Kadhai Alla Nijam

Saturday, November 8, 2008

ஈழத் தமிழர் துயரம் துடைக்கச் சட்டமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் - பழ.நெடுமாறன்


ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் தமிழக சட்டமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவு செய்துள்ளது. இது தொடர்பில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். இலங்கை அரசுக்கு இந்திய அரசு இராணுவ ரீதியான எத்தகைய உதவியையும் வழங்கக் கூடாது என்ற இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தும் வகையில் 12/11/2008 புதன்கிழமையன்று தமிழக சட்டமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.

12/11/2008 அன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணாசாலை சிம்ப்சன் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு சட்டமன்றம் நோக்கிச் சென்று கோட்டைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப் பெறும்.

No comments: