Kadhai Alla Nijam
Tuesday, May 19, 2009
மகன் என்றசொல்லுக்கு சார்லஸ் ஆண்டனி என்றுபெயர்
பணத்தை காட்டி
தமிழினத்தின்
”வாக்கை”
பெற்றுவிட்டீர்-இப்போது
தமிழனின்
பிணத்தை காட்டி
”மந்தி”ரி பதவியும்
பெற்றுவிட்டீர்
கொத்துக்கொத்தாய்
தமிழன்
செத்தான்
தந்தி அடித்தீர்களே!
தன் மகனுக்கு
”மந்தி”ரிபதவி
என்றதும்
தனி_விமானத்தில்
பறக்கின்றீர்களே!
ஓ
வித்தககவிஞர்களே!
கவிமாமணிகளே!
வாலிகளே!
போலிகளே!
எம்
இனம்
அழிந்துபோகிறதே,
எம்
இனத்தின்
அழுகுரல்
உங்களின் துருபிடித்த
பேனாவை
இயக்கவில்லையா?
நிர்வாண
நடனங்களுக்கு
பாட்டெழுதி
பாட்டெழுதி
“மை”தீர்ந்துவிட்டதா?
உண்”மை”
எழுத-இயலவில்லையா?
எம்-இனம்கூட
எப்போது
நிர்வானமாய்தான்
பிணமாய் கிடக்கிறது
எழுதவில்லையா?
ஓ
நீங்கள்
கூலிக்கு
மாரடிப்பவர்கள்தானே!
தமிழினத்தலைவரே!
தமிழ்”ஆய்ந்த”
தலைவரே!
வரலாற்றில்
இடம் பெற்றுவிட்டீர்
இனி
உங்களை ”தவிற்க்க”
இயலாது
தமிழினத்திற்க்கு
யார்?யாரெல்லாம்
துரோகம்
செய்தார்களோ
அந்தவரலாற்றில்
முதல்பக்கம்
உங்களுக்குதான்,
இவன்
ஆட்சியில்
தமிழன்
என்னவானான்
என்பதுதான்
வரலாறு,
எங்கள்
கவலையெல்லாம்
எதிர்காள
தலைமுறை
எங்களையும்
காரி_உமிழும்
இப்படிப்பட்டவன்
ஆட்சியில்
உயிரோடிருந்ததற்கு
மகன்
என்ற சொல்லுக்கு
இனி
”சார்லஸ் ஆண்டனி”
என்றுதான் பெயர்
அழகிரி
அவமானத்தின் பெயர்
தமிழினம் உணரும்
தோழமையுடன் -பா.ஜோதி நரசிம்மன்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சகோதரா,
அவர்களை மறந்துவிடு.அவர்கள் மனசாட்சியையே
அடமானம் வைத்தவர்கள்.
அதிகாரத்தில் இருந்தபோதும்,தமிழினத்தையே அழிக்க துணை போனவர்கள்,அகதி
ஆக்கியவர்கள் அவர்கள்.
இனி விழிப்புனர்வை வேகமாக்குவோம்..இல்லையெனில்
தமிழினத்தையே "காசுக்காக" விற்றுவிடுவார்கள்.
KARUNA in srilanka = KARUNANIDHNI in tamilnadu
அது எப்படி நல்லவனுக்கு எல்லாம் சாவு நேரத்தோட வருதே ....
Post a Comment