Kadhai Alla Nijam

Friday, November 15, 2013

பெயரில் என்ன இருக்கு 2
பெயர் என்பது ஒருவருக்கு மிக முக்கிய அடையாளம்,அழைப்பதற்க்கா இருக்க கூடிய பெயர்கள் நாண்கு ,ஆறு எழுத்துக்களில் இருந்தால் நன்றாக இருக்கும் குறிப்பாக பெயர்கள் அவரவர் தாய்மொழியில் இருப்பது தான் சிறந்தது.உதாரணத்திற்க்கு என் பெயர் ஜோதி நரசிம்மன்.இதில் என்னை அதிகம் பேர் அழைப்பது ஜோதி என்றுதான். நரசிம்மனுடன் சேர்ந்து நான் பயனிப்பது ஆவணங்களில் மட்டும் தான்.சரி நீங்கள் வைத்திருக்கும் பெயர் தமிழ் இல்லையே? என கேட்கலாம் ஆமாம் தமிழ் இல்லை.அது என் பெற்றோர் வைத்தபெயர் .அப்படியானல் தற்போது நீங்கள் தமிழில் பெயரை மாற்றியிருக்கலாமே எனவும் கேட்கலாம்.மாற்றியிருக்கலாம்,ஏன் மாற்றவில்லையென்றால் இப்படி ஒரு சமஸ்கிருத பெயரை தாங்கி நான் வாழ்வது இனியாரும் சமஸ்கிருதத்தில் பெயர் வைக்காதீர்கள்,அதுவும் இவ்வளவு நீளமான பெயரை வைக்காதீர்கள் என்பதற்காகத்தான்.அப்படியானால் பெயர்வைப்பதில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பது அனைவரின் கேள்வியாக இருக்கும்.நான் என் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைத்துள்ளேன் எனது மகள் பெயர் "தமிழினி" எனது மகனின் பெயர் "எழிலன்"இது போன்று அழைப்பதற்க்கு எளிமையான குறைந்த எழுத்து எண்ணிக்கையில் பெயர் வைப்பதே சிறந்தது.
மீண்டும் சந்திப்போம்        தோழமையுடன்   ஜோதி நரசிம்மன்
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் முகநூலில் அதிக தவல்களை பகிர்வது சிரமமாக உள்ளது எனவே பெயரில் என்ன இருக்கு படிக்க வேண்டியவர்கள் எனது thamizhini76.blogspot.com என்ற இணையத்தில் படிக்கலாம் நன்றி

No comments: