Kadhai Alla Nijam

Saturday, December 20, 2008

பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
திரைப்பட இயக்குநர் சீமான் அவர்களின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை காங்கிரசை சேர்ந்தச் சிலர் கொளுத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஜனநாயக வழிமுறைகளில் நம்பிக்கையில்லாமல் பாசிச வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட காங்கிரஸ்காரர்களைக் கைது செய்யாமல் சீமான், கொளத்தூர் மணி, பெ. மணியரசன் ஆகியோரை கைது செய்துள்ள தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சீமானைக் கைது செய்ய வேண்டுமென வெளியிட்ட அறிக்கைக்குப் பணிந்து தமிழக அரசு செயல்பட்டு இருக்கிறது. மூவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன் காரைக் கொளுத்திய காங்கிரஸ்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்துகிறேன்.

No comments: