Kadhai Alla Nijam

Friday, March 28, 2008

தீவிரவாதம் என்றால் அதை தொடர்ந்துசெய்வோம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்,காஞ்சிசங்கராச்சாரி காமகோடி கொலையும் செய்யலாம் சிதம்பரம் தீட்சதர் சைக்கிள் திருடலாம்,பிஷப் ஆனந்தராஜ் அப்பாவி மக்களை ஏமாற்றலாம்,ஐயப்பன் கோயில் தந்திரி மோகனருகண்டரு நடிகைகளுடன் சல்லாபம் செய்யலாம்,ஜெயலலிதா,சசிகலா சொத்துக்களை குவிக்களாம்,சினிமா தயாரிப்பாளர் கோவிக்கண்னன் கரோலினை மிரட்டி எதுவேண்டுமானாலும் செய்யலாம்,தமிழ்நாட்டு மத்தியமைச்சர் தினமலரில் இந்தியில் அர்சு விளம்பரம் கொடுக்கலாம்,பிரவிந்தொகாடியா தமிழர்களை கொள்ள தமிழ்நாட்டிற்க்கே வந்து திரிசூலம் கொடுக்கலாம்,சுப்பிரமணிசாமி எதுவேண்டுமானாலும் பேசலாம்,துக்ளக்”சோ”ராமசாமி எதுவேண்டுமானாலும் எழுதலாம்,ஆனால் சிதம்பரம் தில்லை நடரஜர் கோயிலில் திருவாசகம் பாடவேஅமைக்கப்பட்ட திருச்சிற்றம்பலமேடையில் ஆறுமுகச்சாமி தமிழில் திருவாசகம் பாடமுடியவில்லை ஆகமவிதியில் தமிழில் பாடினால் நடராஜருக்கு காது கேட்காதாகிவிடும் என்று எழுதி வைத்திருப்பது போல ஆரியதீட்சதர்கள் கூக்குரல் எழுப்புகின்றனர்.அரசும் சட்டபுத்தகத்தை ஆள் வைத்து படிக்கசொல்லியிருக்கிறோம் என்கிறது உலகத்தமிழர் மாநாடு நடத்தினாலும் சரி உள்ளூர் தமிழன் போராட்டம் நடத்தினாலும் சரி தமிழர்களின் வாக்குகளை பெற்று ஆட்சி நடத்தும் அதிமுகவானாலும் சரி திமுகவானாலும் சரி தடைவிதிப்பதில் ஒன்றாகத்தான் செயல்படுகின்றனர் கருத்துரிமையை எங்களை விட யாரும் மதித்தவர்கள்கிடையாது என திராவிடக்கட்சிகள் போட்டி போட்டி போட்டுக்கொண்டு கருத்துசொல்பவர்களை மாரி மாரி கைது செய்து வந்ததை நாம் பார்த்துவருகிறோம் கைது செய்வதர்க்கு அவர்கள் சொல்லுகிற ஒரே காரணம் “பிரிவினைவாதிகள்”யார் பிரிவினைவாதிகள் இந்தியாவிற்குள்ளையே இருந்துகொண்டு காவிரித்தண்னீரை தமிழகத்திற்க்குதரமருக்கும் கன்னடர்களை விடவா தமிழர்கள் பிரிவினைவாதிகள்
தமிழகத்திலிருக்கும் ஒக்கேனக்கலை கர்னாடகத்துடன் இணைக்கசொல்லும் வாட்டால் நாகரஜனைவிடவா பழ.நெடுமாறன் தீவிரவாதி ஒரு இனத்தை மொழியை காப்பாற்றநினைப்பதை தீவிரவாதம் என்றால் அதை தொடர்ந்து செய்வோம்

No comments: