Kadhai Alla Nijam

Tuesday, April 29, 2008

புரட்சிக்கவியே நீ மீண்டும் வரவேண்டும்!
தமிழ்த்தெருவில்
தமிழ்தான் இல்லை,
கவலை கொண்டாய் -நீ
இப்போது
தமிழன் தெருவே
தமிழனிடம் இல்லை-அதனால்
புரட்சிக்கவியே
நீ மீண்டும் வரவேண்டும்.

தெருதான்
இப்படி என்றால்
தமிழ் திரைப்படம்
தமிஸ்கிருதமாய் இருந்து
தமிங்கிலிஷாய் மாறி
இப்போது
ஆங்கிலத்தில்
“தோட்டாவாய்”
துளைக்கிறது இதயத்தை
ஆங்கிலேயன்
திரைப்படத்திற்கு
தமிழில் பெயர் வைக்கிறான்
“மரும மனிதர்கள்”
எனவே
புரட்சிக்கவியே நீ மீண்டும் வரவேண்டும்.

புரட்சிக்கவிஞரே!
வெள்ளித்திரைதான்
இப்படி என்றால்
சின்னத்திரை இப்போது
சின்னாபின்னமாக்கி கொண்டிருக்கிறது
நீ
விட்டுச்சென்ற
தமிழினத்தை,
அரட்டை அரங்கங்களும்
அறை நிர்வாண ஆடை நடனங்களும்
மானாடியும் மயிலாடியும்
அய்யோ!
எந்த இனத்திற்கும்
இல்லாத கலாச்சாரத்தை
கொண்ட தமிழினம்
இப்போது
எந்த கலாச்சாரத்தை
நோக்கி செல்லுகிறதென்றே
தெரியவில்லை-ஆதலால்
புரட்சிக்கவியே நீ மீண்டும் வரவேண்டும்.

No comments: