அமெரிக்க அதிபர் மாற்றத்தினால் எதுவித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை - பிடல் கஸ்ரோ
அமெரிக்க அதிபர் மாற்றத்தினால் எதுவித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை என கியூபா நாட்டின் தேசியத் தலைவரும், சுதந்திரப் பேராளியும், முன்னாள் அதிபருமான பிடல் கஸ்ரோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து கியூபாவின் அரசின் இணையத்தளத்தில் பத்தி ஒன்றை எழுதியுள்ள பிடல் கஸ்ரோ அதில் இதனைத் தெரிவித்துள்ளார்.ஒரு அறிவார்ந்த நபரின் நல்ல நோக்கங்கள் பல நூற்றாண்டுகள் ஊறிப்போன நலன்களையும், சுயநலத்தன்மைகளையும் மாற்றிவிட முடியும் என்று நம்புவது வெகுளித்தனமானது.வெறும் தலையை மட்டும் மாற்றிவிட்டால் அமெரிக்கா மேலும் சகிப்புத் தன்மையுடனும், போர்களை அறவே விட்டுவிடும் என்றும் பலர் கூறிவருகின்றனர். ஆனால் எந்தவித மற்றமும் ஏற்படாது.மெக்கெய்னை விட ஒபாமா புத்திகூர்மையுள்ளவர் என்றும், போர் வெறியர் கிடையாது என்றும் குறிப்பிட்டிருந்ததோடு, அமெரிக்க வெள்ளை நிறவெறி ஆதிக்கம் அவரை வெள்ளை மாளிகைக்குச் செல்வதிலிருந்து தடுக்கும் என மற்றொரு கட்டுரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment