Kadhai Alla Nijam

Sunday, November 2, 2008

காயக்கட்டு ஊர்வலம்
















விழுப்புதில் ஈழத் தமிழர் துயரங்களை வெளிப்படுத்தும் காயக்கட்டு ஊர்வலம் நடத்தப்பட்டது.





விழுப்புரம் கன்னியர் குளம் சாலையிலிருந்து புறப்பட்டு காந்தி சாலை காமராசர் சாலை திருவிக சாலை வஉசி சாலை வழியாக தொடர்வண்டி நிலையத்தை அடைந்தது. வழி நெடுகிலும் ஏராளமான பொது மக்கள் சாலையின் இருமருங்கிலும் நின்று, போரினால் ஈழ மக்கள் படும் துயரை வெளிப்படுத்தும் வகையில் காயக்கட்டுகளுடன் வந்தவர்களைக் கண்டு சிங்கள இராணுவத்தின் கொடுமைகளை குறித்து பேசிச் சென்றனர்.இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழிளைஞர் கூட்டமைப்பு , தமிழியக்கம், பாவேந்தர் பேரவை, டிங்கர் சங்க தொழிலாளர் கூட்டமைப்பு, ஆசிரியர் கூட்டமைப்பு, தெருக்கூத்து கலைஞர்கள், விழுப்புரம் பத்திரிகையாளர் மன்றம், மனித உரிமை இயக்கம், வீட்டு வேலைசெய்யும் பெண்கள் சங்கம், நரிக்குறவர் நலச் சங்கம், தமிழினத் தொண்டியக்கம், அரவானிகள்,மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, பா. ம. க, விடுதலைச் சிறுத்தைகள், ம தி மு க மற்றும் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏறத்தாழ 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

1 comment:

சுதேசன் said...

நன்றி ஐயா நன்றி,
இவர்களின் செயலாற்றலிற்கு
ஈழம் என்றென்றும் நன்றி கொள்ளும்