
இவ்வாறு ஒரு மனிதன் உருவாவது கடவுளின் விருப்பம். எமது தந்தை இரக்க குணமுள்ளவர், மென்மையாக கதைப்பவர். எனது சகோதரன் அதிகம் வாசிப்பார் வீடு நிறைய புத்தகங்கள் காணப்படும். சிறுகுழந்தையாக இருக்கும் போது அவருடன் நான் விளையாடினேன். சண்டை பிடித்தேன். அவர் சாதாரண சிறுவன் போல் தான் அப்போது காணப்பட்டார் என குடும்பத்தில் மூன்றாவதாக பிறந்த விநோதினி தெரிவித்தார். விநோதினி தனது கணவருடன் கனடாவிற்கு புலம் பெயர்ந்த பின் கிளிநொச்சியிலுள்ள பெற்றோருடன் தொடர்புகள் இருந்தன. எனினும் தனது இளைய சகோதரரான பிரபாகரனுடன் தொடர்புகள் இருக்கவில்லை. அவர் தொடர்பான செய்திகள் அறிவதாகவும் அவர் தெரிவித்தார். தமிழர்களின் சுதந்திரத்திற்கான போரிலிருந்து பிரபாகரன் விலக மாட்டார் என தான் நம்புவதாகவும், அவர் எதனையும் ஆரம்பித்தால் முடிக்காது விடமாட்டார். எமது அப்பாவும் அப்படித்தான் என வேலுப்பிள்ளை பிரபாகரனின் சகோதரி திருமதி. விநோதினி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment