Kadhai Alla Nijam

Friday, May 8, 2009

தமிழக வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்

உலகத் தமிழரிடமிருந்து தமிழக வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

பேரன்புடையீர் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்த ஈழத்தின் வன்னித்தமிழ் மக்களின் வாழ்வியலை முழுமையாகச் சிதைத்து சின்னாபின்னப்படுத்திமிகப்பெரிய மனித அவலத்தில் அவர்களை பலவந்தமாகத்தள்ளியதில் திருமதி சோனியாகாந்தி அம்மையாரின் தலைமையிலான காங்கிரசுக் கட்சிக்கு பெரும் பங்குண்டு.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற வாசகத்ததைப் பயன் படுத்தி முழுத்தமிழினத்தையே அழிக்க திருமதி சோனியாகாந்தி அம்மையார் எடுத்த முடிவு சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான ஓர் இனப்படுகொலையென்பதை சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிக்கவும் போதிய சந்தர்ப்பம் உண்டு. உலகிலுள்ள 9 கோடித் தமிழ்மக்களும் விடுத்த அனைத்து வேண்டுகோள்களையும்நிராகரித்த காங்கிரசுக் கட்சி தொடச்சியாக ஈழத்தமிழினத்தை கொலைசெய்யும் சிறிலங்கா அரசுக்கு பக்கபலமாக நிற்பது தவறு என்பதைச் சுட்டிக்காட்ட தமிழக வாக்காளர்களுக்கு அரியசந்தர்ப்பமாக மே 13ம்திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தல் வாய்த்துள்ளது.
தமிழின உணர்வாளர்களே காங்கிரசுக்கட்சிக்கு நீங்கள் வாக்களிக்காமல் விடுவதன்மூலம் திருமதி சோனியாகாந்தி அம்மையாரின் முடிவு தவறானது என்பதைப் புரியவைக்க முடியும். தமிழ் நாட்டிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு காங்கிரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர்கூட இம்முறைதேர்ந்தெடுக்கப்படக்கூடாதென்பதே உலகத்தமிழனித்தின் வேண்டுகோளாகும்.

1 comment:

Kumar said...

Sure...no congress man (jaalras) will go from TN this time