Kadhai Alla Nijam

Tuesday, September 8, 2009

ராகுல் காந்தி வருகையை கண்டித்து விழுப்புரத்தில் தமிழ் அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழீழ மண்ணில் சிங்கள இனவாத அரசின் செயலை நியாப்படுத்தும் காங்கிரஸ் கட்சியையும் தமிழகத்திற்க்குவருகை தரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கண்டித்து விழுப்புரத்தில் அனைத்து தமிழ் அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் மாவட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் விழுப்பரையனார் தலைமை தாங்கினார் மார்ச்சிய பெரியாரிய பொது உடமைக் கட்சியை சார்ந்த ஆறுமுகம் பெரியார் திராவிடக் கழகத்தை சேர்ந்த கணேசன் தமிழிலைஞர் கூட்டமைப்பை சார்ந்த பாபு ஆகயோஉர் முன்னிலை வகுத்தனர் தமிழியக்கம் எழில். இளங்கோ பெரியார் திராவிடக் கழகத்தை சேர்ந்த அய்யனார் ,வழக்கறிஞர் லூஸி,வழக்கறிஞர் காளிதாஸ்தமிழர் கழகம்ஏழுமலை தமிழிலைஞர் கூட்டமைப்பை சார்ந்த லலித்குமார் ,சதக்கத்துல்லா ,ஈழ ஆதரவாளர் குழு கணேசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலானோர் பிரபாகரன் பனியனுடன் பங்கு பெற்றனர்


செய்திளார் ;ஜோதி நரசிம்மன்

No comments: