Kadhai Alla Nijam

Tuesday, October 28, 2008

முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்டுக!முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :இலங்கை அதிபர் இராசபக்சேயின் ஆலோசகரும் சகோதரருமான பாசில் இராசபக்சே தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேசியப் பிறகு அதன் தொடர்ச்சியாக பிரணாப் முகர்ஜி சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்த விவரங்கள் தமிழர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை.இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்றும், இந்திய அரசு இலங்கைக்கு ஆயுத உதவி செய்யக் கூடாது என்றும் தமிழக அனைத்துக் கட்சிகள் செய்துள்ள முடிவு குறித்து பிரணாப் முகர்ஜி எதுவும் கூறாதது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.பிரணாப் முகர்ஜியின் அறிவிப்புக் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு முதலமைச்சரை வேண்டிக் கொள்கிறேன்

No comments: