ராஜபக்சேயின் புரோக்கர் - ‘இந்து’ ராம்
‘இந்து’ நாளேட்டின் ஆசிரியரான பார்ப்பன ராம், சீனாவுக்கும் இலங்கைக்கும் தரகராக’ செயல்பட்டுவரும்நபர். ஈழத் தமிழர் மீது ஜெயவர்த்தனா நடத்திய இனப் படுகொலைகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன்போன்ற நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் வெளியிட்டு வரும் கருத்துகளை தனதுஏட்டில் முழுமையாக இருட்டடித்து விடுவார் ‘இந்து’ ராம்! அண்மையில் லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிவரும் ‘சேனல்-4’ தொலைக்காட்சி ஈழத்தின் ‘கொலைக் களங்கள்’ பற்றி வெளியிட்ட அதிர்ச்சியூட்டும்காட்சிகள் உலகத்தின் மனசாட்சியையே உலுக்கி விட்டுள்ளது. ஆனாலும் அப்படி ‘சேனல்-4’ஒளிபரப்பிய கொலைக்கள காட்சி பற்றிய செய்தியை ராம் பார்ப்பான், இருட்டடித்து விட்டார்.இவ்வளவுக் கும் பிறகு ராஜபக்சே மீது உலக அளவில் உருவாகி வரும் எதிர்ப்புகளிலிருந்து பாது காத்து,அவரை கதாநாயகனாக்கிக் காட்டும் முயற்சியில் ‘இந்து’ ராம் இறங்கி யுள்ளார். அவசர அவசரமாககொழும்புக்குப் பறந்து போய் ராஜபக்சேவை நேரில் சந்தித்து அவரது விசேட பேட்டியை வாங்கி, கடந்தஜூலை 23 ஆம் தேதி தனது ஏட்டின் முதல் பக்கத்திலேயே தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளார்.ராஜபக்சே சிரித்துக் கொண்டு காட்சியளிக்கும் பெரிய படத்துடன் தன்னுடைய பெயரிலேயே - ராம்,அந்தப் பேட்டியை வெளியிட்டுள்ளார். ராஜபக்சே தமிழர் பிரச்சினை களுக்கு அரசியல் தீர்வுகளைஉருவாக்கி வருவதாக அந்த பேட்டி கூறுகிறது. ஈழத் தமிழர்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி,தலையில் சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்லும் காட்சிகளை ‘சேனல் 4’ தொலைக்காட்சி ஒளிபரப்பியதுகுறித்தும் ராஜபக்சேவிடம் ‘ராம்’ விளக்கம் கேட்டு வெளியிட்டுள்ளார்.
அய்.நா.வின் ஆவணங்களை சரிபார்க்கும் சிறப்புப் பிரிவின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, அதுஉண்மையான படம் தான் என்று சான்றளிக்கப்பட்ட அந்தக் காட்சிகளை டப்ளின் தீர்ப்பாயம் அங்கீகரித்தஅந்த காட்சிகளை, பொய்யான படம் என்று ராஜபக்சே கூறுகிறார். அந்தப் படத்தில் துப்பாக்கியால்சுடுவது விடுதலைப்புலிகள் என்றும், நிர்வாணமாக்கி சுட்டுக் கொல்லப்படுவது சிங்கள ராணுவத்தினர்என்றும் ராஜபக்சே கேவலமாக ‘புளுகுவதை’ மான வெட்க மின்றி ‘பத்திரிகை தர்மம்’ பேசும், ‘இந்து’ ராம்வெளியிட்டுள்ளார். ராஜபக்சேயும் அவரது ‘தாசர்’ இந்து ராமும் கூறும் பொய்யை சிங்களர்கள்கூடநம்பத் தயாராக இல்லை.
இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகாவே ‘இந்து’ ராமின் பார்ப்பன பொய்க்கு ‘செருப்படி’தந்திருக்கிறார். மறைந்த முன்னாள் நீதிபதி ஆனந்த பால கிருஷ்ணரின் நினைவுப் பேருரையைசந்திரிகா கொழும்பில் ஆற்றியபோது, ‘இலங்கையின் கொலைக்களம்’ வீடியோ காட்சி பற்றிக்கூறுகையில் கண் கலங்கி யிருக்கிறார். “இந்த வீடியோ காட்சியை பிரிட்டன் தொலைக்காட்சியில்பார்த்த எனது 28 வயதான மகன், ‘நான் சிங்களவன் என்று கூறுவதற்கே வெட்கப்படுகிறேன், அம்மா’என்று என்னிடம் அழுதுக் கொண்டே கூறினான். என்னுடய மகளும் அவ்வாறே கூறினாள்” என்று கூறியசந்திரிகா, அந்தக் கூட்டத்தில் கண்கலங்கி, நாதழுதழுத்து, சற்று நேரம் பேச முடியாமல்அமைதியாகிவிட்டார் - என்று ஏடுகளில் செய்திகள் (ஜூலை 25) வெளிவந்துள்ளன.
‘பத்திரிகை தர்மம்’ பேசுகிற பார்ப்பனர் ராம், வழக்கம்போல் இந்த செய்தியை யும், தனது ஏட்டில்இருட்டடிப்பு செய்து விட்டார். உலகம் முழுதும் இனப்படு கொலைக்கும், இனவெறிக்கும் இராணுவஅடக்குமுறைக்கும் எதிராக எழுதி - ஏதோ, மனித உரிமைக் காவலன் போல் - இடதுசாரி முகமூடிபோட்டுக் கொள்ளும், இந்தப் பார்ப்பனருக்கு ஈழத் தமிழன் என்றால், விடுதலைப்புலிகள இயக்கம்என்றால் ‘பூணூல்’, ‘பஞ்ச கச்ச’ உணர்வுகள் வெளியே கிழித்துக் கொண்டு வந்து நிற்கின்றன; அவ்வளவுபார்ப்பனத் திமிர்!
1 comment:
கேடு கெட்ட பார்ப்பன திமிர்.இந்த பிழைப்புக்கு நாக்கை பிடுங்கி கொண்டு சாகலாம்.ரொம்ப நல்ல இருக்கு ஜோதி சார்.வாழ்துக்கள்,தொடர்ந்து எழுதுங்கள்...
Post a Comment