமும்  வைக்கப்படுகின்றதே! இதை எப்படி பார்க்கிறீர்கள்?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இது ஒரு தவறான கருத்து. 147 நாடுகளில் மரண  தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க  வேண்டுமென்று ஐ.நா.வும். தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மரண தண்டனை  ஒழிக்கப்பட்ட நாடுகளிலெல்லாம் குற்றங்கள் அதிகமாகிவிட்டனவா? இல்லையே! ஆனால்  மரண தண்டனை இருக்கின்ற இந்தியாவில்தான் கொலைக் குற்றங்கள் அதிகமாக  இருக்கின்றன. ஆக, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதன் மூலம் குற்றங்கள்  குறையும் என்று எதிர்பார்த்ததால் அது தவறு. மகாத்மா காந்தியை சுட்டுக்  கொன்ற குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதனால் இந்திரா  காந்தியைக் கொல்ல தயங்கினார்களா என்ன? அதை நம்மால் தடுக்க முடிந்ததா?  இல்லையே! இவைகள் வெவ்வேறு காரணங்களினால் நிகழ்கின்றன. அநேகமாக எல்லா  ஐரோப்பிய நாடுகளும் மரண தண்டனையை ஒழித்துவிட்டன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இயேசு பிரான் பாதையை உண்மையாக அவர்கள்  பின்பற்றுகிறார்கள். ஆனால், மகாவீரர், புத்தர், காந்தி ஆகிய மகான்கள்  வாழ்ந்த இந்தியாவில் இதுமாதிரியெல்லாம் பேசுவது மிகவும் தவறு. ஆகவே,  குற்றங்களுக்குக் காரணமாக அமைகின்ற சமுதாயத்தின் சூழல்களை மாற்றினாலே  குற்றங்கள் குறைந்துவிடும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நன்றி : -நம்வாழ்வு-&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4722080712196357658-4325639613186803972?l=thamizhini76.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/4325639613186803972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4722080712196357658&amp;postID=4325639613186803972' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/4325639613186803972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/4325639613186803972'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/2012/01/blog-post.html' title='ராஜிவ் கொலை'/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-i6FSIdk3SFk/Twz0mf1NYNI/AAAAAAAAAag/uO83AOZCZMo/s72-c/kittanna.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-5326337054219025930</id><published>2011-08-15T23:41:00.000-07:00</published><updated>2011-08-15T23:43:37.823-07:00</updated><title type='text'>ராஜபக்சேயின் புரோக்கர் - ‘இந்து’ ராம்</title><content type='html'>&lt;table align="left" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td height="80" width="80"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td align="right" width="*"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;table style="table-layout:fixed" align="center" cellpadding="0" cellspacing="0" height="100%" width="100%"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td width="40"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td style="overflow:hidden;text-overflow:ellipsis;white-space:nowrap" valign="top"&gt;&lt;table style="white-space:normal" cellpadding="0" cellspacing="0" width="100%"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td height="20"&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" height="100%" width="100%"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td width="40"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;td style="overflow:hidden;text-overflow:ellipsis;white-space:nowrap" valign="top"&gt;&lt;table style="white-space:normal" cellpadding="0" cellspacing="0" width="100%"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td height="20"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;span style="font-family:verdana, helvetica, sans-serif;font-size:12;color:#cd2e84font-family:verdana, helvetica,  sans-serif;font-size:85%;color:#cd2e84;"   &gt;&lt;div style="text-align:undefined"&gt;&lt;div style="color:rgb(205, 46, 132);font-size:12pt"&gt;&lt;span style="border-collapse:collapse;font-family:Arial, Helvetica, sans-serif;font-size:10px;color:rgb(0, 0, 0)"&gt;&lt;p class="MsoNormal" style="margin-top:0.1em;margin-right:0px;margin-bottom:0.1em;margin-left:0px;font-family:Arial, Helvetica, sans-serif;font-size:10px;text-align:justify"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ராஜபக்சேயின்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;புரோக்கர்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; - ‘&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இந்து&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;’ &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ராம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-top:0.1em;margin-right:0px;margin-bottom:0.1em;margin-left:0px;font-family:Arial, Helvetica, sans-serif;font-size:10px;text-align:justify"&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இந்து&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;’ &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;நாளேட்டின்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஆசிரியரான&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ப&lt;wbr&gt;ார்ப்பன&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ராம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சீனாவுக்கும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இலங&lt;wbr&gt;்கைக்கும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தரகராக&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;’ &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;செயல்பட்டு&lt;wbr&gt;வரும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;நபர்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஈழத்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தமிழர்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;மீது&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஜெ&lt;wbr&gt;யவர்த்தனா&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;நடத்திய&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இனப்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;படுகொலை&lt;wbr&gt;களுக்கு&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;எதிராக&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அமெரிக்கா&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பிரி&lt;wbr&gt;ட்டன்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;போன்ற&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;நாடுகளும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சர்வதேச&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;&lt;wbr&gt;மனித&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;உரிமை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அமைப்புகளும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வெளியி&lt;wbr&gt;ட்டு&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வரும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கருத்துகளை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தனது&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஏட்&lt;wbr&gt;டில்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;முழுமையாக&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இருட்டடித்து&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வி&lt;wbr&gt;டுவார்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; ‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இந்து&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;’ &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ராம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;! &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அண்மையில்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;wbr&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;லண்டனிலிருந்து&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஒளிபரப்பாகி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வரு&lt;wbr&gt;ம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; ‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சேனல்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;-4’ &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தொலைக்காட்சி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஈழத்&lt;wbr&gt;தின்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; ‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கொலைக்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;களங்கள்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;’ &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பற்றி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வெ&lt;wbr&gt;ளியிட்ட&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அதிர்ச்சியூட்டும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;காட்&lt;wbr&gt;சிகள்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;உலகத்தின்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;மனசாட்சியையே&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;உ&lt;wbr&gt;லுக்கி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;விட்டுள்ளது&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஆனாலும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அப&lt;wbr&gt;்படி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; ‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சேனல்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;-4’&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஒளிபரப்பிய&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கொலை&lt;wbr&gt;க்கள&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;காட்சி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பற்றிய&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;செய்தியை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ரா&lt;wbr&gt;ம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பார்ப்பான்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இருட்டடித்து&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வி&lt;wbr&gt;ட்டார்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இவ்வளவுக்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பிறகு&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ரா&lt;wbr&gt;ஜபக்சே&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;மீது&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;உலக&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அளவில்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;உருவாகி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;wbr&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வரும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;எதிர்ப்புகளிலிருந்து&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பா&lt;wbr&gt;து&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;காத்து&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;,&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அவரை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கதாநாயகனாக்கிக்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;wbr&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;காட்டும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;முயற்சியில்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; ‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இந்து&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;’ &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;&lt;wbr&gt;ராம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இறங்கி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;யுள்ளார்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அவசர&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அவச&lt;wbr&gt;ரமாக&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கொழும்புக்குப்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பறந்து&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;போய்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;wbr&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ராஜபக்சேவை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;நேரில்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சந்தித்து&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அ&lt;wbr&gt;வரது&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;விசேட&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பேட்டியை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வாங்கி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கட&lt;wbr&gt;ந்த&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஜூலை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; 23 &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஆம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தேதி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தனது&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஏட்டி&lt;wbr&gt;ன்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;முதல்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பக்கத்திலேயே&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தலைப்பு&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;&lt;wbr&gt;செய்தியாக&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வெளியிட்டுள்ளார்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ரா&lt;wbr&gt;ஜபக்சே&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சிரித்துக்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கொண்டு&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;காட்&lt;wbr&gt;சியளிக்கும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பெரிய&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;படத்துடன்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தன&lt;wbr&gt;்னுடைய&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பெயரிலேயே&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; - &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ராம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;,&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அந்தப்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;wbr&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பேட்டியை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வெளியிட்டுள்ளார்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;.&lt;span&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ரா&lt;wbr&gt;ஜபக்சே&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தமிழர்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பிரச்சினை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;களுக்&lt;wbr&gt;கு&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அரசியல்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தீர்வுகளை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;உருவாக்கி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;&lt;wbr&gt;வருவதாக&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அந்த&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பேட்டி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கூறுகிறது&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;.&lt;wbr&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஈழத்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தமிழர்களை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;நிர்வாணமாக்கி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;&lt;wbr&gt;கண்களை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கட்டி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;,&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தலையில்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சிங்கள&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ரா&lt;wbr&gt;ணுவம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சுட்டுக்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கொல்லும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;காட்சி&lt;wbr&gt;களை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; ‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சேனல்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; 4’ &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தொலைக்காட்சி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஒளி&lt;wbr&gt;பரப்பியது&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;குறித்தும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ராஜபக்சேவி&lt;wbr&gt;டம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; ‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ராம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;’ &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;விளக்கம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கேட்டு&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வெ&lt;wbr&gt;ளியிட்டுள்ளார்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-top:0.1em;margin-right:0px;margin-bottom:0.1em;margin-left:0px;font-family:Arial, Helvetica, sans-serif;font-size:10px;text-align:justify"&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அய்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;நா&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வின்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஆவணங்களை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சரிபார்க்&lt;wbr&gt;கும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சிறப்புப்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பிரிவின்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சோதனை&lt;wbr&gt;க்கு&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;உள்ளாக்கப்பட்டு&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அது&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;உண்மை&lt;wbr&gt;யான&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;படம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தான்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;என்று&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சான்றளிக்&lt;wbr&gt;கப்பட்ட&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அந்தக்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;காட்சிகளை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;டப்ளி&lt;wbr&gt;ன்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தீர்ப்பாயம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அங்கீகரித்த&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அந்த&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;wbr&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;காட்சிகளை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பொய்யான&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;படம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;என்று&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;wbr&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ராஜபக்சே&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கூறுகிறார்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அந்தப்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ப&lt;wbr&gt;டத்தில்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;துப்பாக்கியால்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சுடுவது&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;&lt;wbr&gt;விடுதலைப்புலிகள்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;என்றும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;நிர்&lt;wbr&gt;வாணமாக்கி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சுட்டுக்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கொல்லப்படு&lt;wbr&gt;வது&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சிங்கள&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ராணுவத்தினர்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;என்றும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;wbr&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ராஜபக்சே&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கேவலமாக&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; ‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;புளுகுவதை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;’ &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;&lt;wbr&gt;மான&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வெட்க&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;மின்றி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; ‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பத்திரிகை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தர&lt;wbr&gt;்மம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;’ &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பேசும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, ‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இந்து&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;’ &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ராம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வெளியிட்டுள்ளார்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;&lt;wbr&gt;ராஜபக்சேயும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அவரது&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; ‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தாசர்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;’ &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இந்&lt;wbr&gt;து&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ராமும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கூறும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பொய்யை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சிங்&lt;wbr&gt;களர்கள்கூட&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;நம்பத்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தயாராக&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இல்லை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-top:0.1em;margin-right:0px;margin-bottom:0.1em;margin-left:0px;font-family:Arial, Helvetica, sans-serif;font-size:10px;text-align:justify"&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இலங்கையின்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;முன்னாள்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அதிபர்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சந்&lt;wbr&gt;திரிகாவே&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; ‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இந்து&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;’ &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ராமின்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பார்ப்&lt;wbr&gt;பன&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பொய்க்கு&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; ‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;செருப்படி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;’&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தந்திரு&lt;wbr&gt;க்கிறார்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;மறைந்த&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;முன்னாள்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;நீதி&lt;wbr&gt;பதி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஆனந்த&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பால&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கிருஷ்ணரின்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;நினை&lt;wbr&gt;வுப்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பேருரையை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சந்திரிகா&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கொழும்&lt;wbr&gt;பில்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஆற்றியபோது&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, ‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இலங்கையின்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கொலைக்களம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;’ &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வீடியோ&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;wbr&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;காட்சி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பற்றிக்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கூறுகையில்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கண்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;&lt;wbr&gt;கலங்கி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;யிருக்கிறார்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;. “&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இந்த&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வீடியோ&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;காட்சியை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பிரிட்&lt;wbr&gt;டன்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தொலைக்காட்சியில்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பார்த்த&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;என&lt;wbr&gt;து&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; 28 &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வயதான&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;மகன்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, ‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;நான்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சிங்களவன்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;என்று&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கூறுவதற்&lt;wbr&gt;கே&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வெட்கப்படுகிறேன்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அம்மா&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;’&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;என்&lt;wbr&gt;று&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;என்னிடம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அழுதுக்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கொண்டே&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கூ&lt;wbr&gt;றினான்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;என்னுடய&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;மகளும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அவ்வாறே&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;wbr&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கூறினாள்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;” &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;என்று&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கூறிய&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சந்திரி&lt;wbr&gt;கா&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அந்தக்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கூட்டத்தில்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கண்கலங்&lt;wbr&gt;கி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;நாதழுதழுத்து&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;சற்று&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;நேரம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;&lt;wbr&gt;பேச&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;முடியாமல்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அமைதியாகிவிட்டார்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;wbr&gt; - &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;என்று&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஏடுகளில்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;செய்திகள்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; (&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஜ&lt;wbr&gt;ூலை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; 25) &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வெளிவந்துள்ளன&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="margin-top:0.1em;margin-right:0px;margin-bottom:0.1em;margin-left:0px;font-family:Arial, Helvetica, sans-serif;font-size:10px;text-align:justify"&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பத்திரிகை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தர்மம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;’ &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பேசுகிற&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பா&lt;wbr&gt;ர்ப்பனர்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ராம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வழக்கம்போல்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இந்&lt;wbr&gt;த&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;செய்தியை&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;யும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தனது&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஏட்டில்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இ&lt;wbr&gt;ருட்டடிப்பு&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;செய்து&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;விட்டார்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;உ&lt;wbr&gt;லகம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;முழுதும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இனப்படு&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கொலைக்கு&lt;wbr&gt;ம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இனவெறிக்கும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இராணுவ&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அடக்கு&lt;wbr&gt;முறைக்கும்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;எதிராக&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;எழுதி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; - &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஏதோ&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;,&lt;wbr&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;மனித&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;உரிமைக்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;காவலன்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;போல்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; - &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இட&lt;wbr&gt;துசாரி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;முகமூடி&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;போட்டுக்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கொள்ளு&lt;wbr&gt;ம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இந்தப்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பார்ப்பனருக்கு&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;ஈழத்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;wbr&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;தமிழன்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;என்றால்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;விடுதலைப்புலி&lt;wbr&gt;கள&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;இயக்கம்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;என்றால்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; ‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பூணூல்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;’, ‘&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பஞ்ச&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கச்ச&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;’ &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;உணர்வுகள்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வெளியே&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;க&lt;wbr&gt;ிழித்துக்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;கொண்டு&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;வந்து&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;நிற்கி&lt;wbr&gt;ன்றன&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;அவ்வளவு&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;பார்ப்பனத்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px;font-family:Latha, sans-serif"&gt;திமிர்&lt;/span&gt;&lt;span style="font-size:9pt;line-height:13px"&gt;&lt;wbr&gt;!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4722080712196357658-5326337054219025930?l=thamizhini76.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/5326337054219025930/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4722080712196357658&amp;postID=5326337054219025930' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/5326337054219025930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/5326337054219025930'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/2011/08/blog-post.html' title='ராஜபக்சேயின் புரோக்கர் - ‘இந்து’ ராம்'/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-8388872802469658683</id><published>2011-07-31T23:32:00.000-07:00</published><updated>2011-07-31T23:33:50.269-07:00</updated><title type='text'>இவரை தெரிகிறதா</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-0oX4jiPC4qs/TjZIjqlprcI/AAAAAAAAAZs/ewumbY7jLjg/s1600/jafer.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5635771761265585602" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 267px; CURSOR: hand; HEIGHT: 189px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-0oX4jiPC4qs/TjZIjqlprcI/AAAAAAAAAZs/ewumbY7jLjg/s400/jafer.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4722080712196357658-8388872802469658683?l=thamizhini76.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/8388872802469658683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4722080712196357658&amp;postID=8388872802469658683' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/8388872802469658683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/8388872802469658683'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/2011/07/blog-post_31.html' title='இவரை தெரிகிறதா'/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-0oX4jiPC4qs/TjZIjqlprcI/AAAAAAAAAZs/ewumbY7jLjg/s72-c/jafer.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-319785784163747795</id><published>2011-07-29T07:53:00.000-07:00</published><updated>2011-07-29T07:54:34.720-07:00</updated><title type='text'>தனி ஈழம் ஒன்றே தீர்வு: லயோலா கல்லூரி நடத்திய ஆய்வில் 64 சதவீதம் பேர் கருத்து</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt; &lt;p align="justify"&gt;&lt;span style="font-size:10pt"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;table style="width:300px;border-collapse:collapse;min-height:250px" align="right" border="0" cellpadding="2" cellspacing="0"&gt; &lt;tbody&gt; &lt;tr&gt; &lt;td&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;சென்னை லயோலா கல்லூரி தகவல் தொடர்பு மாணவர்கள் நடத்திய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-size: 10pt; font-weight: bold; color: rgb(153, 51, 153);"&gt;&lt;br /&gt;அதில், கச்சத்தீவை  மீட்க வலியுறுத்தும் அரசின் தீர்மானத்துக்கு 62.9 சதவீதம் பேர் ஆதரவு  அளித்துள்ளனர். 81 சதவீதம் பேர் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக்  கோரும் தீர்மானத்தை வரவேற்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்றத்தில் ராஜபக்சே  போர் குற்றவாளி என தீர்மானம் கொண்டுவர 69 சதவீதம் பேர் ஆதரவு  தெரிவித்துள்ளனர். தனி ஈழம் ஒன்றே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தரத்  தீர்வு என 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4722080712196357658-319785784163747795?l=thamizhini76.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/319785784163747795/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4722080712196357658&amp;postID=319785784163747795' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/319785784163747795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/319785784163747795'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/2011/07/64.html' title='தனி ஈழம் ஒன்றே தீர்வு: லயோலா கல்லூரி நடத்திய ஆய்வில் 64 சதவீதம் பேர் கருத்து'/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-2444008844925174568</id><published>2011-07-28T22:21:00.000-07:00</published><updated>2011-07-28T22:26:48.501-07:00</updated><title type='text'>தமிழீழம் அமைய, பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும்: வைகோ</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-xdUg_N0rSeM/TjJEfcVnhuI/AAAAAAAAAZk/XfyXOyzzjW8/s1600/vaico.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 246px;" src="http://1.bp.blogspot.com/-xdUg_N0rSeM/TjJEfcVnhuI/AAAAAAAAAZk/XfyXOyzzjW8/s400/vaico.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5634641390767408866" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="itemDateCreated"&gt;&lt;/span&gt;              &lt;h2 class="itemTitle"&gt;     &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;                           &lt;div class="itemToolbar"&gt;   &lt;br /&gt;     &lt;/div&gt;       &lt;div class="itemBody"&gt;                                        &lt;div class="itemFullText"&gt;     &lt;p&gt; புதிய நாடுகளை அமைத்துக் கொடுத்த ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும்  தமிழீழத்தை அமைப்பதற்காக, தமிழீழ மக்களிடம் பொது வாக்குப்பதிவை நடத்திட  வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.&lt;span style="font-size:8pt;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;span style="font-size:8pt;"&gt;எரித்திரியா, கிழக்குத் தைமூர், தெற்கு சூடான் ஆகிய பகுதிகளில் தனிநாடு அமைப்பதற்காக, அம்மக்களிடையே வாக்குப்பதிவு நடத்தி,&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:8pt;"&gt;  &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இலங்கையில்,   சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்,   விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின்   தாயகமாகம் வடக்கு கிழக்கு மாநிலங்களில், பெருவாரியான இடங்களில் வெற்றி   பெற்றுள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்தப்  பகுதியில் உள்ள 26  மாகாண கவுன்சில்களில், 18 மாகாண கவுன்சில்களைக்  கைப்பற்றியுள்ளது; 183  உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி  பெற்றவர்களுக்கு, மறுமலர்ச்சி  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  வாழ்த்துகளைத் தெரிவித்துக்  கொள்கின்றேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இலங்கை   நாடாளுமன்றத்துக்கு 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், விடுதலைப்புலிகளின்   ஆதரவுடன் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 இடங்களில்   வெற்றிபெற்றது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;தனித்  தமிழீழமே தீர்வு  என்று, 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா  அவர்கள் நிறைவேற்றிய  தீர்மானத்துக்குப் பின்னர், 1977ம் ஆண்டு, இலங்கை  நாடாளுமன்றத்துக்கு  நடைபெற்ற தேர்தலில், வடக்கு கிழக்கு மாநிலங்களில், 90  விழுக்காடு தமிழர்கள்  அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அதேபோலத்தான்,   இப்போது, உள்ளாட்சித் தேர்தல்களிலும், தமிழீழ ஆதரவாளர்களையே தேர்ந்து   எடுத்து இருக்கின்றார்கள். இது தமிழீழம் அமைவதற்கான முன்னோடித் தேர்தல்   முடிவுகள் என்றே கொள்ள வேண்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;எரித்திரியா,   கிழக்குத் தைமூர், தெற்கு சூடான் ஆகிய பகுதிகளில் தனிநாடு அமைப்பதற்காக,   அம்மக்களிடையே வாக்குப்பதிவு நடத்தி, புதிய நாடுகளை அமைத்துக் கொடுத்த   ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும், அதேபோல தமிழீழத்தை அமைப்பதற்காக, தமிழீழ   மக்களிடம் பொது வாக்குப்பதிவை நடத்திட வேண்டும் என்று, அண்மையில் நடைபெற்ற   பிரஸல்ஸ் மாநாட்டில் நான் தெரிவித்த கருத்தை, உலகம் முழுமையும் உள்ள  தமிழீழ  ஆதரவு அமைப்புகள் வரவேற்றுள்ளன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;எனவே,   உலக நாடுகளின் பார்வையாளர்கள் முன்னிலையில், தமிழீழம் அமைப்பதற்கான   வாக்குப் பதிவை நடத்திட வேண்டும். அந்த வாக்குப்பதியில், உலகின் பல   நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள ஈழத் தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே வாக்கு   அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இலங்கையில் தமிழ் இனப்படுகொலை   நடத்திய ராஜபக்ச மற்றும் அவரது கூட்டாளிகளை, உலகக் குற்றவியல்   நீதிமன்றத்தின் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதற்கும் நடவடிக்கைகளை ஐ.நா.   மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் இவ்வாறு வைகோ தனது   அறிக்கையில் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4722080712196357658-2444008844925174568?l=thamizhini76.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/2444008844925174568/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4722080712196357658&amp;postID=2444008844925174568' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/2444008844925174568'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/2444008844925174568'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/2011/07/blog-post_28.html' title='தமிழீழம் அமைய, பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும்: வைகோ'/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-xdUg_N0rSeM/TjJEfcVnhuI/AAAAAAAAAZk/XfyXOyzzjW8/s72-c/vaico.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-5777177783786263816</id><published>2011-07-28T22:16:00.000-07:00</published><updated>2011-07-28T22:17:43.490-07:00</updated><title type='text'>இலங்கைப் போர்க் குற்றங்கள்: மகிந்தவை கைதுசெய்யக் கோரி ஆந்திரவில் ஆர்ப்பாட்டம்</title><content type='html'>&lt;h2 class="itemTitle"&gt;     &lt;br /&gt;&lt;/h2&gt;                           &lt;div class="itemToolbar"&gt;   &lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 0, 51);"&gt;   &lt;/span&gt;   &lt;/div&gt;&lt;span style="color: rgb(51, 0, 51);"&gt;       &lt;/span&gt;                                        &lt;div style="color: rgb(51, 0, 51);" class="itemFullText"&gt;     &lt;p&gt;&lt;span style="font-size: small;"&gt;இலங்கையில்   இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்காக இலங்கையின் ஜனாதிபதி மகிந்த   ராஜபக்ஷவையும், அதற்குத் துணைபோன ஏனையவர்களையும் கைது செய்யுமாறு கோரி   தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம்   ஒன்று இடம்பெற்றது.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;ஆந்திர   பிரதேசத்தின் நெல்லூர் பகுதியிலுள்ள காந்தி சிலைக்கு முன்பாகக் கூடிய   நூற்றுக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக செய்திகள்   தெரிவிக்கின்றன. பெருந்தொகையான பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில்   பங்குகொண்டிருந்தார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;இலங்கையின்   ஆடிக்கலவரம் இடம்பெற்ற கறுப்பு ஜுலையை முன்னிட்டு போர்க்  குற்றங்களுக்கும்  இனப்படுகொலைகளுக்கும் எதிரான இயக்கமே இந்த  ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு  செய்திருந்தது.&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;கடந்த   மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு தமிழர்களுக்கு நீதிவழங்கப்பட  வேண்டும்  என்ற கோரிக்கையை முன்வைத்து கர்னாடக மாநிலத்திலும்,  ஆந்திராவிலும்  தொடர்ச்சியாகப் பொதுக் கூட்டங்களையும் போராட்டங்களையும்  முன்னெடுத்து  வருகின்றது.&lt;/span&gt;&lt;/p&gt;   &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4722080712196357658-5777177783786263816?l=thamizhini76.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/5777177783786263816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4722080712196357658&amp;postID=5777177783786263816' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/5777177783786263816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/5777177783786263816'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/2011/07/blog-post.html' title='இலங்கைப் போர்க் குற்றங்கள்: மகிந்தவை கைதுசெய்யக் கோரி ஆந்திரவில் ஆர்ப்பாட்டம்'/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-7371035024462772898</id><published>2011-07-03T20:06:00.000-07:00</published><updated>2011-07-03T20:14:03.166-07:00</updated><title type='text'>கரும்புலிகள் நாள் – 2011</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-4DgxrW-YZok/ThEvDpGrqgI/AAAAAAAAAZU/oS1Bm4uTxoU/s1600/BT-New-640x400.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5625329149182454274" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 250px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-4DgxrW-YZok/ThEvDpGrqgI/AAAAAAAAAZU/oS1Bm4uTxoU/s400/BT-New-640x400.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;காலத்தின் கட்டாயம் தான் கரும்புலிகளை உருவாக்கியது; தியாகங்களின் உச்சத்தைத் தொட்ட எமது தற்கொடையாளர்களின் கனவை நாம் என்றென்றும் நெஞ்சில் நிறுத்திப் பூசிப்போம் – தமிழீழ விடுதலைப் புலிகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இவ் விடயம் 03. 07. 2011, (திங்கள்),தமிழீழ நேரம் 21:21க்கு பதிவு செய்யப்பட்டது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nerudal.com/nerudal.9348.html/ltte-logo-3" rel="attachment wp-att-9349"&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000066;"&gt;கரும்புலிகள் நாளை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#660000;"&gt;நாம் எமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த நாளிலிருந்து எமது மக்கள் தமது உரிமைக்கான போராட்டத்தினை மாற்று வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றார்கள். அதேவேளை எமது மக்களோடு சேர்ந்து, எமது இனத்தின் மீதான உரிமை மீறல்களைப் புரிந்துகொண்டு, அதற்கான நீதியினைப் பெற்றுக்கொடுக்க அக்கறை செலுத்துகின்ற நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் நாம் ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து வழங்கத் தயாராகவேயுள்ளோம்.&lt;br /&gt;அறிக்கையின் முழு வடிவம்:&lt;br /&gt;&lt;br /&gt;தலைமைச் செயலகம், &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#660000;"&gt;ஊ/அ/05/11தமிழீழ விடுதலைப் புலிகள்,&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#660000;"&gt;தமிழீழம்.&lt;br /&gt;03/07/ 2011.&lt;br /&gt;கரும்புலிகள் நாள் – 2011&lt;br /&gt;அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ்பேசும் மக்களே,&lt;br /&gt;ஜூலை- 05 கரும்புலிகள் நாள்.&lt;br /&gt;எம் மக்களை அழித்து எம் மண்ணை ஆக்கிரமிக்க பெரும் படைப்பலத் துணையுடன் வந்த எதிரியை எதிர்கொள்ள தம் உயிரையே ஆயுதமாக்கி, உடலை வெடிமருந்தாக்கி மனபலத்தை எமது இனத்தின் கவசமாக்கிய உத்தமர்களின் நினைவு நாள்.&lt;br /&gt;கரும்புலிகள் காலத்தால் மறைந்து போகாத வரலாற்றைப் பதித்து, இரும்பையொத்த வீரத்தை விதைத்து, எம்மினத்தின் வரலாற்றைப் புதுப்பித்த புனிதர்கள்.&lt;br /&gt;ஜனநாயகம் என்கின்ற போர்வையில் அரச பயங்கரவாத ஆட்சியாளர்களால் ஆயுத பலத்துடன் தமிழினம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட, மனித நாகரீகமே வெறுக்கத்தக்க தமிழர் படுகொலைகளுக்கும் நில ஆக்கிரமிப்புக்கும் எதிரான எமது போராட்டத்தின் அதியுச்ச எதிர்ப்பு ஆயுதமாகவே எமது தற்கொடையாளர்கள் களமிறங்கினார்கள்.&lt;br /&gt;எமது போராளிகள் தங்களைத் தற்கொடையாளர்களாக அர்ப்பணித்ததன் பின்னணி, சூழல் ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்க்காமலும் அவர்களின் ஆத்ம உணர்வுகளின் ஆணிவேரைப் புரிந்துகொள்ளாமலும் எமது இனவிடுதலை தொடர்பான எந்த ஆய்வுகளும் நிறைவடைய முடியாது. எம் இன விடுதலைக்கான தேவையினையும் அவசியத்தினையுமே கரும்புலிகளின் உணர்வுகள் பதிவு செய்துள்ளன.&lt;br /&gt;இன்று தமிழர் தாயகத்தில் எமது மக்கள் தொடர்ந்தும் அவலங்களை எதிர்கொண்டே வாழ்கின்றனர். எமது மக்கள் தமது பூர்வீகமமான வாழிடங்களில் ஆயுதம் தரித்த சிங்களப்படைகளின் அச்சுறுத்தலின் மத்தியில் அடிமைகளாகவே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். காலங்காலமாகச் சிறுகச்சிறுக தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து ஏப்பம் விட்ட சிங்கள அரசு இப்போது தனது ஆக்கிரமிப்பை எந்தத் தடைகளுமற்று பெருமெடுப்பில் சிங்கள பெளத்த மயமாக மாற்றிவருகின்றது.&lt;br /&gt;போர் முடிந்துவிட்டதாகக் கூறும் சிங்கள அரசு இன்னமும் தமிழர் தாயகத்தைப் போர்ச்சூழலிலேயே வைத்திருக்கின்றது. தினமும் கொலைகள், அச்சுறுத்தல்கள், காணாமற்போதல்கள், பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.&lt;br /&gt;பெயரளவிற்கு விடுவிக்கப்பட்டதாகக் கூறும் எமது ஆண், பெண் போராளிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் காணாமற் போவதும் படுகொலை செய்யப்படுவதும் நாளாந்தம் நிகழ்ந்தேறி வருகின்றன.&lt;br /&gt;தமிழர்களால் ஜனநாயகரீதியில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் சந்திப்புக்களிற்கூட சிங்களக் கூலிப்படைகளின் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இந்நிலைதான் கடந்த பல தசாப்தங்களாக சிங்களப் பேரினவாத அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.&lt;br /&gt;சிங்கள ஆட்சியாளர்களின் இத்தகைய நடவடிக்கைகளானது உலக நாகரிகங்களையும் மனிதவிழுமியங்களையும் தொடர்ச்சியாக அவமதிக்கும் செயலாகவே பார்க்க முடிகின்றது. மேலும் மனித உரிமை தொடர்பில் அனைத்துலகத்தின் அழுத்தங்களை சிங்களம் செவிமடுக்கவில்லை என்பதனையே காட்டுகின்றது. காலங்காலமாக தமிழர்மேல் அடக்குமுறைகளை ஏவியே வளர்ந்துவந்த இப்பேரினவாத அரசு இன்றைய நிலையில் மென்மேலும் மோசமான நிலையை நோக்கியே நகர்ந்து செல்கின்றது.&lt;br /&gt;சிங்கள அரசின் இத்தகைய தொடர் செயற்பாடுகளால் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் எமது மக்களின் சுதந்திர உணர்வை அழித்துவிட முடியாது. தொடர் ஆக்கிரமிப்புக்களால் சிங்கள பௌத்த பேரினவாத அரசிடமிருந்து எமது மக்கள் விடுதலை பெற வேண்டிய தேவை இன்னுமின்னும் வலுவடைந்து கொண்டே வருகின்றது.&lt;br /&gt;எமது போராட்டம் ஆயுதவழியில் ஆசை கொண்டோ வெடிமருந்தில் மோகம் கொண்டோ முகிழவில்லை. மாறாக சாத்வீக வழியிலான எல்லாப் பொறிமுறைகளும் தோற்றுப்போன பின்பே ஆயுதப்போராட்டம் உருவானது. இன்றைய உலக ஒழுங்கு எமது விடுதலைப்பயணத்திற்கான ஆயுதப்போராட்டம் எனும் பாதையினை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்ததோடு தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நின்ற எமது இயக்கத்தை அழித்துவிடும் கொடிய போர் குறித்து பாராமுகமாக இருந்ததையும் சில நாடுகள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதையும் எமது இனம் வேதனையுடன் பார்க்கின்றது.&lt;br /&gt;நாம் எமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த நாளிலிருந்து எமது மக்கள் தமது உரிமைக்கான போராட்டத்தினை மாற்று வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றார்கள். அதேவேளை எமது மக்களோடு சேர்ந்து, எமது இனத்தின் மீதான உரிமை மீறல்களைப் புரிந்துகொண்டு, அதற்கான நீதியினைப் பெற்றுக்கொடுக்க அக்கறை செலுத்துகின்ற நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் நாம் ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து வழங்கத் தயாராகவேயுள்ளோம்.&lt;br /&gt;எமது இனவிடுதலைக்கான போராட்டத்தை அனைத்துலக அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப எமது மக்களை அணிதிரட்டி நாம் தொடர்ந்தும் போராடுவோம். அதற்கான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் சர்வதேசத்திடம் வேண்டி நிற்கின்றோம்.&lt;br /&gt;காலத்தின் கட்டாயம் தான் கரும்புலிகளை உருவாக்கியது. தரையில் எதிரிகளின் இரும்பு கோட்டைகளை ஊடறுத்துத் தகர்த்தார்கள்; கடலில் எதிரிக்கலங்களை மூழ்கடித்தார்கள்; வான்வழி சென்று வரலாறு படைத்தார்கள். தமிழர் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற எம் காவிய நாயகர்கள் என்றும் எம்மினத்தின் காவல் தெய்வங்களாய் நிலைப்பார்கள்.&lt;br /&gt;தியாகங்களின் உச்சத்தைத் தொட்ட எமது தற்கொடையாளர்களின் கனவை நாம் என்றென்றும் நெஞ்சில் நிறுத்திப் பூசிப்போம்.&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”&lt;br /&gt;ஆ.அன்பரசன்,&lt;br /&gt;ஊடகப்பிரிவு,&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகள்,&lt;br /&gt;தமிழீழம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4722080712196357658-7371035024462772898?l=thamizhini76.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/7371035024462772898/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4722080712196357658&amp;postID=7371035024462772898' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/7371035024462772898'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/7371035024462772898'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/2011/07/2011.html' title='கரும்புலிகள் நாள் – 2011'/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-4DgxrW-YZok/ThEvDpGrqgI/AAAAAAAAAZU/oS1Bm4uTxoU/s72-c/BT-New-640x400.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-7887026507541029880</id><published>2011-06-24T06:46:00.000-07:00</published><updated>2011-06-24T06:47:22.966-07:00</updated><title type='text'>ஜூன் 26 கடற்கரையில் திரளுவீர் பழ. நெடுமாறன் அழைப்பு</title><content type='html'>&lt;span style="font-family:Arial;font-size:85%;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஜூன் 26 கடற்கரையில் திரளுவீர்&lt;br /&gt;பழ. நெடுமாறன் அழைப்பு&lt;br /&gt;இலங்கைத்  தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்&lt;br /&gt;பழ. நெடுமாறன் விடுத்துள்ள  அறிக்கை:&lt;br /&gt;சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாகி உயிர்நீத்த  ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் நினைவேந்தல் செலுத்தும் வகையில்  சென்னைக் கடற்கரையில் ஜூன் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு மெழுகுதிரி ஏந்தி நிற்கும்  நிகழ்ச்சியை மே 17 இயக்கம் முன்னின்று நடத்துகிறது.&lt;br /&gt;ஐ.நா. மன்றம்  கடைப்பிடிக்கும் அனைத்துலக நாள் அன்று இந்த நிகழ்ச்சி நடைபெறவிருப்பது  சிறப்புக்குரியது. இந்நிகழ்ச்சியில் தமிழர்கள் அனைவரும் எத்தகைய வேறுபாடும்  இல்லாமல் பங்கெடுத்து நமது உணர்வை வெளிப்படுத்தத் திரண்டு வருமாறு  வேண்டிக்கொள்கிறேன்.&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4722080712196357658-7887026507541029880?l=thamizhini76.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/7887026507541029880/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4722080712196357658&amp;postID=7887026507541029880' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/7887026507541029880'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/7887026507541029880'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/2011/06/26.html' title='ஜூன் 26 கடற்கரையில் திரளுவீர் பழ. நெடுமாறன் அழைப்பு'/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-4317303541467757873</id><published>2011-06-24T06:41:00.000-07:00</published><updated>2011-06-24T06:43:51.178-07:00</updated><title type='text'>இதுவரை வெளிவராத தகவல்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;இதுவரை வெளிவராத தகவல்கள்&lt;span&gt;     முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. &lt;p&gt; உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன. &lt;/p&gt;&lt;p&gt; உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமியை சந்தித்தோம்.. &lt;/p&gt;&lt;p&gt; என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்? &lt;/p&gt;&lt;p&gt;‘‘1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன். தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது. அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே சொல்ல வரே... தெரியுமே..’’ என்றார். &lt;/p&gt;&lt;p&gt; எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன். ‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம் ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த முடியவில்லை. இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம். கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான் தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார். கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை உறுதிப்படுத்த முடிந்தது. &lt;/p&gt;&lt;p&gt; அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான் மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது. திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம் என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின் நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான் என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’ &lt;/p&gt;&lt;p&gt; சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்.. &lt;/p&gt;&lt;p&gt;‘‘நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம் சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்.. பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள் என்று எனக்கு சந்தேகம். &lt;/p&gt;&lt;p&gt; பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி, சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன். அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம் சொன்னார். &lt;/p&gt;&lt;p&gt; நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன். ‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’ என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும் பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில் வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’ &lt;/p&gt;&lt;p&gt; அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா? &lt;/p&gt;&lt;p&gt;‘‘இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம் கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன். அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும் மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல் செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள். படுகொலைக்கான சந்தேகம் யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்? என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான் நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப் ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது. &lt;/p&gt;&lt;p&gt; மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன். &lt;/p&gt;&lt;p&gt; வாசல் வரை வந்துவிட்டு, மிகவும் தயங்கியபடியே அவரைப் பார்த்தேன். ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார்கள். ‘என் முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. நேற்று மனு கொடுத்த போதே கமிஷனின் செகரட்டரி ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார். அந்த மனு ஏற்கப்பட்டால்தான் நான் என் தரப்பு கேள்விகளை எழுப்ப முடியும். பல உண்மைகளை வெளிகொண்டுவர முடியும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவ முடியுமா?’ என்றேன். &lt;/p&gt;&lt;p&gt; ‘என்றைக்கு உங்கள் மனு ஏற்பு விசாரணை வருகிறது?’ என்று கேட்டார். நான் தேதியைச் சொன்னேன். குறித்துக்கொண்டு ‘சரி போய் வாருங்கள்’ என்றார். சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கே இருந்த டைரியில் ஒரு தாளை கிழித்து பென்சிலால் அந்த வீட்டில் இருந்த ஐந்து தொலைபேசி நம்பரை எழுதி, ‘எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் சரி. எந்தவிமான அவசரம் என்றாலும், உதவி என்றாலும் கேளுங்கள்’ என்று கூறியபடியே அந்த தாளை நீட்டினார். வாங்கி வைத்துகொண்டேன். &lt;/p&gt;&lt;p&gt; அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான் அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’ &lt;/p&gt;&lt;p&gt; சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே? அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது? &lt;/p&gt;&lt;p&gt;‘‘அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது. அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது. &lt;/p&gt;&lt;p&gt; நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார். எனக்கு செய்த ஒரே உதவி அதுதான். &lt;/p&gt;&lt;p&gt;பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார். அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார். புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’ &lt;/p&gt;&lt;p&gt; சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை எப்படி அமைந்தது? &lt;/p&gt;&lt;p&gt;‘‘ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம் இல்லை’ என்ற போது நீங்கள் விடு தலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன். சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து தகவல் வந்தது.’ என்றார். &lt;/p&gt;&lt;p&gt; ‘சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும் உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது இலங் கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன். திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார்கள். &lt;/p&gt;&lt;p&gt;‘மதுரை பொதுக்கூட்டத் துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம். விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை. காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்? என நினைத்திருக்கிறார். &lt;/p&gt;&lt;p&gt;அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான் இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள் 20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம் இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும் பதில் இல்லை. &lt;/p&gt;&lt;p&gt; அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார். &lt;/p&gt;&lt;p&gt;இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன். காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும். அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி.. அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார். &lt;/p&gt;&lt;p&gt; எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன். அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம் எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார். &lt;/p&gt;&lt;p&gt; தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார். அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள். &lt;/p&gt;&lt;p&gt;ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின் நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.’’ &lt;/p&gt;&lt;p&gt; ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே? &lt;/p&gt;&lt;p&gt;‘‘அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை. &lt;/p&gt;&lt;p&gt; சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன். &lt;/p&gt;&lt;p&gt; சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது. &lt;/p&gt;&lt;p&gt; என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அந்தளவிற்கு அது முட்டாள்தனமான இயக்கமும் அல்ல. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து!’&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4722080712196357658-4317303541467757873?l=thamizhini76.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/4317303541467757873/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4722080712196357658&amp;postID=4317303541467757873' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/4317303541467757873'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/4317303541467757873'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/2011/06/blog-post.html' title='இதுவரை வெளிவராத தகவல்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை'/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-7763791962673744411</id><published>2010-11-07T19:27:00.001-08:00</published><updated>2010-11-07T19:27:59.887-08:00</updated><title type='text'>தமிழ் ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் கருணாநிதி! – நெடுமாறன்</title><content type='html'>சகோதர யுத்தமே ஈழப் போராட்டத்துக்கும் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கும் காரணம் என்று முதல்வர் கருணாநிதி கடந்த சில அறிக்கையில் தொடர்ந்து கூறி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை நாளும் இதற்கு பதில் தராமலிருந்த, ஈழத் தமிழ் ஆதரவாளர்கள், இப்போது ஈழப் போராளிகள் விஷயத்தில் கருணாநிதி எப்படி நடந்துகொண்டார் என்பதை மேடைகளில் வெளியிட்டு வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழப் போராளி குட்டிமணியை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்தவரே கருணாநிதிதான் என்றும், தன்னை விட பிரபாகரனையே ஈழத் தமிழர்கள் மதித்ததால், கருணாநிதி எந்த உதவியும் செய்ய மறுத்துவிட்டார் என்றும் பழ நெடுமாறன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்த கவிஞர் காசி ஆனந்தனின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன் இப்படிப் பேசினார்:&lt;br /&gt;&lt;br /&gt;“கருணாநிதி ஈழப்போராட்டத்திற்குச் செய்த துரோகங்கள் குறித்து இதுவரை நான் பேசாத பல விஷயங்களை இன்று பேசப்போகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1985-ம் ஆண்டு கருணாநிதியின் பிறந்தநாளுக்குக் கிடைத்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை போராளி இயக்கங்களுக்குப் பங்கு போட்டுக் கொடுப்பதாக கருணாநிதி அறிவித்தார். இந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு விளம்பரம் தேடிக் கொள்வார் என்பதால் புலிகள் பணம் வாங்கச் செல்லவில்லை. உடனே எரிச்சலடைந்த கருணாநிதி, “என் பணத்தை அவர்கள் வாங்க மாட்டார்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அதே நேரத்தில்தான் எந்த விளம்பரமும் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய்களை எம்.ஜி.ஆர் புலிகளுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டிருந்தார். தன் சொந்தப் பணத்தையே அள்ளிக் கொடுத்தார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் புலிகளில் சில தம்பிகளுக்கு கருணாநிதி மேல் நம்பிக்கை இருந்ததால் அவரைச் சந்தித்து பணம் கேட்கலாம் என்று பிரபாகரனிடம் வற்புறுத்தினர். சரி, அவரைப் பற்றி தெரிந்து கொள்ளவாவது, போய் கேட்டுப் பாருங்கள் என நான் சொன்ன ஏற்பாட்டின்படி, 26.1.85 அன்று கருணாநிதியைச் சந்தித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் டஎங்களுக்குப் பத்து கோடி ரூபாய் வேண்டும்’ என்று கேட்டுள்ளனர். அவர்களை அனுப்பிவிட்டு என்னைத் தொடர்பு கொண்ட கருணாநிதி, ‘என்ன இவ்வளவு பணம் கேட்கிறார்கள்’ என்றார் பெரும் அதிர்ச்சியுடன். பின்னர் புலிகள் அமைப்பினரைச் சந்திக்கும்போது ‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் அவரிடம் அனுப்பினேன்’ என்று கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;5.6.86-ம் ஆண்டு தி.மு.க கூட்டம் சென்னை கடற்கரையில் நடந்தது. கடற்கரை மணலில் யாரோ குண்டை செருகி வைத்திருந்தார்கள். அந்தப் பழியை தி.மு.க தலைமை புலிகள் மீது போட்டது. நான் பாலசிங்கத்தையும்,பேபியையும் அனுப்பி உண்மையைச் சொல்ல வைத்தேன். பிறகு குண்டு வைத்தது ‘டெலோ’ அமைப்புதான் எனக் கண்டுபிடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் கருணாநிதியை நாங்கள் சந்தித்தபோது, ‘பிரபாகரன் என்னை மதிக்கவில்லை. பிரபாகரனா? மக்களா? என்றால் இரண்டும் ஒன்றுதான். அந்த மக்கள் பிரபாகரனைத்தான் தலைவனாக நினைக்கிறார்கள்.அவர்களுக்காக நான் எதுவும் செய்ய மாட்டேன்,’ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா,-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் தமிழர் விடுதலை முன்னணியின் அமிர்தலிங்கம் உடன்பாட்டை ஆதரித்துப் பேசினார். நான் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,’மத்திய உளவுப்பிரிவின் நெருக்குதலில்தான் நான் இந்த அறிக்கையைக் கொடுத்தேன். அப்போது ‘என் அறிக்கையைக் கண்டித்து கருணாநிதி பதில் அறிக்கை கொடுத்தால் என்ன செய்வது?’ என்று உளவுத் துறையினரிடம் கேட்டேன். ‘அவர் அப்படியெல்லாம் அறிக்கை கொடுக்க மாட்டார்’ என்று உளவுப்பிரிவினர் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியேதான் கருணாநிதியும் நடந்து கொண்டார்’ என்று என்னிடம் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பின் கருணாநிதியை அமிர்தலிங்கம் சந்தித்தபோது, ‘நேற்று பிறந்த பயல் (பிரபாகரன்) அவன். இரண்டே நாளில் இந்திய ராணுவம் அவனது கொட்டத்தை அடக்கும்’ என்று சொல்லியிருக்கிறார். இது உண்மையா? இல்லையா? இதை கருணாநிதி மறுப்பாரா?&lt;br /&gt;&lt;br /&gt;1987-ம் ஆண்டு ஜூலை மாதம் போடப்பட்ட ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் பற்றி ஒரு வார்த்தை கூட இன்றுவரை கருணாநிதி பேசியதில்லை. உடன்பாட்டைத் தொடர்ந்து குமரப்பா உள்பட 12 பேர் உயிர்த்தியாகம் செய்தார்கள். இதைக் கண்டித்து அனைத்துக் கட்சித்தலைவர்களும் அறிக்கை வெளியிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நியூயார்க் மருத்துவமனையில், உடல் நலம் குன்றிய நிலையிலும் எம்.ஜி.ஆர். அறிக்கை வெளியிட்டார். நாங்கள் நடத்திய பந்திற்கு அன்றைய அமைச்சர் பொன்னையனையே அனுப்பி வைத்தார். ஆனால் கருணாநிதி வாயே திறக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் விட மிக மோசம், கருணாநிதி செய்த இன்னொரு செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அதாவது 1973-ம் வருடம் தமிழ்நாட்டில் இருந்து ஜெலட்டின் குச்சிகளை எடுத்துச் செல்லும்போது குட்டிமணியை போலீஸார் பிடித்தார்கள். அவரை சிங்களப் படையிடம் கருணாநிதிதான் ஒப்படைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;குட்டிமணி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று உணர்ந்து 1983-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர முயற்சித்தபோது, எதிர்க் கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி ஒப்புக்கொண்டார். அப்போது எம்.ஜி.ஆர். முதல்வர். மகிழ்ச்சியடைந்த நாங்கள் இதுகுறித்து பேச எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது அவர், ‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித் தெரியாது. அவர் இந்த விவகாரம் பற்றி ஏதாவது பேசினால் நான் இந்தக் கோப்பை வாசிப்பேன்’, என்று கூறி அந்த ரகசியங்களை எங்களிடம் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் தாள்களில் குட்டிமணியை ஒப்படைக்கக் கோரிய இலங்கை ராணுவத்தின் ஃபேக்ஸ், டெல்லிக்கு இவர் அனுப்பிய பதில், ‘ஒப்படைக்கிறேன்’ என கருணாநிதி கைப்பட எழுதிக்கொடுத்த கடிதம் என அனைத்து ஆதாரங்களும் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னபடியே சட்டசபையில் எம்.ஜி.ஆர்.அந்த ஆதாரங்களை முழுமையாக வாசித்தார். இது சட்டமன்றக் கோப்புகளிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;‘என் மரணத்திற்குப் பிறகு என்னுடைய கண்களை பார்வையில்லாத ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப்போகும் தமிழீழத்தை அந்தக் கண்களின் வழியாக நான் பார்க்க விரும்புகிறேன்’, இலங்கை வெளிக்கடைச் சிறையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட மாவீரன் குட்டிமணி மரணத்தின் வாயிலில் நின்று உகுத்த வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளுக்காகவே சிங்கள ராணுவம் குட்டிமணியின் கண்களைத் தோண்டி பூட்ஸ் காலால் நசுக்கிய வரலாறை உலகமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் மறந்து விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்து வந்த தடா சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கில் இருந்து பிரபாகரன், பொட்டு அம்மான் பெயர்களை நீக்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் அவர்களது மரணச் சான்றிதழ்கள் இன்னமும் இலங்கை அரசால் வழங்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக பலமுறை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் இலங்கைக்குப் படையெடுத்தும் பலனில்லை. ‘கொழும்புவில் உள்ள இந்திய துணைத் தூதர் மற்றும் இலங்கை அரசு கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இவர்கள் பெயர்களை வழக்கில் இருந்து நீக்க வேண்டும்’ என்ற சி.பி.ஐ. தலைமை விசாரணை அதிகாரியின் அறிக்கையின் பேரில் பிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன…”, என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ பேசுகையில், “என்னை வெளிநாடுகளில் பேச அழைக்கிறார்கல் தமிழ்ச் சகோதரர்கள். ஆனால் நான் போகப் போவதில்லை. அந்த வேலையை தமிழகத்திலேயே செய்யப்போகிறேன்…” என்று ஆரம்பித்தவர், கருணாநிதியின் துரோகங்களைப் பட்டியலிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் “நிறைவாக இருக்கும் வரை மறைவாக இரு’ என காசி ஆனந்தனின் வரிகள், பிரபாகரனுக்கும் பொருந்தும்!” என்று அவர் தனது பேச்சை முடித்த போது கூட்டம் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4722080712196357658-7763791962673744411?l=thamizhini76.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/7763791962673744411/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4722080712196357658&amp;postID=7763791962673744411' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/7763791962673744411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/7763791962673744411'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/2010/11/blog-post.html' title='தமிழ் ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் கருணாநிதி! – நெடுமாறன்'/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-7189408215188868683</id><published>2010-09-06T01:11:00.000-07:00</published><updated>2010-09-06T01:12:39.971-07:00</updated><title type='text'>விழுப்புரம் மாவட்டம், சித்தணியில் நடந்த தண்டவாளத் தகர்ப்பும் அதையொட்டிய காவல்துறை அத்துமீறல்களும்:</title><content type='html'>&lt;object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://fpdownload.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=8,0,0,0" id="top_banner" width="860" align="middle" height="300"&gt;&lt;embed src="http://www.lumpini.in/top_banner.swf" quality="high" bgcolor="#ffffff" name="top_banner" allowscriptaccess="sameDomain" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" width="860" align="middle" height="300"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;                                                                                               &lt;table width="100%" border="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td valign="top" width="17%" bgcolor="#000000"&gt; &lt;center&gt; &lt;object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://fpdownload.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,0,0" id="menu" width="176" align="middle" height="395"&gt; &lt;param name="allowScriptAccess" value="sameDomain"&gt; &lt;param name="movie" value="menu.swf"&gt;&lt;param name="quality" value="high"&gt;&lt;param name="bgcolor" value="#000000"&gt;&lt;embed src="http://www.lumpini.in/menu.swf" quality="high" bgcolor="#000000" name="menu" allowscriptaccess="sameDomain" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" width="176" align="middle" height="395"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt; &lt;/center&gt;                             &lt;/td&gt;                             &lt;td valign="top" width="83%" align="center" bgcolor="#dfdbc7"&gt;                               &lt;table style="border-collapse: collapse;" width="484" bgcolor="#dfdbc7" border="0" cellpadding="4" cellspacing="0" height="341"&gt;    &lt;!--      &lt;tr&gt;                                    &lt;td width="656" bgcolor="#DFDBC7" height="33"&gt;&lt;img border="0" src="title_12.gif" width="656" height="33" /&gt;&lt;/td&gt;                                  &lt;/tr&gt;      --&gt;                                 &lt;tbody&gt;&lt;tr&gt;                   &lt;td valign="top" width="656" align="center" bg height="199" style="color:#dfdbc7;"&gt;                             &lt;table width="615" border="0" cellpadding="4" height="250"&gt; &lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;  &lt;p align="justify"&gt;&lt;span style="font-size:100%;color:#665b4e;"&gt;&lt;b&gt;தண்டவாளத் தகர்ப்பும் காவல்துறை அத்துமீறல்களும்  &lt;br /&gt;                            &lt;/b&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;                          &lt;br /&gt;                                                     &lt;/span&gt; &lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt; &lt;tr&gt;&lt;td&gt;         &lt;table style="border-collapse: collapse;" id="AutoNumber1" width="93%" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;                       &lt;tbody&gt;&lt;tr&gt;                         &lt;td width="100%"&gt;                         &lt;img src="http://www.lumpini.in/viluppuramtrack.jpg" border="0" height="250" /&gt;&lt;/td&gt;                       &lt;/tr&gt;                      &lt;/tbody&gt;&lt;/table&gt;        &lt;/td&gt;&lt;/tr&gt;                       &lt;tr&gt;                         &lt;td valign="top" width="589" bg height="157" style="color:#dfdbc7;"&gt;                           &lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;b&gt; விழுப்புரம் மாவட்டம், சித்தணியில் நடந்த தண்டவாளத் தகர்ப்பும்  அதையொட்டிய காவல்துறை அத்துமீறல்களும்:&lt;br /&gt;- உண்மை அறியும் குழு அறிக்கை&lt;br /&gt;  19 ஜூன் 2010, விழுப்புரம். &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை - திருச்சி அகல ரயில் பாதையில் பேரணி ரயில் நிலையத்திற்கும்  முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள சித்தணி  கிராமத்தின் அருகில் ரயில் பாதையில் ஜூன் 12ஆம் நாள் இரவு சுமார் 2  மணியளவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தண்டவாளம் தகர்ந்து மலைக்கோட்டை  எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து மயிரிழையில் தப்பிய செய்தி  தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெரும் உயிரிழப்பை  எற்படுத்தக்கூடிய இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. எத்தகைய  நியாயமான நோக்கங்களுக்காக இத்தகைய நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் இதன்  மூலம் எந்த நியாயங்களைப் பெற்றுவிடவும் இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தண்டவாளத் தகர்ப்பிற்குக் காரணமானவர்கள் யார் என்பது குறித்து  இதுவரை புலனாய்வில் எந்த முக்கியத் தடயமும் கிடைக்காத நிலையில் இது குறித்த  விசாரணை என்ற பெயரில் விழுப்புரம் மற்றும் அதைச் சுற்றிலும் வாழ்கின்ற  தமிழுணர்வுள்ள இளைஞர்கள் சிலர் காவல்துறையால் கடும் துன்பத்திற்கு  ஆட்படுத்தப்படுவது குறித்து மனித உரிமை செயலாளிகளான எங்களுக்குத் தொடர்ந்து  தகவல்கள் வந்ததையொட்டி இது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்ட உண்மை  அறியும் குழு அமைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;1. பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், (PUHR) சென்னை.&lt;br /&gt;2. கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, (FPR) புதுச்சேரி.&lt;br /&gt;3. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம், (PUCL) காரைக்குடி.&lt;br /&gt;4. பி.வி.ரமேஷ், மனித உரிமைகள் கண்காணிப்புக் கழகம், விழுப்புரம்.&lt;br /&gt;5. M. பரக்கத்துல்லா வழக்குரைஞர் , மனித உரிமை அமைப்புகளுக்கான தேசிய&lt;br /&gt;கூட்டமைப்பு, (NCHRO) திண்டுக்கல்.&lt;br /&gt;6. மு.சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், (PUHR) திருவாரூர்.&lt;br /&gt;7.இரா.முருகப்பன்,இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், திண்டிவனம்.&lt;br /&gt;8. பாஸ்கர், வழக்குரைஞர், மக்கள் கண்காணிப்பகம், வேலூர்.&lt;br /&gt;9. லூசியானா, வழக்குரைஞர், மனித உரிமை இயக்கம்,&lt;br /&gt;11. ஆ.ராஜகணபதி, வழக்குரைஞர், திண்டிவனம்.&lt;br /&gt;11. சு.காளிதாஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, (FPR) புதுச்சேரி.&lt;br /&gt;12. ரஸ்கின் ஜோசப், வழக்குரைஞர், விழுப்புரம்.&lt;br /&gt;13. ஜெயராமன், மக்கள் கண்காணிப்பகம், பண்ருட்டி.&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;இக்குழு நேற்று  (ஜூன்-18 ) அதிகாலை முதல் க்யூ பிரிவு போலிசாரால் மூன்று  நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட 11 தமிழுணர்வுள்ள  இளைஞர்கள் மற்றும் விழுப்புரம், சித்தணி பகுதிகளிலுள்ள பொதுமக்கள்,  விழுப்புரத்திலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள்  ஆகியோரைச் சந்தித்தது. வீடு புகுந்து க்யூ பிரிவு போலீசாரால்  சோதனையிடப்பட்ட தமிழுணர்வுள்ள 3 இளைஞர்களின் வீடுகளை நேரில் சென்று  பார்வையிட்டது. சித்தணியில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும், பேரணி ரயில்  நிலையத்திற்கும் சென்று சம்பவ இடத்தையும், முக்கிய ஆவணங்களையும்  பரிசீலித்தது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட விக்கிரவாண்டி  காவல்நிலைய ஆய்வாளர் டி.விவேகானந்தன், விழுப்புரம் சரக டிஐஜி மாசானமுத்து  ஐபிஎஸ், சிறப்பு புலனாய்வுக்கு நியமிக்கப்பட்டுள்ள வேலூர் க்யூ பிரிவு  ஆய்வாளர் சுந்தரம் ஆகியோருடன் நேரிலும் தொலைபேசியிலும் உரையாடியது. பேரணி  ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் சங்கரவடிவேலுவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு  சில அய்யங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மேற்கண்ட விசாரணைகளின் ஊடாக அறிய வந்த உண்மைகள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.ஜூன் 12ம் தேதி இரவு சரியாக 1:45 மணியளவில் கம்பன் எக்ஸ்பிரஸ் (வண்டி  எண். 6173) சம்பவ இடத்தைக் கடந்து சென்றுள்ளது. இந்த ரயிலின் வருகையால்  முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேலம்  எக்ஸ்பிரஸ் (1064) சற்றுப்பின் சம்பவ இடத்தைத் தாண்டிச் சென்றவுடன் சரியாக  2:08 மணியளவில் அவ்வண்டியின் கார்டு ராஜாராமன் வாக்கிடாக்கி மூலம் பேரணி  நிலையத்திற்கு அனுப்பிய செய்தி பதிவேட்டில் (டிஎஸ்ஆர்) பதிவு  செய்யப்பட்டுள்ளது. 145/10-2, கி.மீ தொலைவில் ரயில் கடக்கும்போது ஒரு  பெரும் சத்தம் ஒன்றை உணர்ந்ததாகக் கார்டு கூறியதையொட்டி அடுத்து வந்த  மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (6178) இரவு 2:23 மணியளவில் நிறுத்தப்பட்டதனால்  பெரும் விபத்தொன்று தவிர்க்கப்பட்டது. அருகில் சென்று பார்த்த பொழுது 98  செ.மீ நீளத்திற்கு ஒருபக்கத் தண்டவாளம் இல்லாதிருந்ததும் அவ்விடத்தில் உள்ள  சரளைக் கற்கள் முற்றிலும் சிதறிப் பள்ளம் ஒன்று உருவாகி இருந்ததும்  கண்டறியப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் உள்ள கிணறு ஒன்றின் மின்சார இணைப்பைப் பயன்படுத்தி சக்தி வாய்ந்த  குண்டு வெடிப்பு ஒன்றின் மூலம் தண்டவாளப் பெயர்ப்பு நடத்தப்பட்டிருந்தது  தெரிந்தது. சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் அவ்விடத்தைக் கடக்கும் முன்னர் குண்டு  வெடிப்பு நிகழ்ந்ததா இல்லை கடந்த பின்னர் நடந்ததா என்பது குறித்து  அதிகாரிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இருவேறு கருத்துக்கள்  நிலவுகின்றன. சுமார் 1மீட்டர் நீளத்திற்கு ஒரு பக்கம் மட்டும் தண்டவாளம்  இல்லாத நிலையில் அதிவேகமாகச் செல்லும் ஒரு ரயில் விபத்தின்றி கடந்துவிட  வாய்ப்புண்டு எனச் சிலர் கூறுகின்றனர். இது குறித்து நுணுக்கத்திறன் உள்ள  பொறியாளர்களே கருத்துக் கூற முடியும் என்றாலும் தானறிந்த வரையில் அவ்வாறு  நடப்பது சாத்தியமில்லை எனவும், அவ்வாறு நடந்திருந்தால் அது ஓர் அதிசயம்  (Miracle) எனவும் நிலைய அதிகாரி சங்கரவடிவேலு குறிப்பிட்டார். சித்தணியைச்  சேர்ந்த ஜெயா என்கிற பெண்மணி முதலில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் அதன்  பின்னர் ரயில் ஒன்று கடந்த சப்தம் கேட்டதாகவும் கூறினார். தண்டவாள  பெயர்ப்புக்குப் பின்னும் சேலம் எக்ஸ்பிரஸ் விபத்தில்லாமல் கடந்துள்ளது என  மக்கள் நம்புகிறார்கள் என்றாலும், இது குறித்த நுணுக்கத்திறன் பெற்ற  பொறியாளர்கள் மற்றும் தடயவியல் வல்லுநர்கள் இறுதி முடிவு தெரிவிக்காதவரை  எந்த முடிவுக்கும் வர முடியாது என்றார் டிஐஜி மாசானமுத்து. எப்படி  இருந்தாலும் கவனமாகச் செயற்பட்டு விபத்தைத் தடுத்த ரயில்வே ஊழியர்கள்  பாராட்டுக்குரியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; சம்பவ இடத்தில் கைரேகை உள்ளிட்ட எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை என்றார்  முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளர்  விவேகானந்தன். எனினும் முதல் தகவல் அறிக்கையில் (குற்ற எண் 259/2010)  கீழ்க்கண்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிமருந்து  பொருள் சட்டம் பிரிவு 3 மற்றும் ரயில்வே சட்டப் பிரிவுகள் 150(2) (b), 151  (1) (2), பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் சட்டப்பிரிவு 4, சட்ட விரோத  நடவடிக்ககள் தடுப்புச் சட்டப்பிரிவு 13, மற்றும் இந்திய தண்டனைச்  சட்டப்பிரிவு 307. ஆக இன்றுவரை யார் செய்தார்கள் என்பது குறித்து எந்தத்  துல்லியமான தகவல்களும் புலன்விசாரிக்கும் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை  என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;2. தண்டவாளத் தகர்ப்பு நடந்த அடுத்தநாளே காவல்துறை இயக்குநர் லத்திகா சரண்  ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை எனக் கூறினார்.  சம்பவ இடத்தில் கிடந்ததாகக் கூறப்படுகிற ஒரு துண்டறிக்கையை மையமாக வைத்து  விடுதலைப் புலிகள் ஆதரவு - தமிழ் தேசிய சக்திகள் மட்டுமே இதைச் செய்திருக்க  முடியும் என்ற ஒரே கோணத்தில் மட்டும் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.  அந்த அடிப்படையில் புலன் விசாரணை ஜூன் 14 அன்று க்யூ பிரிவிற்கு  மாற்றப்பட்டது. இதற்கிடையில் ஜூன் 12ம் தேதி பகல் தொடங்கி தமிழ் தேசிய  உணர்வுடைய கீழ்க்கண்ட 11 இளைஞர்கள் க்யூ பிரிவு காவலர் கார்த்திக்  என்பவரின் அடையாளம் காட்டலில் பிடித்துச் செல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;1. கா.பாலமுருகன் (எ) தமிழ்வேங்கை (24), த.பெ. காசிநாதன், விழுப்புரம்.&lt;br /&gt;தமிழர் தேசிய இயக்கம், எல்ஒசி முகவர், பிடித்துச் செல்லப்பட்ட தேதி : ஜூன்-12.&lt;br /&gt;&lt;br /&gt;2. எழில் இளங்கோ, (43), த.பெ. விழுப்பறையனார், விழுப்புரம்.&lt;br /&gt;தமிழர் தேசிய இயக்கம்,ஜூன்-12.&lt;br /&gt;&lt;br /&gt;3. ஜோதி நரசிம்மன் (36), த.பெ. பாண்டுரங்கன், விழுப்புரம்.&lt;br /&gt;தொலைக்காட்சி நிருபர், தமிழர் தேசிய இயக்கம், ஜூன்-12.காலை 9-20&lt;br /&gt;&lt;br /&gt;4. ஏழுமலை (37), த.பெ. தேவராஜ், ப. வில்லியனூர்.&lt;br /&gt;புத்தக விற்பனையாளர், தமிழர் கழகம், ஜூன்:12, காலை 11-மணி.&lt;br /&gt;&lt;br /&gt;5. பாபு (37), த.பெ. கோதண்டம், அச்சகம், விழுப்புரம்.&lt;br /&gt;தமிழர் தேசிய இயக்கம், ஜூன்-12. பகல் 2-00&lt;br /&gt;&lt;br /&gt;6. குமார் (37), த.பெ. கலியபெருமாள்,&lt;br /&gt;தமிழர் தேசிய இயக்கம், உளுந்தூர்பேட்டை. ஜூன்-12. இரவு 10-30.&lt;br /&gt;&lt;br /&gt;7. சக்திவேல் (40), த.பெ. அண்ணாமலை,&lt;br /&gt;திமுக கிளை செயலாளர், செஞ்சி.&lt;br /&gt;&lt;br /&gt;8. கணேசன் (43), த.பெ. கோதண்டபாணி,&lt;br /&gt;தமிழர் தேசிய இயக்கம், விழுப்புரம்.. ஜூன்-12. காலை 11-00 மணி&lt;br /&gt;&lt;br /&gt; 9. ராஜநாயகம் (39), த.பெ. நாராயணசாமி,&lt;br /&gt;ம.தி.மு.க. செஞ்சி.ஜூன் 13, இரவு 1 மணி.&lt;br /&gt;&lt;br /&gt;10. சிவராமன் (41), த.பெ. பலராமன்,&lt;br /&gt;தமிழர் தேசிய இயக்கம், விழுப்புரம்.ஜூன்-14. காலை 7-15&lt;br /&gt;&lt;br /&gt;11. ஜெயராமன் (32), த.பெ. ஜானகிராமன்,&lt;br /&gt;தமிழர் தேசிய இயக்கம், விழுப்புரம்.ஜூன்-12. இரவு 11-00&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/b&gt; இவர்கள் அனைவரும் விழுப்புரத்தை ஒட்டியுள்ள காணை (3பேர்), கெடார் (2பேர்),  கஞ்சனூர் (3பேர்) வளவனூர் (2பேர்) சத்தியமங்கலம் (ஒருவர்) என மேற்கூறிய  பல்வேறு காவல் நிலையங்களில் வைத்துத் தொடர்ந்து விசாரிக்கப்பட்டனர்.  வெறுந்தரையில் உட்காரச் சொல்லி தொடர்ச்சியாக 5 மணிநேரம் பின்னர் சிறிது  இடைவெளி விட்டு மீண்டும் 5 மணிநேரம் என மாறி மாறி பல்வேறு காவல்துறைப்  பிரிவினர், அதிகாரிகள் ஆகியோர் ஒரே மாதிரியான கேள்விகளைத் திருப்பித்  திருப்பி கேட்டுள்ளனர். 1 முதல் 9 வரை மேலும் கீழுமாக எழுதுதல், ஆங்கில  தமிழ் எழுத்துக்களை எழுதுதல் என்றவாறு விசாரணை தொடர்ந்துள்ளது. ஒரு சிலரை  இரண்டாம் நாள் இரவு உறவினர் மற்றும் நண்பர்களிடம் ஜாமீன் கடிதம் வாங்கிக்  கொண்டு அனுப்பி மீண்டும் அடுத்தநாள் வரவழைத்துள்ளனர். 'தமிழர் தேசிய  இயக்கத்தலைவர் பழ.நெடுமாறனை உனக்கு எவ்வாறு தெரியும்? அவர் ஏன் முதல்வர்  கருணாநிதியை துரோகி என்றெல்லாம் பேசுகிறார்? நீ விடுதலைப்புலிகளை  ஆதரிக்கிறாயா? இந்த சம்பவத்தை ஏன் செய்தாய்? கடந்த 5 நாட்களில் யார் யாரை  எல்லாம் சந்தித்தாய்?" - முதலான கேள்விகள் திரும்பத் திரும்பக்  கேட்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் பிடித்துச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் சென்னை உயர்  நீதிமன்றத்தில் ஜூன் 15ம் நாள் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.  இது தொலைகாட்சிகளில் அறிவிக்கப்பட்டவுடன் அன்று இரவு 11.00 மணியளவில்  அனைவரும் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அது முன்னதாக  ஒவ்வொருவரிடமும் தாங்கள் ஒவ்வொரு நாளும் மாலை வீட்டிற்குச் செல்ல  அனுமதிக்கப்பட்டதாக எழுதித்தருமாறு கேட்டனர். வற்புறுத்தப்பட்டதன் பேரில்  ஒரு சிலர் அவ்வாறு எழுதியும் கொடுத்தனர். ஒருசிலர் அப்படி எழுதிக் கொடுக்க  மறுத்தனர். இன்னும் ஒரு சிலரிடம் ஆஜர் முச்சரிப்பில் மேலே சிலவரிகள்  இடைவெளிவிட்டு கையொப்பங்கள் பெறப்பட்டன. எல்லோரின் கைரேகைகளும் பதிவு  செய்யப்பட்டன, புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. வெளியே செல்லும்போது  வீடியோக்களும் எடுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூன் 15இம் தேதியன்று எழில் இளங்கோ, ஜோதிநரசிம்மன் ஆகியோர் வீடுகளுக்குச்  சென்று சுமார் 3 மணிநேரம் அறைகளைக் கலைத்துச் சோதனையிடப்பட்டுள்ளனர்.  தமிழ்வேங்கை இல்லத்தில் 16ம் தேதி இவ்வாறு சோதனையிடப்பட்டது. எழில்  இளங்கோவின் வீட்டில் ஒருகதவின் பூட்டையும் உடைத்துள்ளனர். அனைவரின்  வீடுகளிலும் புத்தகங்கள், குறுந்தகடுகள், செல்போன்கள் போன்றவற்றைக்  கைப்பற்றிச் சென்றுள்ளனர். எழில் இளங்கோ வீட்டில் அவரைக் கைதுசெய்ய வந்த  அன்று யாரும் இல்லாத நிலையில் அவரது தந்தையின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே  இருந்த பொருட்களையும் கலைத்துள்ளனர். ஆண்கள் இல்லாத நேரத்தில் எழில்  இளங்கோ வீட்டில் அவரது மனைவி கோதை, தமிழ்வேங்கை வீட்டில் அவரது மனைவி  மங்கையர்க்கரசி ஆகியோர் தனியாக இருந்தபோது இச்சோதனைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்வேங்கையின் மனைவி மங்கையர்க்கரசி அச்சத்தால்  உள்ளிருந்த கதவை தாளிட்டிருந்த நிலையில் காவல்துறையினர் குறிப்பாக க்யூ  பிரிவு கார்த்திக் கதவை திறக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். உறவினர்கள்  மற்றும் நண்பர்கள் வரும்வரை கூடக் காத்திருக்க தயாராக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கொன்றைச் சொல்வது முக்கியம். இவர்கள் அனைவரும் வெளிப்படையாகவும்,  ஜனநாயகபூர்வமாகவும் பலகாலமாக விழுப்புரத்தில் இயங்கி வருபவர்கள்.  இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க காவல்துறையால் அவர்கள் தொடர்பு  கொள்ளப்பட்டபோது அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பைத் தந்துள்ளனர்.  கூப்பிட்டபோதெல்லாம் எங்கு வரச்சொன்னாலும் அங்கு சென்று தங்களை  ஒப்படைத்துள்ளனர். அனைத்து கேள்விகளுக்கும் முறையாகவும், சோர்வின்றியும்  பதிலளித்துள்ளனர். எனினும் இவர்களை 4 நாட்கள் சட்டவிரோதமாக க்யூ பிரிவு  காவல்துறையினர் அடைத்து வைத்து மனஅளவிலான சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;3. நான்கு நாட்கள சட்டவிரோதக் காவலில் தடுத்துவைக்கப்பட்ட மேற்கண்ட 11  இளைஞர்களும், தமிழ் உணர்வாளர்கள், பழங்குடியினர், தலித்துகள், முஸ்லீம்கள்  ஆகியோர்களின் உரிமைகளுக்காகவும் சுற்றுச்சூழல், ஈழத்தமிழர் உரிமை  ஆகியவற்றிற்காகவும், வெளிப்படையாகவும், ஜனநாயகபூர்வமாகவும் இயங்கி  வந்தவர்கள். இவர்களைப் பற்றி விழுப்புரம் நகரத்தைச் சார்ந்த முக்கிய  அரசியல் கட்சித் தலைவர்கள் எமது குழுவினரிடம் தெரிவித்த கருத்துக்களாவன:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(1) திரு. சக்கரை (திமுக முன்னாள் நகர செயலாளர்) &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இவர்களை நான் பலகாலமாக அறிவேன். ஜனநாயகமுறையில் செயல்படுபவர்கள்.  இவர்களால் மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை. மக்கள நலனுக்காக ரயிலை  மறிக்கும் போராட்டம் வேண்டுமானால் நடத்துவார்களே தவிர எந்த நாளும்  தண்டவாளத்தை தகர்க்கும் வேலையில் ஈடுபடமாட்டார்கள்".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(2) மு.ய.முஸ்தாக்தீன் (தமுமுக மாவட்ட செயலாளர்)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இவர்களோடு நான் நீண்ட நாட்களாக வேலை செய்திருக்கிறேன். தலித்துகள்,  முஸ்லீம்கள் மற்றும் அடித்தளப் பிரிவினரின் உரிமைகளுக்காக அனுமதிபெற்று  சட்டப்பூர்வமான போராட்டங்களைத்தான் நடத்தி வந்தார்கள்".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(3) சி.அப்பாவு (தி.க.) &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பகுத்தறிவு உணர்வு மிக்க இளைஞர்கள், நெடுமாறன் அமைப்பிலிருந்து தமிழ்  உணர்வுடன் செயல்படக் கூடியவர்கள். ஜனநாயக விரோதமான வழியில் இவர்கள்  செயல்பட்டது இல்லை".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(4) ஏ.வெற்றிசெல்வன் (மாவட்ட செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள்) &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இவர்களில் 5,6பேரை எனக்குத் தெரியும். மனித உரிமை மீறல்களைக் கண்டால் ஜனநாயக முறையில் எதிர்த்து நிற்பார்கள்".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(5) டாக்டர். இரா.மாசிலாமணி  ( Ex. MLA மாநில பொருளாளர், மதிமுக) &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"காவல்துறையினர் ஆரம்பம் முதலே முன் முடிவுகளுடன் இயங்கி வருகிறார்கள்.  எந்த விசாரணையையும் செய்யாமலேயே மாவோயிஸ்டுகளுக்கும், இதற்கும் சம்பந்தம்  இல்லை என்றார்கள். இந்த நிகழ்ச்சியுடன் இந்த இளைஞர்களைத் தொடர்புபடுத்தி  ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்கள். தினமணி நாளிதழ் தலையங்கத்தில்  எழுதியதுபோல் உளவுத்துறையினர் இந்த காரியத்தைச் செய்திருக்கலாமே தவிர  இவர்கள் செய்திருக்க மாட்டார்கள்".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(6) பாஸ்கர் (அஇஅதிமுக நகர செயலாளர்)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(எங்கள் கட்சியின் நிலைப்பாடு தெரியாமல் நான் எதையும் பேசமாட்டேன்&lt;br /&gt;என்று  எங்களுடன் பேச மறுத்தார். தண்டவாளத் தகர்ப்பு தவறு என்கிற கருத்துதான்  எங்களுடைய கருத்தும் கூட, உள்ளூர்க்காரர் என்கிற முறையில் இந்த 11  பேரைப்பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோதும் கட்சி நிலைப்பாடு  தெரியாமல் பேசமாட்டேன் எனப் பேச மறுத்துவிட்டார்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(7) வே.அந்தோணி குரூசு (சாந்தி நிலையம், குழந்தைகள் உரிமை இயக்கம்)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த 11பேரையும் எனக்குத் தெரியும் இவர்கள் தமிழ் ஆதரவாளர்கள்.  பெரும்பாலோர் தமிழர் தேசிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள். காவல்துறை  அனுமதியின்றி எந்தப் போராட்டத்தையும் இவர்கள் நடத்தியதில்லை.  தமிழுணர்வாளர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அரசு இவர்களைப் பழிவாங்குகிறது".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(8) தமிழேந்தி (வி.சி.) &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த ஊருக்கு வந்த 17 ஆண்டுகளாக இவர்களில் பலரை எனக்குத் தெரியும்.  குறிப்பாக எழில் இளங்கோ, ஜோதிநரசிம்மன் போன்றோர் எனது நெருங்கிய நண்பர்கள்.  மனித உரிமை மீறல்களைப் பொறுக்கமாட்டார்கள். ஆனால் அமைதி வழியிலேயே அவற்றை  எதிர்ப்பார்கள்".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(9) ஸ்டாலின்மணி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"தண்டவாளப் பெயர்ப்பு வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. ஆனால் இவர்கள்  அதைச் செய்திருக்கமாட்டார்கள. இவர்கள் அப்படி செய்யக் கூடியவர்கள் இல்லை".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(10) கோ.ப.அன்பு (பா.ம.க.) &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல தமிழ்ப்பற்றுள்ள இளைஞர்கள். தமிழில் பற்று வைப்பதை குற்றம் என்றா  சொல்லமுடியும்? இவர்கள் வெளிப்படையாக இயங்கியவர்கள்.அப்படி செய்திருக்க  வாய்ப்பில்லை. செம்மொழி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு தமிழுணர்வாளர்களை  இப்படி கொடுமைப்படுத்தக் கூடாது".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(11) ஆனந்தன் (மா.கம்யூ.கட்சி) &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஜனநாயக முறையில் தமிழ் ஆதரவு குறித்து செயல்பட்டு வந்தவர்கள். பாலமுருகன்  உள்பட அனைவரையும் எனக்குத் தெரியும். இந்த மாதிரி தீவிர நடவடிக்கைகளில்  எல்லாம் இவர்கள் இறங்கக் கூடியவர்கள் இல்லை".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;(12) த.பழமலய், மூத்த தமிழ்க் கவிஞர். &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நெடுமாறன் ஐயா மற்றும் எங்களைப் போன்றவர்களின் கருத்துக்களாலும்  பணிகளாலும் ஊக்குவிக்கப்பட்டு செயல்படும் இந்த இளைஞர்களை நான் அறிவேன்.  தமிழுணர்வுள்ள இவர்கள் தமிழ்நாட்டுக்குள் ஓடுகிற தமிழ் மக்களை ஏற்றிச்  செல்லும் வாகனம் ஒன்றைக் கவிழ்த்து தமிழர்களைக் கொல்ல முயற்சிக்க  மாட்டார்கள் என உறுதியாகச் சொல்கிறேன். தவிரவும் இவர்கள் இத்தகைய தொழில்  நுட்பங்கள் எல்லாம் தெரிந்தவர்களும் இல்லை".&lt;br /&gt;&lt;br /&gt; 4.காவல்துறை அதிகாரிகளை நாங்கள் சந்தித்து இதுபோல சட்டவிரோதமாக நான்கு  நாட்கள்வரை தடுத்து வைக்கப்பட்டது குறித்து கேட்டபொழுது அவர்களிடமிருந்து  சரியான பதில் இல்லை. விசாரணை முழுக்க க்யூ பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதால்  எதுவும் கருத்துச் சொல்ல முடியாது என டிஐஜி மாசானமுத்து கூறினார். நாங்கள்  வற்புறுத்திக் கேட்டபொழுது, "நீங்கள் எனது நாற்காலியில் இருந்தால் என்ன  செய்திருப்பீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்" என்றார். க்யூ பிரிவு  ஆய்வாளர் சுந்தரத்திடம் பேசியபொழுது "அவர்கள் வெளிப்படையாகச்  செயல்படுபவர்கள் என்று எங்களுக்கும் தெரியும். அதனால் தான் அவர்களை நாங்கள்  கண்ணியமாக நடத்தினோம்" என்றார். சட்டவிரோதமாக 4 நாட்கள் தடுத்து  வைத்திருந்தது பற்றி கேட்டபொழுது ''அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தினம்  அவர்களை வீட்டிற்குச் செல்வதற்கு அனுமதித்தோம்" என்று முழுப்  பொய்யுரைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt; 5. நாங்கள் இந்த விசாரணையை மேற்கொண்டிருந்த நேற்று (ஜூன்-18) மதியம்  மேற்படி ஜோதிநரசிம்மன், பாபு, ஏழுமலை, குமார் ஆகியோரும் இவர்களோடு  தங்கராசு, முருகன் என்பவர்களும் க்யூ பிரிவு போலீசாரைக் கண்டித்துச்  சுவரொட்டி ஒட்டியதாக கைது செய்யப்பட்டு கீழ்கண்ட பிரிவுகளின்படி வழக்கு  தொடர்ந்து ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். நகர காவல் நிலைய குற்ற எண்  226/2010 குற்றப்பிரிவுகள் 147 மற்றும், 1959 சுவரொட்டி சட்டம் 4(1), 4(ஏ),  மற்றும் 151 சிஆர்பிசி. ரிமாண்ட் செய்யப்பட்டவர்களில் முருகன் என்பவர்  கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் ஒரு தொழிலாளி, எந்த இயக்கங்களிலும்  தொடர்பில்லாதவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவரொட்டி ஒட்டியதாக இத்தனை கடும்பிரிவுகளின் கீழ் ஏன் வழக்கு  தொடர்ந்துள்ளீர்கள் என்று நாங்கள் கேட்டபோது, எனக்குத் தெரியாது.  விசாரிக்கிறேன் என டிஐஜியும் க்யூ பிரிவு சுந்தரமும் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எமது பார்வைகளும் கோரிக்கைகளும்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt; 01. ரயில் தண்டவாளப் பெயர்ப்பு தொடர்பான புலனாய்வில் எந்த ஆதாரமும்  கிடைக்காத நிலையில் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லாப்படும்  கையால் எழுதப்பட்ட ஒரு தாளை வைத்து ஒரு கோணத்தில் மட்டுமே புலனாய்வு  மேற்கொள்ளப்படுவது கண்டிக்கத்தக்கது. உளவுத்துறை கூட இதைச் செய்திருக்கலாம்  என்கிற கருத்துக்கள் கூட மக்கள் மத்தியில் நிலவும் நிலையில் இப்படி அவசர  கோலமாக ஒரு குறிப்பிட்ட அமைப்மைச் சேர்ந்தவர்கள் காவல்துறையின்  தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர். தமிழர் தேசிய இயக்கம் என்கிற ஒரு அமைப்பே  இன்று இலக்காக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஈழத் தமிழர்கள் மற்றும் மனித  உரிமைகளுக்காகப் போராடி வந்த இந்த இளைஞர்களை, அதிலும் குறிப்பாக  தமிழ்வேங்கை, ஜோதிநரசிம்மன், எழில் இளங்கோ ஆகியோரை எப்படியாவது இந்த  வழக்கில் சிக்கவைத்துப் பழிதீர்க்க காவல்துறை முயல்வது வெளிப்படையாகத்  தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;02. தாங்கள் எந்த நேரமும் விசாரணைக்கு வருவதற்காக இந்த 11 இளைஞர்களும்  தயாராக இருந்த நிலையில் அவர்களை வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்று 3 முதல் 4  நாட்கள் வரை சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருந்ததோடு அவர்களது உறவினர்கள்  நீதிமன்றத்தை அணுகிய பின்னர் தினந்தோறும் அவர்கள் வீட்டிற்குச் செல்ல  அனுமதியளிக்கப்பட்டது போல அவர்களை வற்புறுத்தி பொய் ஆவணங்கள் தயாரிக்க  முற்பட்ட க்யூ பிரிவு காவல்துறையினரை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தித்  தண்டிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;03. தண்டவாளப் பெயர்ப்பு தொடர்பாக வல்லுனர் குழுவின் அறிக்கையொன்றை அரசு  வெளியிடவேண்டும். இவ்வழக்கை க்யூ பிரிவிலிருந்து மாற்றி ஓரு டிஐஜி  தலைமையிலான சிபிசிஐடி விசாரணைக்குட்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;04. வெறும் சுவரொட்டி ஒட்டிய ஒரு காரணத்திற்காக இந்த 11 பேரில் நால்வர்  உள்ளிட்ட அறுவரை கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் காவலில் வைத்துள்ளதை  வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு  விடுதலை செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;05.விழுப்புரம் மாவட்ட மனித உரிமை ஆர்வலர்கள், காவல்துறையின்  அத்துமீறல்களைத் தொடர்ந்து போராட்டங்கள், சிறு வெளியிடுகள், மாநாடுகள்,  பேரணிகள் ஆகியவற்றின் ஊடாக வெளிக்கொணர்ந்து வருவது பாராட்டுக்குரியது.  தண்டவாளப் பெயர்ப்பை ஒட்டி நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்களிலும்  உடனடியாகத் தலையிட்டு சுவரொட்டிகள் முதலியவைகள் அச்சிட்டு மக்களின் கவனத்தை  ஈர்த்த விழுப்புரம் மாவட்ட மனித உரிமை அமைப்புகளையும் அவர்களுடன் இணைந்து  செயல்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்பினரையும் இக்குழு  பாராட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தொடர்பு முகவரி :&lt;/b&gt; அ.மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை -2&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;செல் :&lt;/b&gt; 94441 20582   &lt;/span&gt;&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4722080712196357658-7189408215188868683?l=thamizhini76.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/7189408215188868683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4722080712196357658&amp;postID=7189408215188868683' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/7189408215188868683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/7189408215188868683'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/2010/09/blog-post.html' title='விழுப்புரம் மாவட்டம், சித்தணியில் நடந்த தண்டவாளத் தகர்ப்பும் அதையொட்டிய காவல்துறை அத்துமீறல்களும்:'/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-6394562516357575323</id><published>2010-07-21T02:37:00.000-07:00</published><updated>2010-07-21T02:41:38.660-07:00</updated><title type='text'>அவசியம் பார்க்கவும்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/TEbAUdDfieI/AAAAAAAAAX8/PRZQHB1RU4s/s1600/20072010041.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5496291852881463778" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px" alt="" src="http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/TEbAUdDfieI/AAAAAAAAAX8/PRZQHB1RU4s/s400/20072010041.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4722080712196357658-6394562516357575323?l=thamizhini76.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/6394562516357575323/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4722080712196357658&amp;postID=6394562516357575323' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/6394562516357575323'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/6394562516357575323'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/2010/07/blog-post_21.html' title='அவசியம் பார்க்கவும்'/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/TEbAUdDfieI/AAAAAAAAAX8/PRZQHB1RU4s/s72-c/20072010041.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-2689479474057538131</id><published>2010-07-19T06:08:00.000-07:00</published><updated>2010-07-19T06:12:20.671-07:00</updated><title type='text'>விடுதலை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/TERPDXxGdXI/AAAAAAAAAX0/juoUigA3fPk/s1600/1.jpg"&gt;&lt;img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 400px; height: 268px;" src="http://2.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/TERPDXxGdXI/AAAAAAAAAX0/juoUigA3fPk/s400/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5495604364637009266" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வை.கோ,பழ.நெடுமாறன்,நடராஜன்,விடுதலை ராஜேந்திரன் விடுதலை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4722080712196357658-2689479474057538131?l=thamizhini76.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/2689479474057538131/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4722080712196357658&amp;postID=2689479474057538131' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/2689479474057538131'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/2689479474057538131'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/2010/07/blog-post.html' title='விடுதலை'/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/TERPDXxGdXI/AAAAAAAAAX0/juoUigA3fPk/s72-c/1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-2905375199031948268</id><published>2010-05-10T05:37:00.001-07:00</published><updated>2010-05-10T05:39:46.117-07:00</updated><title type='text'>தடுமாறும்   தறுதலைகள்</title><content type='html'>&lt;p style="text-align: justify;"&gt;கடந்த ஏப்ரல் 27ந் தேதி நாடு தழுவிய வேலை  நிறுத்தம். வேலை நிறுத்தத்திற்கு எதிர் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.  அவசிய பொருட்களின் விலைஉயர்வு, முக்கிய குற்றச்சாட்டாக இந்த அடைப்புக்கு  காரணம் சொல்லப்பட்டது. &lt;span id="more-15121"&gt;&lt;/span&gt;அடைப்பு மற்றும் வேலை  நிறுத்தத்திற்கு நாடுதழுவிய அளவில் பெரும் ஆதரவு இல்லை என கலைஞர் மற்றும்  சன் தொலைக்காட்சி குழுமங்கள் மாறி மாறி செய்திகள் வாசித்துக் கொண்டிருந்தன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;உண்மையிலேயே இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்படவில்லை என்பதை அறிவிப்பதற்கு கலைஞர் தொலைக்காட்சிக்கு ஒரு உண்மை  விளம்பி தேவைப்பட்டார். அவர்கள் தேடி சென்ற இடம் வீரமணி. திராவிடர் கழக  பொதுச்செயலாளரான வீரமணி, கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர்களிடம்,  தமிழ்நாட்டில் பாலும் தேனும் செழித்து ஓடுகிறது. இங்கே, இந்தியாவில் மற்ற  மாநிலங்களிலாவது விலைவாசி உயர்வால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது  நடைபெறுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படியெல்லாம் இல்லை. கலைஞர் ஆட்சி  என்பது பொற்கால ஆட்சி. குப்தர்களின் காலம் போலவே, கலைஞரின் காலமும்  பொற்காலம். ஆகவேதான் மக்கள் எதிர்கட்சிகளின் எந்த குரலையும் கேட்க தயாராக  இல்லாமல், அவரவர் இயல்பு நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என  அறிவித்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;தமிழ்நாட்டில் உண்மையிலேயே அப்படித்தான்  இருக்கிறதா? தமிழ்நாட்டில் விலைவாசி உயரவில்லையா? தமிழ்நாட்டு மக்களெல்லாம்  மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? என்கிற  கேள்விகள் எல்லாம் நாம் அவரிடம் திரும்ப கேட்க முடியாது. கலைஞர் எதை  செய்தாலும் அதை மிக சிறப்பாக செய்வார் என்று சொல்லக்கூடிய ஒரு உளவியல்  கட்டுஅப்பாட்டிற்கு தமது திராவிடர் கழகத்தை அவர் கொண்டுவந்து விட்டார்.  எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலக்கட்டம்.  எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக கலைஞர், மிக மிக  கீழிறங்கி பேசிக் கொண்டிருந்த காலநிலை. ஒருவேளை கலைஞர் பேசிய பேச்சுக்களை,  கலைஞரே எடுத்து திரும்ப வாசித்தால் அவரே வெட்கப்படுவார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;a href="http://meenakam.com/wp-content/uploads/2010/05/thiruma_subav_veeramani.jpg"&gt;&lt;img class="aligncenter size-medium wp-image-15122" title="thiruma_subav_veeramani" src="http://meenakam.com/wp-content/uploads/2010/05/thiruma_subav_veeramani-500x375.jpg" alt="" width="500" height="375" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஆனாலும்கூட, அமெரிக்க மருத்துவமனையில்  இருந்துகொண்டே எம்.ஜி.ஆரின் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்  மாபெரும் வெற்றியை தமிழ்நாட்டில் பெற்றது. அப்போது இத்தேர்தல் வெற்றியைக்  குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தது. அந்த விமர்சனங்களில் வீரமணி  அவர்களின் விமர்சனம் மிக சிறப்பு வாய்ந்தது. நாங்கள் சிறுவர்களாக  இருக்கும்போது மாலைமுரசு நாளிதழில் அந்த விமர்சனத்தை படித்ததாக நினைவு.  வரிக்கு வரி அவை எமது நினைவில் இல்லை என்றாலும், அவர் சொல்லியதின்  உள்ளடக்கம் கலைஞர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இவ்வளவு கீழிறங்கி  பேசி இருக்க வேண்டாம் என்பதுதான்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;உண்மையிலேயே வீரமணியின் நேர்மையைக்  குறித்து நாங்கள் எல்லாம் வியந்தோம். அப்போதைய காலக்கட்டத்தில்  தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலையைக் குறித்தும், தமிழீழத்தின் ஆளுமையைக்  குறித்தும் அலசும் ஒரு நடுவமாக திராவிடர் கழகம் அமைந்திருந்தது. நாங்கள்  அரைக்கால் சட்டைப் போட்டுக் கொண்டு அவர்களின் அந்த அரங்குக் கூட்டங்களில்  செவிகளை வேறு பக்கம் திருப்பாமல், அவர்கள் சொல் கேட்டு வியந்து  கொண்டிருப்போம். ஆனால் காலநிலை மாற்றம் எவ்வாறெல்லாம் அவர்களை  அடித்துப்போகிறது என்பதை சிந்திக்கும்போது, இப்போது வேதனையாக இருக்கிறது.  திராவிடர் கழகத்தின் பரிணாம வளர்ச்சி, செயலலிதாவிற்கு வீராங்கணை பட்டம்  வழங்கும் அளவிற்கு, அளவில்லா உயர்வை கண்டது. அதற்கான காரணங்களும் அளவிட  முடியாமல் அடுக்கி வைக்கப்பட்டது.  மீண்டும் தி.மு.க. ஆட்சி அரியணைக்கு  வந்தவுடன், திராவிட கழகத்தின் குரல் அறிவாலயத்திற்கு ஆதரவாக எழுந்து நிற்க  தொடங்கியது. அது திமுகவுக்கும் தேவையாக இருந்தது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இறுதியாக, எமது அன்னை, சென்னைக்கு  மருத்துவ தேவைக்கு வருவதை தடுத்து, திருப்பி அனுப்பிய செய்தியை எப்படி  திட்டமிட்டு, அது ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு அரசு செய்ததைப் போன்ற ஒரு பொய்  தோற்றத்தை ஏற்படுத்த முனைப்புக் காட்டினார்கள் என்பது இன்றுவரை விளங்காத  புதிராக இருக்கிறது. இதை மாற்றுவதற்கு அவர்கள் தயாராக இல்லை. காரணம்,  அவர்களுக்கு அவர்களின் கல்வி நிறுவனங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு  கட்டாயமாக ஆட்சி அதிகாரத்தின் துணை தேவைப்படுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இவர் நிலை இப்படி. விடுதலை சிறுத்தைகளின்  பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் கலைஞருக்கு விருது வழங்கிய விழாவில்  கீழ்கண்டவாறு பேசியிருக்கிறார்.உங்களோடு சேர்ந்ததால் என்னை சட்டமன்ற  உறுப்பினராக்கி இருக்கிறீர்கள். உங்களோடு சேர்ந்ததால் என்னை  நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறீர்கள். அதற்கு காலா  காலத்திற்கும் உங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.” என்று  கூறியதோடு திருமா முடித்திருக்கலாம். ஆனால் ஆறாவது முறையாக கலைஞரை  அரியணையில் அமரவைத்து அழகுபார்க்க வேண்டும் என்று சொல்லியதில் நமக்கு  வியப்பு மேலிடுகிறது. காரணம், சுவர்கள் எல்லாம் 2011 சிறுத்தைகளின் ஆண்டு  என்று வரையப்பட்டிருக்கிறது. சிறுத்தைகள் இயக்கத் தோழர்களும்,  ஒடுக்கப்பட்டவர்களின் ஆட்சி வந்துவிடும் என்ற நம்பிக்கையில் தடம்புரலாமல்  பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் கலைஞரை அரியணையில் அமர்த்துவது  என்றால், சிறுத்தைகளின் ஆண்டு தள்ளிப்போகிறதா என்பதை அறிய விரும்புகிறோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;தலைவர் கலைஞர் என்று வார்த்தைக்கு  வார்த்தை அழைத்த திருமாவைக் கேட்கிறோம், கலைஞர் தங்களுக்கு மட்டும் தலைவரா?  இல்லை தங்களை நம்பி தமது வாழ்வை ஒப்படைத்துள்ள ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட  இளைஞர்களுக்கும் தலைவரா? என்பதை நீங்கள் ஏன் அறிவிக்கவில்லை. புகழ்வதற்கு  என்னவெல்லாம் வார்த்தைகள் வேண்டுமோ அத்தனை வார்த்தைகளையும் தோண்டி எடுத்து  வாழ்த்தியிருக்கிறார். தமிழர் மரபு வாழ்த்தவேண்டும். வாழ்க என்று சொல்வது  சிறந்ததொன்றுதான். ஆனால் மனசாட்சியைத் தொட்டு நீங்கள் சொல்லுங்கள் திருமா,  நீங்கள் அடைந்த சட்டமன்ற, மக்களவை உறுப்பினர் பொறுப்புகள் கலைஞர் போட்ட  பிச்சையா? கடந்த 25 ஆண்டுகாலமாக தாங்கள் ஆற்றிய கடும் பணி, தங்களின்  தலைமையின்மீது நம்பிக்கைக் கொண்டு, அப்பாவி ஒடுக்கப்பட்ட மக்கள்  ஏற்படுத்திய ஈக வெளிப்பாடு.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஒரே வரியில் சொல்வதென்றால், அந்த  தாழ்த்தப்பட்ட மக்களின் குருதி கொடை தான் உங்கள் உறுப்பினர் பதவி.  அவர்களின் தோளின் மீதேறிதான் தாங்கள் இந்த சிகரத்தை தொட்டிருக்கிறீர்கள்  என்பதை மறந்துவிடக் கூடாது. ஆனால் அவர்கள் இன்னமும் அந்த சேரியில் இருந்து  வெளிவரவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? தங்களை தமது மானசீக தலைவராக இந்த  இளைஞர்கள் ஏற்றுக் கொண்டதின் அடையாளமாக சே குவேரா, தேசிய தலைவர், பிடல்  என்று புரட்சிகர தலைவர்களோடு எல்லாம் தங்களை ஒப்புமைப்படுத்தி  வெட்டுருக்களாக பதிவு செய்து வைத்திருக்கிறார்களே? அந்த மதிப்பீடுகள்  இவ்வளவு விரைவில் சரியும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.  தாங்கள் கடந்த  காலங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு முற்றிலும் மாறாக நிற்பதை நினைத்துப்  பார்க்கும்போது, உங்கள் மீசை அல்ல, வார்த்தைகளும் மடங்கிப் போனது எப்படி  என்ற வருத்தம் எங்கள் மனங்களை சிதைக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அடங்கமறு, அத்துமீறு, திமிறிஎழு, திரும்ப  தாக்கு என்ற அடிப்படை தத்துவம் எங்கே போனது. இந்த வார்த்தைகள் தானே ஏழை  இளைஞர்களை உங்கள் பக்கம் ஓடோடிவரச் செய்தது. அன்று பேசிய பேச்சு,  எங்களுக்கான உரிமைகள் பெறுவதற்கு உங்களின் கடைக்கண் பார்வை வேண்டும் என்று  கலைஞரிடம் யாசித்து நிற்கும் அளவிற்கு திருமா தாழ்ந்து போனது எப்படி?  ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக சுற்றி வந்த திருமாவால்தான் தாழ்த்தப்பட்ட  மக்களுக்கான தனி அங்கீகாரம் தமிழகத்திலே கிடைத்தது என்பதை மறுத்துரைக்க  முடியுமா? தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆ.சக்திதாசன், வை.பாலசுந்தரம், சுந்தர  ராஜன், செ.கு.தமிழரசன், மருத்துவர்.சேப்பன், பூவை.மூர்த்தி என பல்வேறு  தலைவர்கள், பல்வேறு காலக்கட்டங்களில் ஆற்றிய பணிகளையெல்லாம் பின்னுக்கு  தள்ளிவிட்டு கூட்டணி சேர எங்களுக்கு இத்தனை இடங்கள் வேண்டும் என்று  கேட்கும் அளவிற்கு ஆற்றல் வாய்ந்த தலைவராக உங்களை அடையாளம் காட்டியது,  உங்களுக்காக உயிரைக்கூட இழக்க தயாரான அப்பாவி ஏழை குடிசைவாழ் இளைஞர்கள்  என்பது உங்களுக்கு தெரியும் தானே? போர்குணம் மிக்க அந்த தலித் இளைஞர்கள்  தங்களின் சொல் கேட்டு களமாடியதால் கிடைத்த வெற்றிதானே  நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தங்களை அனுப்பியது.  கலைஞரின்  கூட்டத்திலே நின்று, அவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, உங்களை  அழைத்துவந்தா இப்பொறுப்புகளை கலைஞர் கொடுத்தார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை  வளர்த்தெடுக்க தாங்கள் இழந்த இழப்புகள், தாங்கிய வலிகள், பெற்ற அவமானங்கள்  நினைத்துப் பாருங்கள். ஏதோ பேச வேண்டும் என்பதற்காக ஆட்சி அதிகாரத்தில்  இருப்பவர்களை வாழ்த்தி பேசுவது வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கலாம். ஆனால்  இன்றுவரை சாதிய ஒடுக்குமுறை கலையாத ஒரு நிலைப்பாட்டைக் கண்டிருக்கும்  தமிழ்நாட்டிற்கு இது பொறுத்தமானதா? என்பதை மெத்த பணிவுடன் தங்களிடம்  கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஒருவேளை தங்களால் பலன் பெற்ற இயக்கத்  தோழர்கள் கொதிப்படையலாம். ஆனால் இதிலிருக்கும் உண்மையை அவர்களால் மறுக்க  முடியுமா? என்பதை மறுபரிசீலனை செய்யுங்கள். போராட்டங்களின் மூலமே வெற்றி  என்பது நமக்கு புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லித் தந்த பாடம் அல்லவா?  புலிகளை அல்ல, ஆடுகளையே பலி கொடுப்பார்கள் என்ற புரட்சியாளரின்  வார்த்தைகளுக்கேற்ப நீங்கள் திமுகவிடம் சிறுத்தைகளை அல்லவா பலி  கொடுக்கிறீர்கள். இது சிறந்ததா? என்பதை தாங்கள் எப்போதாவது யோசித்தீர்களா?  என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல் 26ந் தேதி  தேசிய தலைவரின் தாயாரை மீண்டுமாய் சென்னைக்கு சிகிச்சைக்கு அழைத்துவர  மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற கோரிக்கையோடு கலைஞரிடம்  சென்றிருக்கிறார்கள், திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள்  தலைவர் திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர்  சுப.வீரப்பாண்டியன் ஆகியோர். முதல்வரை சந்தித்துவிட்டு வெளியே வந்து,  செய்தியாளர்களிடம் பேசும்போது, தேசிய தலைவரின் தாயார் சென்னையில் தங்கி  சிகிச்சைப்பெற விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதினால் அதற்கான அனுமதியை  நடுவண் அரசிடமிருந்து பெற்று, அவரது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்”  என்பதை வலியுறுத்தவே தாம் கலைஞரை சந்தித்ததாக கூறினார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;கலைஞரும் இதற்கான உறுதி அளித்ததாக அவர்கள்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள். இதைப்போன்ற சந்திப்புகளை இயல்பு  நிலைக்கு மீறி திட்டமிட்டு உருவாக்கப்படுவதாகவே உணர்கிறோம். உலகம் தழுவிய  அளவில் கலைஞரை மதிப்பீடு தமிழ் மக்களிடம் மிகத் தாழ்ந்து போயிருக்கிறது.  இதை தூக்கி நிறுத்த இப்படிப்பட்ட தலைவர்களின் தேவை கலைஞருக்கு இருக்கிறது.  ஆகவே, கலைஞர் திட்டமிட்டு இவர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.  கலைஞருக்கு இவர்கள் பயன்படுகிறார்கள். கலைஞரா? இவர்கள் பயன்பெறுகிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இனிமேல் அந்த முதிய தாய், தமிழ்நாட்டில்  வந்து சிகிச்சைப்பெற வேண்டுமா? உலகெங்கும் தமிழர்களுக்கான முகவரியைத்தந்த  அந்த வீர மகனை பெற்றதை தவிர, வேறென்ன பாவம் செய்தார் அந்த தாய்.  முடங்கிப்போன தமிழர்களின் வீரத்தை வெளிகொணர்ந்த அந்த புலிகளின் தலைவனை இந்த  மண்ணிற்கு அறிமுகம் செய்ததைத் தவிர, பெரிதொன்றும் செய்துவிட வில்லையே.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மானமுள்ள தமிழினத்தை இந்த மண்ணிற்கு  அடையாளம் காட்டுவதற்காக, தம் வாழ்வையே அர்ப்பணித்த மகத்தான மாண்புமிகு  தலைவனை தம் கருவில் சுமந்ததைத் தவிர, வேறென்ன காரணம் சொல்லி அவரை திருப்பி  அனுப்பினார்கள். இதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்  நடத்தினார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்த முழக்கம் யாருக்கு எதிராக? நடுவண்  அரசுக்கு எதிரானதா? நடுவண் அரசு என்பது திருமா உட்பட ஆதரவு தரும் ஒரு அரசு  தானே? அந்த அரசை எதிர்க்கிறார்களா? இல்லை திமுக அரசை எதிர்த்து இந்த  ஆர்ப்பாட்டமா? திமுக அரசை இவர்கள் பகிரங்கமாக எதிர்க்க முடியுமா? தமிழக  மக்களை திசை மாற்றும் அரசியலை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;செயலலிதாமீது நமக்கு விமர்சனம் உண்டு.  செயலலிதாவிற்கு நாம் எந்த காலத்திலும் நாம் பக்கத்தில் இருக்க  விரும்பவில்லை. அல்லது அவருக்கு ஆதரவு தெரிவிப்பதையும் நமக்கு அடிப்படையிலே  விருப்பம் கிடையாது. ஒருவேளை நாம் இப்படி எழுதும்போது ஏதோ நாம்  செயலலிதாவின் ஆதரவாளர்கள் என்பதைப்போன்ற ஒரு நிலையை ஏற்படுத்திவிட  வேண்டாம். செயலலிதா தமிழ்தேசிய அடையாளத்தின் எதிரி என்பது நாம்  எல்லோருக்கும் தெரியும். செயலலிதா எந்த நிலையிலும் தமிழர்கள் பக்கம் நின்று  குரல் எழுப்பும் பண்பற்றவர் என்று எவராலும் சொல்ல முடியும். ஆகவே, அவர்  நமது இன எதிரி என்பது நமக்கு எள்ளின் மூக்களவு கூட சந்தேகம் இல்லை. ஆக,  எதிரியைக் குறித்து நாம் அதிக அக்கறைக் கொள்ள தேவையில்லை. காரணம்  கண்ணுக்கெதிரே அவர் எதிரி என்பது நாம் அறிந்ததுதான்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஆனால் இவர்கள் மூவரும் தமிழீழ விடுதலையை  ஆதரிப்பது போலவும், தமிழீழ விடுதலையை எதிர்ப்பவர்கள் அணியில் இருந்துகொண்டு  இயங்கிக் கொண்டிருப்பது பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற பழமொழியை  அல்லவா நினைவுப்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் இவர்கள் கோபாலப்புரம்  வீட்டிற்குள் போய் முடங்கிப் போகிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இவர்கள் அறிவாலயம் எனும் முட்டுச்சந்தில்  மாட்டிக் கொண்டு திணறுகிறார்கள். இந்த அரசியல் என்ன அரசியல் என்பதை  இவர்களாக வெளிவந்து விளக்கினால் ஒழிய, யாருக்கும் எதுவும் புரியப்போவது  கிடையாது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஆகவே, தோழர் சுப.வீ., தொல்.திருமா, வீரமணி  போன்றோர் தெளிவாக ஒன்றை அறிவிக்கட்டும். தமிழீழ விடுதலைக்கு அவர்கள்  ஆதரவாளர்களா? எதிர்ப்பாளர்களா? என்பதை. ஆதரவாளர்கள் என்றால், தமிழீழ  விடுதலையை ஒடுக்கி எமது தமிழ் உறவுகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து,  அவர்களின் குருதியில் குளித்த காங்கிரசை பகிரங்கமாக வெளியில் வந்து  எதிர்க்கட்டும். காங்கிரசை தலையில் சுமக்கும் திமுகவை அம்பலப்படுத்தட்டும்.  அதைத்தவிர்த்து, கலைஞர் சிறந்த தலைவர்தான், ஆனாலும் என்ன செய்ய?  காங்கிரசோடு அவருக்கு உறவு தேவைப்படுகிறதே என்று சாக்கு சொல்வார்களாயின்,  தமிழின வரலாறு தொடர்ந்து இதையே கேட்டுக் கொண்டிருக்காது என்பதை பணிவோடு  தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;— மீனகம் இளமாறன் &lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4722080712196357658-2905375199031948268?l=thamizhini76.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizhini76.blogspot.com/feeds/2905375199031948268/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4722080712196357658&amp;postID=2905375199031948268' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/2905375199031948268'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4722080712196357658/posts/default/2905375199031948268'/><link rel='alternate' type='text/html' href='http://thamizhini76.blogspot.com/2010/05/blog-post.html' title='தடுமாறும்   தறுதலைகள்'/><author><name>ஜோதி</name><uri>http://www.blogger.com/profile/13527367621669745108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://1.bp.blogspot.com/_pSZLgq1WN7Q/SSUiIyimoJI/AAAAAAAAALg/BO41_xsa5-o/S220/adiyal%5B1%5D.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4722080712196357658.post-7110521178450033446</id><published>2010-04-15T20:03:00.000-07:00</published><updated>2010-04-15T20:04:50.068-07:00</updated><title type='text'>வேலுப்பிள்ளை மனோகரனின் பேட்டி</title><content type='html'>&lt;h1&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;வேலுப்பிள்ளை மனோகரனின் பேட்டி &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/h1&gt; &lt;div class="date"&gt; &lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;/div&gt;  &lt;p&gt;&lt;a href="http://www.alaikal.com/news/?p=36115"&gt;&lt;img class="alignnone size-full wp-image-36116" title="veluxy" alt="" src="http://www.alaikal.com/news/wp-content/veluxy.jpg" width="290" height="200" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரபாகரன் எங்கே விளக்குகிறார் அவர் அண்ணன் வேலுப்பிள்ளை  மனோகரன்..&lt;span id="more-36115"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;strong&gt;கேள்வி : உங்கள் தம்பி வே.பிரபாகரனை எங்கே  தேடுவது ?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;மனோகரன் : பிரபாகரனை இரண்டு வழிகளில்  தேடுகிறார்கள். ஒரு சிலர் அவரை விண்ணில் தேடுகிறார்கள், இன்னும் சிலர் மண்ணில்  தேடுகிறார்கள். ஆனால் பிரபாகரன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உடல்களில் வீசும்  விடுதலைப் பேரொளியாக இருக்கிறார் என்பதுதான் உண்மை. அந்தக் தேடலுக்கான பதிலை  தருவதற்கு தகுதியுள்ள ஒருவரை விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அவர் இதுவரை  அடையாளம் காட்டவில்லை என்பதை இனியாவது மக்கள் அறிவால் கண்டு பிடிக்க வேண்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;strong&gt;கேள்வி : விடுதலைப்புலிகள் அமைப்பின்  வெளிநாட்டு தொடர்புகளுக்கான பணிகளை தானே செய்வதாகக் கூறிய கே.பத்மநாதன் அத்தருணம்  உங்களிடம் என்ன கூறினார் ?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;மனோகரன் : கே.பி ஊடகங்களில் தோன்றி ஒரு தடவை  இறந்துவிட்டதாகவும், இன்னொரு தடவை உயிருடன் இருப்பதாகவும் கூறினார். அவர் மற்றவரில்  இருந்து சற்று வித்தியாசமாக விண்ணிலும் மண்ணிலுமாக இரண்டு இடங்களிலும்  தேடியிருந்தார்.. இப்படி இரண்டுங்கெட்டான் பதிலை பிரபாகரன் தனது வாழ்வில் என்றுமே  கூறியது கிடையாது. கே.பியின் கடமை என்ன.. பிரபாகரனின் உடன் பிறந்த அண்ணன் நான்  இருக்கிறேன்.. என்னிடம் ஒரு தடவை கூட அவர் இது குறித்து பேசியது கிடையாது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;strong&gt;கேள்வி : வேறு யாராவது தொடர்பு கொண்டார்களா  ?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;மனோகரன் : தமிழகத்தில் இருந்து பழ.நெடுமாறன் ஒருவர்  மட்டும் தொடர்பு கொண்டு பிரபாகரன் இருக்கிறார் என்ற செய்தியை அறிவிப்பதாகக்  கூறினார். மற்றப்படி யாருமே இது குறித்து என்னுடன் இன்றுவரை பேசியது கிடையாது.  ஒருவரிடமும் இந்தக் கேள்விக்கு பதில் இல்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;img title="manoharan3" alt="" src="http://www.alaikal.com/news/wp-content/manoharan3-300x225.jpg" width="300" height="225" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;strong&gt;கேள்வி : அப்படியானால் இந்தக் கேள்விக்கான  பதிலை எங்கிருந்து தேடுவது ?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;மனோகரன் : பிரபாகரன் வாழ்வில் இருந்துதான் தேடிக்  கொள்ள வேண்டும். நான் உங்களிடம் முன்னரே குறிப்பிட்டிருந்தேன் என் தம்பி எல்லாள  மன்னன் சமாதி இருந்த இடத்தில் கருவுற்றவர் என்று. அதுபோலவே மானமுள்ள  தமிழுக்காகவும், உயர் தமிழ் வீர ஒழுக்கத்திற்காகவும் அவர் வாழ்ந்தார். சங்ககால  பாடல்களில் கண்ட உயர்ந்த அப்பழுக்கில்லாத வீரத்தை எல்லாள மன்னன் போற்றினான். தள்ளாத  வயதிலும் உயிரச்சமின்றி தனிச்சமருக்குப் போன வீரன் எல்லாளன். அதுபோல பிரபாகரன்  உருவாக்கிய விடுதலை வீரர்கள் அனைவருமே இருபதாம் இருபத்தியோராம் நூற்றாண்டுகளில்  சங்ககால வீர வாழ்வை வாழ்ந்தார்கள். புறநானூற்றில் கண்ட வீரத்தை நிஜ வாழ்வியல்  ஓவியங்களாக மாவீரர்களை வைத்தே வரைந்தும் காட்டினார். இயற்கையாகவே பிரபாகரன் ஓர்  ஓவியர் என்பதும் உங்களுக்குத் தெரியும். எனவேதான் அவர் வாழ்வும் புறநானூற்று தமிழ்  வீர வாழ்வும் ஒன்றுதான் என்பதைப் புரிய வேண்டும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;strong&gt;கேள்வி : இது அவர் வாழ்வின் முற்பகுதிவரை  நகர்ந்து போகும் நிகழ்வு. எதிரிகளின் நீரைக் குடித்து உயிர் வாழாத சேரன்  செங்குட்டுவனின் வீரம் திலீபனிடம், திருமணமான அன்றே போருக்கு போன புறநானூற்று வீரம்  குமரப்பாவிடம் என்று சுத்தமான தமிழ் வீரத்தை அவர் படைத்தார். கரிகாலன் என்ற  பெயருடன் அவர் வாழ்ந்த வாழ்வு எங்களுக்கும் தெரியும், இருப்பினும் அவருடைய வாழ்வின்  பிற்பகுதி புறநானூற்றின் இறுதிப்புள்ளியின் தாக்கம் தெரிகிறதே..&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;மனோகரன் : கடைசியில் நடைபெற்ற புதுமாத்தளன்  போர்க்களமும் மாங்குடி மருதனார் பாடிய சங்க காலப் போர்க்களமும் வேறு வேறல்ல. வெட்டி  எடுக்கப்பட்ட முடித்தலைகள் அடுப்பாக.. பிளக்கப்பட்ட கபாலங்கள் பாத்திரமாக..  அதற்குள் இரத்தமும் சதையும் நிணமும் இட்டு, வெட்டிய கைகளை அகப்பையாக.. துளாவி ஒரு  போர் யாகம் நடந்தினான் பாண்டிய மன்னன் என்று பாடியுள்ளார்கள். அதைத்தான்  புதுமாத்தளனில் கண் முன் கண்டு துடிதுடித்தோம். உண்மையில் அது புறநானூற்றுப்  போர்க்களம்தான்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;strong&gt;கேள்வி : இருக்கலாம் இருந்தாலும் இப்போது  உருவாகியுள்ள நிலை புறநானுற்றில் இருந்து சிறிது வேறுபடுகிறதே.. ? வெற்றிடத்தால்  ஒரு போர் என்ற புதிய கோட்பாடு தெரிகிறது… உங்களுக்கு அது தெரிகிறதா ?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;மனோகரன் : உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது..  வெற்றிடத்தால் ஒரு போர்… அதற்கான பதில் அவர் படித்த நூலில் இருக்கிறது. ஒரு  மனிதனின் நல்ல நண்பன் அவன் படிக்கும் நல்ல நூல்தான் என்று கூறுவார்கள். பைபிள்  படித்தவர்கள் பைபிள் போலவே வாழ முயற்சிப்பதும், மார்க்சியம் படித்தோர் மார்க்சிய  வாதிகளாக வாழ்வதும் ஏன்.. அவர்கள் படித்த நூலின்படி வாழ முயற்சிக்கிறார்கள் என்பதே  அதன் பொருளாகும். அதுபோலத்தான் பிரபாகரனும் வாழ்வின் வேதமாக நேதாஜி  சுபாஸ்சந்திரபோஸின் வாழ்க்கையை கடைப்பிடித்தார். நேதாஜியின் கடமை உணர்வு மிக்க,  ஒழுக்கம் குறையாத ஓர் இராணுவத் தொண்டர்களை அவர் வடிவமைத்தார். நேதாஜியின்  இறுதிக்காலத்தில் அவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லமல் போனது.. இப்போது  பிரபாகரன் விரும்பிப் படித்த நேதாஜியின் வாழ்வியல் தத்துவம் அவரை வழி  நடாத்தியிருப்பது தெரிகிறது.. இது புறநானூற்றில் இருந்து வேறுபட்ட இடமாகும்… நேதாஜி  கதை படித்து, அவர் வாழ்வின் பிற்பகுதி போன்ற தோற்றத்தை கடந்த ஓராண்டு காலமாக  வைத்திருக்கிறார்…பிரபாகரன். அதிலும் ஒரு போராட்டம் மறைந்திருக்கிறது.. அதுதான்  புதிய புறநானூற்றின் அதிசயமான பக்கம் அதற்குப் பிறகு வருகிறேன்.. தாயின்  மணிவயிற்றில் கருவாக இருக்கும்போது பாரதக்கதை கேட்டு போர் வீரனானான் அபிமன்யு,  அதுபோல எல்லாளன் கதையை தாயின் வயிற்றில் இருக்கும்போதே கேட்டு அவர்போல தமிழ்  வீரரானார் பிரபாகரன். என்று முன்னர் கூறியிருந்தேன். பின்னர் மறுபகுதியை  கூறுகிறேன்..&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;img title="manoharan6" alt="" src="http://www.alaikal.com/news/wp-content/manoharan6-300x225.jpg" width="300" height="225" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;strong&gt;கேள்வி : சரி நம்மை விடுங்கள்.. மத  நம்பிக்கை உள்ளவர்கள் நம்மில் பலர் உள்ளார்கள்.. அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில்  ஏதாவது சாஸ்திரங்கள் கேட்டுள்ளீர்களா..அதுவும் வாழ்வில் ஒரு கடமையல்லவா  ?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;மனோகரன் : சாஸ்த்திரங்கள் என்பவை தனிப்பட்டவரின்  நம்பிக்கைகளால் எல்லைப் படுத்தப்படுவது. ஆனால் போராட்டம் ஆரம்பித்த காலத்திலேயே  தமிழகத்தின் பிரபல ஜோதிடர் ஒருவர் பிரபாகரனின் பிற்கால வாழ்வு மர்மம் நிறைந்தாக  இருக்கும், யாரும் அவரைக் காண இயலாது என்றும்.. அவர் எங்கே என்ற கேள்வி பெரும்  மர்மமாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார். நாம் அப்போது அதை பெரிதாக கருதவில்லை,  ஆனால் இப்போது அதையும் எண்ணிப்பார்க்கிறேன்.. அதற்குமேல் பிரவேசிக்கவில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;strong&gt;கேள்வி : போரின் பின் பிரபாகரன் உடலம்  போன்ற ஒன்று காண்பிக்கப்பட்டது, அதை ஏன் நீங்கள் பொறுப்பெடுக்கவில்லை..  ?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;மனோகரன் : அது உண்மையாகவே பிரபாகரன் உடலம் என்று  எரிக் சோல்கெயம் ஆவது உறுதி செய்தாரா இல்லையே.. சரி அதைவிடுங்கள் அது பிரபாகரனன்  உடலம்தான் என்றால் அதை ஏன் சில நாட்களாவது பாதுகாத்து வைத்திருக்கவில்லை. ஏன்  உடனடியாக எரியூட்டினார்கள்; ? இப்படியான குழப்பகரமான நிலையில் நாம் மட்டும் ஓடிச்  சென்று பொறுப்பேற்றால் என்ன நடக்கும் ? தவறான ஓர் உடலத்தைக் காட்டி நாமே அதை உறுதி  செய்துவிட்டதாக அரசு பிரச்சாரம் செய்யும்.. அத்தகைய பொறிக்குள் சிக்குண்டால் அது  பெரிய முட்டாள்தனமான செயலாக அல்லவா முடியும் ? அதைத்தான் விடுங்கள்… எனது தந்தை  இருக்குமிடத்தை அவர் இறக்கும்வரை ஏன் சிறீலங்கா அரசு இரகசியமாக வைத்திருந்தது..  இப்படிப்பட்ட சிறீலங்கா அரசு நம்பிக்கைக்குரியது என்று கருதுகிறீர்களா ?  சிறீலங்காவின் கதை கேட்டு, இந்தியாவிலேயே ப.சிதம்பரம் ஒருவிதமாகவும் சி.பி.ஐ  இன்னொரு விதமாகவும் அறிக்கை விட்டதை நீங்களும் அவதானித்திருப்பீர்கள்.. இதை எல்லாம்  தொகுத்துப் பார்த்தால் அன்று நாம் ஏன் உரிமைகோரத் தயங்கினோம் என்ற கேள்விக்கான  நீதியுடைய பதில் உங்கள் உள்ளத்தில் உருவாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;strong&gt;கேள்வி : சரி அதற்குப் பிறகு வருகிறோம்…  உங்கள் சகோதரன் பிரபாகரன் உங்களுடன் தொடர்பு கொள்வதுண்டா.. ?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;மனோகரன் : ஆம் அவர் போர் இறுக்கமடைவதற்கு  முன்னர்வரை என்னுடன் தொடர்பில் இருந்தார். குறித்துக்கொள்ளுங்கள்… குடும்ப  விவகாரங்களை மட்டும் என்னுடன் பேசிக் கொள்வார். சாள்ஸ் சிறந்த முறையில் படித்து  எட்டுப்பாடங்களிலும் அதிவிசேட சித்திபெற்று, கட்டுப்பெத்தை தொழில்  நுட்பக்கல்லூரிக்கும் தேர்வானபோது அந்த மகிழ்வை சொல்ல எடுத்தார். இப்படி  குடும்பத்தின் ஒவ்வொரு நல்ல நிகழ்வையும் அவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்..  வாழ்வு – தாழ்வு – இன்பம் துன்பம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டார்..&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;img title="velu-9" alt="" src="http://www.alaikal.com/news/wp-content/velu-9-243x300.jpg" width="243" height="300" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;strong&gt;கேள்வி : புதுமாத்தளன் சம்பவங்கள்  நடைபெற்றபோது அவர் உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லையா..&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;மனோகரன் : தொடர்பு கொள்ளவில்லை.. குடும்பத்தின்  நன்மை தீமைகளை பேசியவர்.. சாள்ஸ் இறந்தாக காண்பிக்கப்பட்டபோது மட்டும் ஏன் என்னுடன்  தொடர்பு கொள்ளவில்லை. அதுவும் குடும்ப நன்மை தீமைகளுக்குள் வரும்தானே.. மேலும்  அப்போது நடேசன் பலருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.. அவர் மூலமாகவேனும்;  அந்தச் செய்தியை ஏன் என்னிடம் கூறவில்லை. ஆம்.. அப்படியான நிகழ்வுகள்  நடந்திருந்தால் குறைந்தபட்சம் நடேசன் மூலமாவது எனக்கு சொல்லியிருப்பார். மேலும்  அப்போது எனது தந்தை அங்கே இருந்தார்.. அவராவது அந்தச் செய்தியை கண்டிப்பாக எனக்குச்  சொல்லியிருப்பார். யாருமே என்னிடம் எதுவும் கூறவில்லை, எல்லோரின் கைகளிலும்  தொலைபேசி இருந்தது, அது செயற்பட்டுக் கொண்டுதான் இருந்தது. பிரபாகரனின் மனைவி  எம்முடன் தொடர்பில் இருந்தவர்.. அவர் கூட போன் செய்யவில்லை… ஏன் .. நன்றாக  யோசித்துப் பாருங்கள்.. எல்லாவற்றையும் யோசித்தால் எங்கோ ஓர் இனம்புரியாத இருள்  விளக்கமின்றி இருப்பது தெரிகிறதல்லவா?&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;strong&gt;கேள்வி : உண்மைதன்… சரி .. உங்கள் தம்பி  பிரபாகரன் ஆடம்பர வாழ்வு வாழ்கிறார்.. நீச்சல் தொட்டியில் குளிக்கிறார் என்று  படங்கள் வெளியாகின அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்.. ?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;மனோகரன் : உங்களிடம் முன்னரே சொல்லியிருக்கிறேன்..  அவர் தமிழழேந்தியிடமிருந்து மாதச் சம்பளம் வரவில்லை என்பதால் மகனுக்கு சிறிய  விளையாட்டு சாமானையே வாங்கிக் கொடுக்க முடியாது யோசித்தவர். எளிமையின் வடிவமாக  வாழ்ந்தவர். பொதுமக்களின் சொத்தை சுய தேவைக்காக பாவிக்கும் பழக்கம் தெரியாதவர்.  இரத்தம் சிந்திய மாவீரருக்காக தேடிய பணத்தை தொடுமளவிற்கு இதயமற்றவர்கள் உலகில்  இருப்பார்கள் என்று கருதும் தகவல் அவர் மூளையில் இல்லவே இல்லை. எனவே பொதுப்பணத்தில்  ஆடம்பர வாழ்வு என்ற பேச்சுக்கே அவர் வாழ்வில் இடமில்லை. ஆனால் பேச்சு வார்த்தை  நடைபெற்ற காலத்தில் அவரைப் பார்க்க குடும்பத்தினர் இங்கிருந்து சென்றார்கள்.  அவர்கள் டென்மார்க்கில் பிளாஸ்டிக் பையில் செய்யப்பட்ட மிகமிக விலை குறைந்த 100  குறோணர் விலையுள்ள ஒரு தண்ணீர் தொட்டியை கொண்டு சென்று கொடுத்தார்கள். அதுதான்  சிறீலங்கா அரசு பிரச்சாரம் செய்த ஆடம்பர வாழ்வு. அதைத் தான் நம் தமிழ் உறவுகளும்  இணையங்களில் போட்டு பிரச்சாரம் செய்தார்கள். ஒரு தூய போராளியின் வாழ்விற்கும் தனது  வாழ்விற்கும் இடையில் யாதொரு வேறுபாட்டையும் அவர் வைக்கவில்லை. அந்தப்  பிரச்சாரங்களை எல்லாம் இன்று பிரபாகரன் முறியடித்துவிட்டார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;img title="manoharan7" alt="" src="http://www.alaikal.com/news/wp-content/manoharan7-300x225.jpg" width="300" height="225" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;strong&gt;கேள்வி : சரி.. பிரபாகரன் இருக்கிறார்..  அவர் தற்போது வெளிப்படவில்லை.. என்று வைத்துக் கொள்வோம்.. இந்த நிலையில் யார்  பேச்சைக் கேட்பது இப்போது எண்ணற்ற தலைவர்கள் தேன்றிவிட்டார்களே ?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;மனோகரன் : பிரபாகரன் தனக்குப் பின் யாரென ஒருவரை  தெரிவு செய்திருந்தால் இப்படி பெருந்தொகையானவர்கள் தோன்றியிருக்க மாட்டார்கள்.  அவர்கள் தாமே பிரபாகரனின் குரல் என்றும் கூறியிருக்க மாட்டார்கள். இப்போது  பிரபாகரன் எடுத்த பணிகளை நாமே தொடர்கிறோம் என்று கூறும் யாரிடமும் அவர் எங்கே என்ற  கேள்விக்கு பதில் இல்லை.. ஆகவே இவர்கள் அனைவரும் பிரபாகரனின் தேர்வில் இல்லாதவர்களே  என்பது தெளிவு. பிரபாகரனின் உண்மையான உறுதியான குரல் இன்னமும் வரவில்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;strong&gt;கேள்வி : வட்டுக்கோட்டைத் தீர்மானம்  வாக்கெடுப்பில் உள்ளதே..&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;மனோகரன் : வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது அன்றைய  தமிழர் கூட்டணியினரால் எழுதப்பட்ட ஒரு காகிதத் தீர்மானம். அதனடிப்படையில்  தாயகத்தில் ஒரு தேர்தலும் நடைபெற்று முடிந்துவிட்டது. ஆனால் வட்டுக்கோட்டைத்  தீர்மானத்தில் இருந்ததைவிட சிறந்த தமிழீழ அரசை பிரபாகரன் உருவாக்கி  முடித்திருந்தார். கடற்படை, ஆகாயப்படை, போலீஸ்பிரிவு, வங்கித்துறை, தரைப்படை,  தமிழீழ நிர்வாகம் என்று சட்டம் – நீதி- நிர்வாகம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய  சட்டவாட்சியை வள்ளுவர் காட்டிய நெறியோடு வரையறை செய்து வழங்கிவிட்டார். உலகிற்கே  ஒரு முன்மாதிரியான தேசத்தை உருவாக்கி சாதனையும் படைத்துவிட்டார். அதைத்தான் நீங்கள்  எல்லோரும் வன்னியில் கண்கூடாக பார்த்துவிட்டீர்கள். தென்னை மரத்தில் ஏறி வட்டுவரை  சென்றுவிட்ட ஒருவன் அதிலிருந்து கீழே இறங்கி என்னால் தென்னையின் வட்டுக்கொள்ள  முடியுமா என்று கேட்டு வாக்கெடுப்பு வைத்தால் எப்படியிருக்கும் ? இப்படியொரு  கேள்விக்கு பதில் ஒன்று தேவையா? இதற்கு பதில் கூறத்தேவையில்லை. சில கேள்விகளுக்கு  மேல் வைக்கப்படும் கேள்விகளே அதற்குரிய பதில்களாக அமையும் இதுவும் அந்தவகை  சார்ந்ததே.&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;strong&gt;கேள்வி : அப்படியானால் இப்போது நாடுகடந்த  தமழீழஅரசு என்ற இன்னொன்று வருகிறது.. அதுபற்றி என்ன கூறுகிறீர்கள் ?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;மனோகரன் : நமது நாட்டில் இப்போது உங்கள் வீட்டை  நீங்களே போய் பார்க்க வேண்டுமானால் உங்கள் வீட்டுக்கான உறுதியைக் கொண்டு போக  வேண்டும். ஆளில்லாமல் கிடக்கும் உங்கள் வீட்டை நீங்களே பார்க்க உறுதி வேண்டும்..  மறந்துவிடாதீர்கள் வாழ்வதற்கல்ல ஒரு தடவை பார்ப்பதற்கு.. உறுதி இல்லாவிட்டால்  உங்களை உங்கள் வீட்டிற்கே இராணுவம் அனுமதிக்க முடியாத நிலை இருக்கிறது. பிரபாகரன்  வாழ்ந்த வீட்டை சிங்கள மக்கள் பார்ப்பதால் அது இடிக்கப்படுகிறது.. அதற்கும் உறுதி  வேண்டுமோ என்னவோ.. ( சிரிப்பு ) நமக்கு உரிமை எங்கே இருக்க வேண்டும் எம்  தாயகத்தில்.. வெளிநாடுகளில் வாழ்வோருக்கு சட்டரீதியான வாழ்வியல் உரிமை இருக்கிறது..  ஆனால் நமது தாயகத்தில் சொந்த வீட்டுக்கே போக உரிமையற்று மக்கள் முகாமில்  இருக்கிறார்கள். இப்படியான யதார்த்த நிலை இருக்கிறது.. இந்நிலையில் நாடுகடந்த  அரசால் சொந்த வீடு கடந்து போவதற்காவது ஓர் உரிமையை பெற்றுத்தர முடியுமா? பிரபாகரன்  வெளிநாட்டில் ஓர் அரசை அமைக்கவா போராடினார்.. நாடுகடந்த அரசுபற்றிய கேள்விக்கும்  பதிலாக கேள்விகளையே வைக்க முடியும் என்பதை நீங்கள் இப்போது புரிந்திருப்பீர்கள்..  இவைகள் இரண்டும் பிரபாகரன் சொன்ன பாதைகளா என்பதை பிரபாகரன் நேசித்த மக்கள்  தீர்மானிப்பார்கள். நாம் பதில் கூற வேண்டிய தேவை இல்லை.&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;strong&gt;கேள்வி : அப்படியானால் இன்றைய நிலையில்  என்னதான் செய்வது ?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;மனோகரன் : எனது தம்பி பிரபாகரன் தமிழர் சமுதாயம்  பிளவுபடக்கூடாது என்பதற்கே முன்னுரிமை கொடுத்தார். புதுமாத்தளனுக்குப் பின்னர்  புலம் பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயலும் தமிழினத்தை  பிளவுபடுத்துவதாகவே இருக்கிறது. இத்தகைய முன்னெடுப்புகள் பற்றி கருத்துக்  கூறுவதைவிட அவற்றின் விளைவுகளை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். வடக்குக் கிழக்கில்  தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கை, வெளிநாடுகளில் ஆளுக்காள்  உருவாக்கியுள்ள தமீழழம் தொடர்பான பணிகள். இவை அனைத்தும் தமிழினத்தை  ஒற்றுமைப்படுத்தியிருக்கின்றனவா இல்லை கூறுபோட்டுள்ளனவா என்பதை அவதானிக்க வேண்டும்.  ஒரு செயல் தமிழினத்தை கூறுபோடுமாயின் அது பிரபாகரனின் விருப்பமாக அமைய மாட்டாது.  பிரபாகரன் யாரையும், எந்தத் தளபதியையும் முக்கியமாக முன்னிலைப்படுத்தியது கிடையாது.  காரணம் அவருடைய முதன்மைத் தளபதிகள் தமிழீழ மக்களே.. மக்களுக்கு தெரியும் பிரபாகரன்  யார் என்பது.. பிரபாகரன் உருவாக்கிய மக்கள் சக்தி மாவீரர்களின் மகத்தான கனவுகளுக்கே  சொந்தம், மற்றவருக்கல்ல.. இத்தனை காலம் போராடி, ஒவ்வொரு நொடியும் மரணத்தோடு  விளையாடி, வாழ்வுக்காலத்தின் பெரும்பகுதியை தலைமறைவு வாழ்விலேயே கழித்த பிரபாகரன்  தனக்காக எதையுமே கேட்கவில்லை. எத்தனையோ பதவிகள் வந்தன, எதையுமே ஏற்கவில்லை.. இன்று  மாபெரும் துறவறம் போன்ற வாழ்வை எழுதியுள்ளார்.. அப்படிப்பட்டவர் இப்படியான  காரியங்களை செய்யுங்கள் என்று யாரிடமும் கூறியிருக்க மாட்டார்..&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;img title="manoharan4" alt="" src="http://www.alaikal.com/news/wp-content/manoharan4-300x225.jpg" width="300" height="225" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;strong&gt;கேள்வி : சரி இப்படியான குழப்ப நிலை  வருமென்று கருதி பிரபாகரன் தனது பிள்ளைகளில் ஒருவரையாவது உங்களுடன்  அனுப்பியிருக்கலாமே ?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;மனோகரன் : நான்தன் சொல்லிவிட்டேனே.. அவர் பற்றற்ற  வாழ்வு வாழ்ந்தவரென்று.. மற்றவர்களின் பிள்ளைகள் போராடும்போது தன் பிள்ளைகளை  வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார் பிரபாகரன் என்று திட்டினார்கள். பிரபாகரனிடம் நான்  இதுபற்றி பேசியுள்ளேன். என் வாழ்வு இருக்கும்வரை, நான் நேசித்த ஈழ மண் இருக்கும்வரை  என் பிள்ளைகள் வாழ்வு என்னுடன்தான் என்றார்.. தன் வாழ்வு முடிந்தால் தன்  பிள்ளைகளின் வாழ்வும் அதுவாகவே முடியும்.. ஒவ்வொரு போராளியும் பிரபாகரனின்  பிள்ளைகள்தான், ஒவ்வொரு தமிழீழ குடிமகனும் அவருடைய உறவுதான். தன் பிள்ளை மாற்றார்  பிள்ளை என்ற பேதம் பார்த்து வாழும் ஒருவரா பிரபாகரன் இல்லையே.. தன் பிள்ளைகளை  வெளிநாடு அனுப்பி பேதம் காட்டுமளவிற்கு அவர் உள்ளம் ஒளி குன்றியதல்ல. இதுதான் எனது  உள்ளம் என்று எந்தத் தளபதியை வைத்தாவது உங்களுக்கு அவர் சொன்னாரா அல்லது அன்ரன்  பாலசிங்கத்தை வைத்தாவது சொன்னாரா இல்லையே.. அவர் தனது கொள்கையை சொற்களால் சொல்லாது  வாழ்ந்து காட்டிய செயல் வீரர்.. இப்போது பிரபாகரனின் பிள்ளைகளையும், போராளிகளையும்  பிரித்து பேசியோர் வாயடைத்துக் கிடக்கிறார்கள்.. இப்போது பிரபாகரனின் பிள்ளைகள்  யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் இவர்களில் யாரை அவர் வெளிநாடு அனுப்புவது  சொல்லுங்கள் பார்க்கலாம்..&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;img title="veluxx" alt="" src="http://www.alaikal.com/news/wp-content/veluxx-300x173.jpg" width="300" height="173" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;&lt;strong&gt;கேள்வி : புரிகிறது.. இந்த உண்மையை இதுவரை  யாருமே சுட்டிக்காட்டவில்லை.. இவைகளைக் கேட்கும்போது இந்த இனத்திற்கு மறுபடியும்  பிரபாகரன்தான் வர வேண்டும் என்ற எண்ணமே உருவாகிறது.. அவர் வருவாரா ?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify; color: rgb(51, 0, 153);"&gt;மனோகரன் : புதுமாத்தளனுக்குப் பின் போராட்டத்தின்  அடுத்த கட்டம் என்ன ? எம்மை நம்பிய தமிழீழ மக்களுக்கு நாம் சொல்ல வேண்டிய பதில்  என்ன ? ஆகிய கேள்விகளுக்கு உரிய பதில் இல்லாமல் பிரபாகரன் தன் வாழ்வை ஒரு போதும்  வெற்றிடமாக்கியிருக்க மாட்டார். புதுமாத்தளன் நிகழ்விற்கு சில நாட்கள் முன்னதாக  நடேசனிடம் ஒரு செய்தியை தெரிவித்தார்… அது புலிகளுக்கு பிறகு வெற்றிடம் என்பது  இல்லை என்ற செய்திதான்… அதற்குப் பிறகு பிரபாகரனின் கருத்துக்கள் எதுவும்  வெளியாகவில்லை.. எனவே அன்று வெற்றிடமில்லை என்று கூறியவர் அதற்கான பதிலைத் தராமல்  தன் பணியை ஒருபோதும் முடித்திருக்க மாட்டார். ஒன்றுமில்லாத வாய்ப்பேச்சு வீரரின்  வெற்றிடத்தில் விடுதலைப் புலிகளை உருவாக்கியவர் பிரபாகரன். புலிகளின் தாகம் தமிழீழ  தாயகம் என்ற முடிவுரையை எழுதிவிட்டே போராட்டம் என்ற முதல் அத்தியாயத்திற்குள்  போனவர் பிரபாகரன்.. இப்போது அவர் நேதாஜிபோல ஒரு வெற்றிடத்தை தன் வாழ்வில்  எழுதியுள்ளார் என்று முன்னர் கூறியிர
